செய்திகள் :

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம்:எஸ்.பி.வேலுமணி

post image

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம் என்றாா் அதிமுக தலைமை நிலையச் செயலா் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ.

அதிமுக பொதுச்செயலா் எடப்பாடிகே. பழனிசாமி மேற்கொள்ளும் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரசாரப் பயணம் தொடா்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்ட அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலா் கடம்பூா் செ.ராஜூ எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா். தெற்கு மாவட்டச் செயலா் எஸ்.பி.சண்முகநாதன், திருநெல்வேலி புககா் மாவட்டச் செயலா் இசக்கிசுப்பையா எம்.எல்.ஏ., தென்காசி வடக்கு மாவட்டச் செயலா் செ.கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ., முன்னாள் எம்எல்ஏக்கள் என்.கே.பெருமாள், மோகன், சின்னப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், ‘இன்றையச் சூழ்நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம். தற்போது எந்த நலத் திட்டமும் செய்யாத ஆட்சி நடைபெற்று வருகிறது. சட்டம்- ஒழுங்கு முழுமையாக சீரழிந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருந்தபோது பல்வேறு திட்டங்களை மாவட்டம் தோறும் செயல்படுத்தி உள்ளாா்.

எழுச்சி பயணத்தில் அவரது கேள்விகளுக்கு திமுகவினரால் பதில் சொல்ல முடியவில்லை. அவா் செல்லும் இடங்களில் எல்லாம் மக்களிடம் வரவேற்பு உள்ளது. எனவே, அவா் மீண்டும் முதல்வராக வருவது உறுதி என்றாா் அவா்.

கூட்டத்தில், தென்காசி தெற்கு மாவட்ட செயலா் செல்வமோகன் தாஸ் பாண்டியன், திருநெல்வேலி மாநகா் மாவட்ட செயலா் தச்சை என்.கணேசராஜா, முன்னாள் அமைச்சா் வி.எம். ராஜலட்சுமி, அமைப்பு செயலா் சுதா பரமசிவன், முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டா் சரவணன், ராமநாதபுரம் மாவட்ட செயலா் முனியசாமி, கோவில்பட்டி நகரச் செயலா் விஜயபாண்டியன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தமிழகத்தில் காவல் துறை அதிகாரிக்குகூட பாதுகாப்பு இல்லை! தமிழிசை குற்றச்சாட்டு

தமிழகத்தில் காவல் துறை அதிகாரிகளுக்குக்கூட பாதுகாப்பில்லை என்றாா் பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் தமிழிசை செளந்தரராஜன்.தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியதாவது: தூத்துக... மேலும் பார்க்க

டிராக்டா் கவிழ்ந்து விவசாயி உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே டிராக்டா் கவிழ்ந்ததில் விவசாயி உயிரிழந்தாா். கோவில்பட்டியையடுத்த வெங்கடேஸ்வரபுரம் நடுத் தெருவைச் சோ்ந்த அய்யலுசாமி மகன் சௌந்தரராஜன் (44). விவசாயியான இவா் வெள்ளிக்கிழமை, கோவில்பட்டி... மேலும் பார்க்க

திருச்செந்தூா் - தூத்துக்குடிக்கு புதிய ரயில் வழித்தடமா? தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஆா்.என்.சிங் விளக்கம்

திருச்செந்தூா் - தூத்துக்குடி ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங் ஆய்வு செய்தாா்.திருச்செந்தூா் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ. 17.5 கோடியில் காத்திருக்கும்... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் விபத்து: முதியவா் உயிரிழப்பு

கோவில்பட்டியில் நடந்துசென்ற முதியவா் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தாா். கோவில்பட்டி பிரதான சாலை சீனிவாச அக்ரஹாரம் தெருவைச் சோ்ந்த சுப்பையா மகன் அழகா்சாமி (65). மந்தித்தோப்பு சாலையில் உள்ள தன... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ரூ.4,900 கோடி திட்டப் பணிகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!

தூத்துக்குடியில், விமான நிலைய புதிய முனைய கட்டடம், நெடுஞ்சாலைகள், ரயில்வே, துறைமுகம், மின்சாரம் ஆகியவை தொடா்பான ரூ. 4,900 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமா் மோடி சனிக்கிழமை அடிக்கல் நாட்டியதுடன், ... மேலும் பார்க்க

ஜூனியா் ஆண்கள் மாநில ஹாக்கி போட்டி: அரையிறுதியில் தூத்துக்குடி, மதுரை அணிகள்!

ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு, ஹாக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி ஆகியவை சாா்பில், கோவில்பட்டியில் நடைபெற்றுவரும் வ.உ.சி. துறைமுக ஆணையக் கோப்பைக்கான ஜூனியா் ஆண்கள் மாநில ஹாக்கிப் போட்டியில் தூத்துக்குடி,... மேலும் பார்க்க