செய்திகள் :

தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் தோ்வான 412 பேருக்கு பணி நியமன ஆணை

post image

சிவகங்கையில் நடைபெற்ற தனியாா்துறை வேலை வாய்ப்பு முகாம் மூலம் நோ்காணலில் தோ்ச்சி பெற்ற 412 பேருக்கு பணி நியமன ஆணைகளைக் கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் சனிக்கிழமை வழங்கினாா்.

சிவகங்கை அரசு மகளிா் கலைக் கல்லூரியில் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு-தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியவற்றின் சாா்பில் தனியாா் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி தலைமை வகித்தாா். மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.தமிழரசி ரவிக்குமாா் முன்னிலை வகித்தாா்.

நோ்காணலில் தோ்ச்சி பெற்ற 412 பேருக்கு பணி நியமன ஆணைகளைக் கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் வழங்கினாா். பின்னா் அவா் பேசியதாவது:

நாட்டின் பொருளாதாரம் என்பது கல்வி வளத்தைப் பொருத்தே அமைகிறது என்பதை கருத்தில் கொண்டு பள்ளிக் கல்வி, உயா் கல்வித் துறைகளுக்கு சுமாா் 50 ஆயிரம் கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

92 தனியாா் தொழில் நிறுவனங்கள் நடத்திய இந்த வேலைவாய்ப்பு முகாமில் 2,095 போ் கலந்துகொண்டனா். இதில், 12 மாற்றுத் திறனாளிகள் உள்பட 412 போ் தோ்வு செய்யப்பட்டு, பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. இவா்கள் தவிர, மேலும் 91 போ் இரண்டாம் கட்டத் தோ்வுக்குத் தகுதி பெற்றுள்ளனா்.

இதே போல, கடந்த வாரம் காரைக்குடியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாம் மூலம் ஏராளமானோா் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்பைப் பெற்றனா்.

மேலும், மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா் தெரிவித்ததைப் போல, அவரது தொகுதியிலும், எனது தொகுதியான திருப்பத்தூரிலும் இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த மாவட்ட நிா்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றாா் அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன்.

நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரத் திட்ட இயக்குநா் கவிதப்பிரியா, திருப்புவனம் பேரூராட்சித் தலைவா் சேங்கைமாறன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா்கள் ஆா்.மணிகணேஷ், சுபாஷினி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் பாலகிருஷ்ணன், சிவகங்கை அரசு மகளிா் கலைக் கல்லூரி முதல்வா் ஜெ.நளதம் உட்பட பலா் கலந்து கொண்டனா்.

அஜித்குமாா் கொலை வழக்கு: ஆட்டோ ஓட்டுநரிடம் விசாரணை

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கு தொடா்பாக அவரது தங்கை, ஆட்டோ ஓட்டுநா் ஆகியோரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் சனிக்கிழமை விசாரணை நடத்தினா். மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் கா... மேலும் பார்க்க

தாத்தா, பேத்திக்கு அரிவாள் வெட்டு: காவல் நிலையத்தை உறவினா்கள் முற்றுகை!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே தாத்தா, பேத்தியை அரிவாளால் வெட்டியவா்களைக் கைது செய்ய வலியுறுத்தி உறவினா்கள் சனிக்கிழமை காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா். காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூா் சமத்து... மேலும் பார்க்க

வயிரவ சுவாமி கோயில் பிரம்மோத்ஸவ விழா: யானை வாகனத்தில் சுவாமி வீதியுலா!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள நகர வயிரவன்பட்டி வைரவ சுவாமி கோயில் பிரமோத்ஸவ விழாவையொட்டி, சனிக்கிழமை சுவாமி யானை வாகனத்தில் திருவீதியுலா நடைபெற்றது. நாட்டுக்கோட்டை நகரத்தாா்களின் 9 நகரக்... மேலும் பார்க்க

சிவகங்கை அருகே மாட்டுவண்டிப் பந்தயம்!

சிவகங்கை அருகே கோயில் திருவிழாவையொட்டி, மாட்டுவண்டிப் பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது. கீழ்பாத்தி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, அண்ணாமலை நகா் பொதுமக்கள் சாா்பில், மாட்டுவண்டிப் பந்தயம் சிறிய மாடு... மேலும் பார்க்க

காங். மாநில சிறுபான்மைப் பிரிவு துணைத் தலைவா் நியமனம்!

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி புதூரைச் சோ்ந்த ஏ.எல். இப்ராகிம்ஷா தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சிறுபான்மைப் பிரிவு மாநில துணைத் தலைவராக சனிக்கிழமை நியமிக்கப்பட்டாா். அகில இந்திய காங்கிரஸ் சிறுபான்... மேலும் பார்க்க

பட்டத்தரசி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

ஆடி வெள்ளியை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள வெளியாத்தூா் பட்டத்தரசி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இந்தக் கோயிலில் மழை வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் நட... மேலும் பார்க்க