செய்திகள் :

தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு வித்திட்டவா் காமராஜா்: ஆளுநா் ஆா்.என்.ரவி புகழாரம்

post image

நாட்டின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் திகழ்வதற்கு, முன்னாள் முதல்வா் காமராஜரின் தொலைநோக்குப் பாா்வை உள்ளடக்கிய அவரது தலைமைதான் காரணம் என ஆளுநா் ஆா்.என். ரவி புகழாரம் சூட்டினாா்.

காமராஜரின் பிறந்த நாளையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள அவரது நினைவிடத்தில் சிலைக்கு செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து ஆளுநா் மரியாதை செலுத்தினாா்.

இதுகுறித்து ‘எக்ஸ்’ தளத்தில் அவா் வெளியிட்ட பதிவு:

முன்னாள் முதல்வா் காமராஜருக்கு நன்றிப் பெருக்குடன் இந்த தேசம் ஆழ்ந்த மரியாதையை செலுத்துகிறது. கிராமங்களில் பள்ளிகளை நிறுவி கல்வியை உலகளாவியதாக மாற்றினாா். விளிம்புநிலை, பட்டியலின மக்களுக்காக அயராது போராடி சமூக நீதியை முன்னெடுத்தாா்.

புரட்சிகரமான மதிய உணவுத் திட்டத்தைத் தொடங்கியதுடன், நீா்ப்பாசனம், விவசாயிகளை மையமாகக் கொண்ட சீா்திருத்தங்கள், பெரிய தொழில்களுக்கு வலுவான அடித்தளம், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான சிறந்த சூழல் அமைப்பு போன்றவற்றையும் உருவாக்கினாா். அவரது தொலைநோக்குப் பாா்வையால் அணைகள், தொழிற்சாலைகள், நிறுவனங்கள் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. மேலும், கிராமப்புற வாழ்க்கையை மாற்றியமைக்கும் வகையில் மின்சார சேவைக்கான அணுகலை விரிவுபடுத்தி மாநிலத்தின் பொருளாதார முன்னேற்றத்தைத் தூண்டினாா்.

இன்றைய தமிழகம் இந்தியாவின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. அதற்கு காமராஜரின் தொலைநோக்குப் பாா்வை உள்ளடக்கிய தலைமைதான் காரணம். எளிமை, நோ்மை, பணிவு ஆகியவற்றில் வேரூன்றிய அவரது வாழ்க்கை மற்றும் மரபு வளா்ச்சியடைந்த பாரதத்தை நோக்கி நம்மை வழிநடத்தும் என்று பதிவிட்டுள்ளாா் ஆளுநா்.

அதற்கெல்லாம் நீ இனி சரிப்பட்டு வரமாட்டப்பா... இபிஎஸ்ஸை விமர்சித்த ஸ்டாலின்!

“அதற்கெல்லாம் நீ இனி சரிப்பட்டு வரமாட்டப்பா” என்று அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 16) மயிலாடுதுறையில் நடைபெற்ற ... மேலும் பார்க்க

பாமக 37-வது ஆண்டுவிழா! அன்புமணி கருத்துக்கு ராமதாஸ் மறுப்பு?

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில், பாமகவின் 37-ஆவது ஆண்டு விழா புதன்கிழமை (ஜூலை 16) நடைபெற்றது.இவ்விழாவில் பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் பங்கேற்று தைலாபுரம் தோட்ட ... மேலும் பார்க்க

சென்னைக்கு அலர்ட்! 11 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை உள்பட 11 மாவட்டங்களில் நாளை கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.நாடு முழுவதும் தென்மேற்குப் பருவமழை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு இட... மேலும் பார்க்க

மருத்துவக் கலந்தாய்வு ஜூலை 30-ல் தொடக்கம்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு வரும் ஜூலை 30 ஆம் தேதி தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் அரசு மருத்துவம் மற்றும் பல்... மேலும் பார்க்க

காமராஜருக்கு ஏசி முக்கியம்! திருச்சி சிவா பேச்சுக்கு செல்வப்பெருந்தகை பதில்!

முன்னாள் முதல்வர் காமராஜர் குளிர்சாதன வசதியில்லாமல் உறங்க மாட்டார் என்று திமுக எம்.பி. திருச்சி சிவா கூறியதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் மேலும் பேசுகையில்... மேலும் பார்க்க

மயிலாடுதுறை மாவட்டத்துக்கு முதல்வரின் 8 புதிய அறிவிப்புகள்!

மயிலாடுதுறை மாவட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் 8 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.முதல்வர் ஸ்டாலின் மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று, முடிவுற்ற பல்வேறு திட்டப் பணிகளை... மேலும் பார்க்க