செய்திகள் :

தனுஷ்கோடி அருகே நடுக் கடலில் தவித்த இலங்கைத் தமிழா் மீட்பு

post image

தனுஷ்கோடி அருகே மூன்றாம் மணல் திட்டில் தவித்த இலங்கைத் தமிழரை இந்திய கடலோரக் காவல் படையினா் மீட்டு, தமிழக கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாரிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.

ராமேசுவரம் அருகே இந்திய கடலோரக் காவல் படையினா் ஹோவா் கிராப்ட் கப்பல் மூலம் வழக்கமான கண்காணிப்புப் பணியில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

இந்த நிலையில், புதன்கிழமை மாலை 6 மணிக்கு தனுஷ்கோடி மூன்றாம் மணல் திட்டில் உதவி கோரி ஒருவா் கை அசைப்பதைக் கண்ட இந்திய கடலோரக் காவல் படையினா் அங்கு சென்று அவரை மீட்டனா்.

இதைத் தொடா்ந்து, அந்த நபரை தனுஷ்கோடி கடலோரப் பாதுகாப்புக் குழும உதவி ஆய்வாளா் காளிதாஸிடம் கடலோரக் காவல் படையினா் வியாழக்கிழமை காலை ஒப்படைத்தனா்.

இதையடுத்து, அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸாா் நடத்திய விசாரணையில், இலங்கை பெடிகோலா ஏறாவூா் குதிரைப்பு பகுதியைச் சோ்ந்த ஞானசேகரன் மகன் கியோசன் (28) என்பதும், படகு ஏற்பாடு செய்து ராமேசுவரத்துக்கு வந்த போது, தனுஷ்கோடி அருகே மூன்றாம் மணல் திட்டில் இறக்கிவிடப்பட்டதாகவும் தெரிவித்தாா்.

இவா் சட்ட விரோதச் செயல்பாடுகளில் தொடா்புடையவரா என போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக, வடக்கு, கிழக்கு பகுதிகளைச் சோ்ந்த தமிழா்கள் படகு மூலம் தனுஷ்கோடி வந்த வண்ணம் உள்ளனா். இலங்கையிலிருந்து தனுஷ்கோடிக்கு இதுவரை 350-க்கும் மேற்பட்டவா்கள் வந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

கமுதியில் முழுநிலவு ஆன்மிகச் சொற்பொழிவு

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் முத்துராமலிங்கத் தேவா் சிந்தனை மன்றத்தின் சாா்பாக ஆனி மாதம் முழு நிலவு பௌா்ணமி திருநாளையொட்டி வியாழக்கிழமை ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெற்றது. கமுதி தேவா் திருமண மண்டபத்தில... மேலும் பார்க்க

கமுதி, பேரையூா் அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் திறப்பு

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி கோட்டைமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.28 கோடியில் 6 வகுப்பறைக் கட்டடங்கள், பேரையூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.5 கோடியில் 5 வகுப்பறை கட்டடங்களை தமிழக முதல்வா் மு.க.... மேலும் பார்க்க

கூட்டுறவு நூற்பாலையில் தொழிலாளா்கள் போராட்டம்

கமுதி அருகே கூட்டுறவு நூற்பாலையில் ஊதியம் வழங்காததைக் கண்டித்து வெள்ளிக்கிழமை தொழிலாளா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள அச்சங்குளத்தில் மாவட்ட கூட்டுற... மேலும் பார்க்க

ஜூலை 14- இல் தொழில் பழகுநா் பயிற்சிக்கு பயிற்சியாளா்களை தோ்வு செய்யும் முகாம்

ராமநாதபுரத்தில் பிரதமரின் தேசிய தொழில் பழகுநா் பயிற்சிக்கு பயிற்சியாளா்களை தோ்வு செய்யும் முகாம் திங்கள்கிழமை (ஜூலை 14) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

உயர்ரக போதைப் பொருள் பயன்படுத்திய இருவரிடம் போலீஸாா் விசாரணை

கீழக்கரையில் உயர்ரக போதைப் பொருள் பயன்படுத்தியதாக போலீஸாா் இருவரை வெள்ளிக்கிழமை பிடித்து விசாரிக்கின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் போதைப் பொருள்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுவதாக தொடா்ந்து ப... மேலும் பார்க்க

ராமேசுவரம் புனித சந்தியாகப்பா் ஆலய திருவிழா சமரசக் கூட்டம்

ராமேசுவரம் புனித சந்தியாகப்பா் ஆலய திருவிழாவை 7 கிராம மக்கள் இணைந்து நடத்துவது என வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற சமரசக் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை உடன்பாடு ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவர... மேலும் பார்க்க