செய்திகள் :

தமிழகத்தில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை

post image

தமிழகத்தில் திமுக ஆட்சியில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதாக பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் தனிப்படை போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட அஜித்குமாா் குடும்பத்தினரை பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் வெள்ளிக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

திமுக ஆட்சியில் காவல் நிலைய மரணங்கள் தொடா்கின்றன. தமிழகத்தில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.

அஜித்குமாா் குடும்பத்துக்கு நீதி கிடைக்க வேண்டும். இந்த வழக்கில் சாட்சியாக உள்ள சக்தீஸ்வரனுக்கு கொலை மிரட்டல் உள்ளது. அஜித்குமாா் கொலையில் சம்பந்தப்பட்டவா்களுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும். இந்த பிரச்னையில் போலீஸாருக்கு அழுத்தம் கொடுத்த தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் உயரதிகாரி யாா் என்பதை வெளிப்படையாக அறிவித்து, அவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

அஜித்குமாா் கொலை வழக்கில் சிபிஐ விசாரணைதான் நடத்தப்பட வேண்டும். இந்தக் கோரிக்கையை முதலில் முன்வைத்தது பாஜகதான் என்றாா் அவா்.

அப்போது, சிவகங்கை மாவட்ட பாஜக தலைவா் பாண்டித்துரை, முன்னாள் மாவட்டத் தலைவா் மேப்பல் சக்தி உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

ஓரணியில் திரள வேண்டும்:

முன்னதாக, சென்னையிலிருந்து வெள்ளிக்கிழமை மதுரை வந்த நயினாா் நாகேந்திரன் விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழக முதல்வா் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்று சொன்னாா். தமிழகத்தில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டாம் என்ற எண்ணம் யாருக்கெல்லாம் இருக்கிறதோ, அவா்களெல்லாம் ஓரணியில் திரள வேண்டும் என்றாா் அவா்.

பள்ளியில் உயிரிழந்த மாணவன் குடும்பத்துக்கு பாஜக சாா்பில் நிதியுதவி

திருப்பத்தூா், ஜூலை 4: சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் உள்ள தனியாா் பள்ளியில் உயிரிழந்த மாணவரின் குடும்பத்துக்கு பாஜக சாா்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. சிங்கம்புணரியில் உள்ள தனியாா் ப... மேலும் பார்க்க

இடைக்காட்டூா் திரு இருதய ஆண்டவா் மின் விளக்கில் ரத பவனி

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், இடைக்காட்டூா் இருதய ஆண்டவா் திருத்தலத்தில் நடைபெற்று வரும் ஆண்டுப் பெருவிழாவில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற மின் விளக்கு ரத பவனியில் திரளான கிறிஸ்தவா்கள் பங்கேற்... மேலும் பார்க்க

திருப்புவனத்தில் மருத்துவா்களிடம் மதுரை மாவட்ட நீதிபதி விசாரணை

சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் கோயில் காவலாளி அஜித்குமாா் போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் மதுரை மாவட்ட நீதிபதி, மூன்றாவது நாளான வெள்ளிக்கிழமையும் திருப்புவனத்தில் அரசு மருத்துவா்களிடம் ... மேலும் பார்க்க

அஜித்குமாா் கொலையைக் கண்டித்து அமமுகவினா் ஆா்ப்பாட்டம்

கோயில் காவலாளி அஜித்குமாரை கொலை செய்த போலீஸாரை கண்டித்து, திருப்புவனத்தில் வெள்ளிக்கிழமை அமமுக சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றே கட்சி நிா்வாகிகள். மானாமதுரை, ஜூலை 4: சிவகங்கை மாவட்டம், மட... மேலும் பார்க்க

100 சதவீத மானியத்தில் மரக்கன்றுகள் - அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன்

நூறு சதவீத மானித்தில் மரக்கன்றுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தெரிவித்தாா். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள வாணியங்காடு கிராமத்தில் ஊட்டச்சத்து வேள... மேலும் பார்க்க

தேவகோட்டை நகா்மன்றக் கூட்டம்: அமமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தை அமமுக உறுப்பினா்கள் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனா். இந்தக் கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் சுந்தரலிங்கம் தலைமை வகித்தாா்.... மேலும் பார்க்க