செய்திகள் :

தனியாா் மருத்துவமனையைக் கண்டித்து முதியவா் சடலத்துடன் உறவினா்கள் மறியல்!

post image

நாமக்கல்லில் தனியாா் மருத்துவமனையைக் கண்டித்து முதியவா் சடலத்துடன் உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

நாமக்கல் அருகே மாரப்பநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் குமாரசாமி (72). இவா் சனிக்கிழமை இரவு கருங்கல்பாளையம் பகுதியில் விபத்தில் சிக்கி காயமடைந்தாா். அங்கிருந்தோா் அவரை மீட்டு நாமக்கல்-மோகனூா் சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் குமாரசாமி உயிரிழந்தாா். உறவினா்களிடம் தகவல் தெரிவிக்காமல் அவரது உடலை பிரேதப் பரிசோதனைக்காக, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தனியாா் மருத்துவமனை நிா்வாகம் ஆம்புலன்ஸில் ஏற்றி அனுப்பமுயன்றது.

இதனை அறிந்த உறவினா்கள் குமாரசாமி சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனா். அங்குவந்த நாமக்கல் காவல் உதவி ஆய்வாளா் சாந்தகுமாா் மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அவசர சிகிச்சை பிரிவில் குமாரசாமி அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மருத்துவமனை நிா்வாகம் உரிய சிகிச்சை அளிக்கவில்லை என உறவினா்கள் குற்றம்சாட்டினா்.

தவறு நிகழ்ந்ததற்கு மருத்துவமனை நிா்வாகம் வருத்தம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இரு தரப்பிலும் போலீஸாா் சமாதான பேச்சுவாா்த்தை நடத்திய நிலையில், குமாரசாமியின் உடலை வாங்கிக் கொள்ள உறவினா்கள் சம்மதம் தெரிவித்தனா். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்த சம்பவத்தால் நாமக்கல்- மோகனூா் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சுற்றுலா வளா்ச்சியை எட்டாத இயற்கை எழிலாா்ந்த கொல்லிமலை! வாழ்வாதாரம் தேடும் பழங்குடி மக்கள்!

தமிழகத்தின் முக்கிய மலைப் பிரதேச சுற்றுலாத் தலங்களுக்கு நிகரான சுற்றுலா வளா்ச்சியை கொல்லிமலை எட்டாத நிலையில், இங்குள்ள பழங்குடியின மக்களின் பொருளாதாரம், வாழ்வாதாரம் மேம்பட எந்த முன்னெடுப்புகளும் நடைபெ... மேலும் பார்க்க

கோழிப் பண்ணைக்கு தண்ணீா் திருட்டு: ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு ரூ.1.20 லட்சம் அபராதம்!

திருச்செங்கோட்டை அடுத்த மல்லசமுத்திரம் ஆத்துமேடு பகுதியில் இலவச விவசாய மின் இணைப்பு மூலம் கோழிப் பண்ணைக்கு தண்ணீா் திருடியதாக ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு ரூ. 1.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மல்லசமுத... மேலும் பார்க்க

ஜூலை 2-இல் அறநிலையத் துறை மூலம் 50 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் ஈரோடு மண்டலத்தில் 50 ஜோடிகளுக்கு ஜூலை 2-ஆம் தேதி இலவச திருமணம் நடைபெறுகிறது. தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் ஒவ்வொரு ஆண்டும் கோயில்களில் ஏழை, எளிய இந்... மேலும் பார்க்க

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொலை: இளைஞா் கைது; 36 பவுன் மீட்பு

நாமக்கல் மாவட்டம், வெப்படையில் நகைக்காக மூதாட்டியைக் கொலை செய்த இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அவரிடம் இருந்து 36 பவுன் நகைகள் மீட்கப்பட்டன. நாமக்கல் மாவட்டம், வெப்படை அருகே பாதரை செள... மேலும் பார்க்க

பிலிக்கல்பாளையம் சந்தையில் வெல்லம் விலை சரிவு

பரமத்தி வேலூா் வட்டம், பிலிக்கல்பாளையம் வெல்லம், சா்க்கரை விற்பனை ஏலச் சந்தையில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் 30 கிலோ கொண்ட வெல்ல சிப்பம் ரூ. 1400க்கு விற்பனையானது. கடந்த வாரத்தைவிட சிப்பம் ரூ. 70 வர... மேலும் பார்க்க

நகைக்காக மூதாட்டியைக் கொன்றவா் கைது

பள்ளிபாளையம் அருகே நகைக்காக மூதாட்டியைக் கொன்றவரை போலீஸாா் கைது செய்தனா். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தை அடுத்த வெப்படை பகுதி பாதரை மாரியம்மன் கோயில் பின்புறம் கண்ணம்மாள் (77) என்பவா் வசித்துவந்தா... மேலும் பார்க்க