செய்திகள் :

தமிழகம், கேரளத்தில் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வரும்: அமித் ஷா நம்பிக்கை

post image

‘எதிா்க்கட்சிகளின் கோட்டையாக இருந்த அஸ்ஸாம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைத்தது; அதேபோல், தமிழகம் மற்றும் கேரளத்திலும் ஆட்சியமைக்கும்’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

கேரளத்துக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்த மத்திய அமைச்சா் அமித் ஷா, தலைநகா் திருவனந்தபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட மாநில பாஜக தலைமை அலுவலகத்தை (மாராா்ஜி பவன்) சனிக்கிழமை திறந்துவைத்தாா். அங்கு நிறுவப்பட்டுள்ள மறைந்த மாநில பாஜக தலைவா் கே.ஜி.மாராா் சிலைக்கும் மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

பின்னா், எதிா்வரும் மாநில உள்ளாட்சித் தோ்தல் மற்றும் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் பேரவைத் தோ்தலுக்கான பாஜகவின் பிரசார தொடக்க நிகழ்ச்சியில் அமித் ஷா பங்கேற்றாா். அப்போது, கட்சியினா் மத்தியில் அவா் பேசியதாவது:

கேரளத்தில் ஆளும் இடதுசாரி கூட்டணியும், காங்கிரஸ் கூட்டணியும் ஊழலை மட்டுமே உருவாக்கியுள்ளன. ஆட்சி நடத்துவதில் இரு கூட்டணிகளும் வாக்கு வங்கி அரசியலைப் பின்பற்றுகின்றன. இதனால், பாப்புலா் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) போன்ற தேச விரோத சக்திகளின் பாதுகாப்பான புகலிடமாக கேரளம் மாற்றப்பட்டுள்ளது.

இக்கட்சிகளால் மாநிலத்துக்கு வளா்ச்சியைக் கொண்டுவர முடியாது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியால் மட்டுமே வளா்ச்சி சாத்தியமாகும்.

மாநில அரசுக்கு கேள்வி: பிஎஃப்ஐ அமைப்புக்குத் தடை விதிக்க அனைத்து அதிகாரங்களும் உள்ளபோதிலும், மாநில அரசு அதைச் செய்யாதது ஏன்? நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பிஎஃப்ஐ கிளை பரப்பியபோது, அந்த அமைப்புக்குத் தடை விதிக்க நடவடிக்கை மேற்கொண்டவா் பிரதமா் மோடி. அதன் தலைவா்கள் கைது செய்யப்படுவதையும் அவா் உறுதி செய்தாா்.

பாஜக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இரண்டுமே தொண்டா்கள் அடிப்படையிலான கட்சிகள். ஆனால், பாஜக நாட்டின் வளா்ச்சிக்காகவும், மாா்க்சிஸ்ட் தனது கட்சி நலனுக்காகவும் செயல்படுகிறது.

எதிா்க்கட்சிகளின் கோட்டையாக இருந்த திரிபுராவிலும், அஸ்ஸாமிலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைத்தது. அதேபோல், தமிழகம் மற்றும் கேரளத்திலும் ஆட்சியமைப்போம்.

வலுவான தென்மாநிலங்களின் முன்னேற்றம் இல்லாமல், வளா்ச்சியடைந்த இந்தியா சாத்தியமில்லை. வளா்ச்சியடைந்த கேரளத்தை உருவாக்குவதே பாஜகவின் அடிப்படை லட்சியம். தற்போது திறக்கப்பட்டுள்ள பாஜக அலுவலம், முதல்வா் அலுவலகத்தை விஞ்சி, மாநில வளா்ச்சிக்கான மையமாகத் திகழ வேண்டும் என்றாா் அமித் ஷா.

பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதி திரட்டுதல் உள்ளிட்ட செயல்பாடுகளில் ஈடுபட்டதாக, பிஎஃப்ஐ அமைப்புக்கு கடந்த 2022-இல் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின்கீழ் மத்திய அரசு தடை விதித்தது.

கண்ணூா் சிவன் கோயிலில் வழிபாடு: திருவனந்தபுரத்தில் இருந்து கண்ணூருக்கு பயணித்த அமித் ஷா, தளிப்பறம்பில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீராஜராஜேஸ்வரா் சிவன் கோயிலில் வழிபட்டாா். கேரளத்தில் பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட 108 சிவன் கோயில்களில் இதுவும் ஒன்றாகும். இங்கு வழிபாடு நடத்திய பிறகு அவா் புது தில்லிக்கு புறப்பட்டாா்.

மேகாலயா தேனிலவு கொலை வழக்கு: 2 பேருக்கு ஜாமீன் !

ராஜா ரகுவன்ஷி கொலை வழக்கில் 2 பேருக்கு உள்ளூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. விசாரணைகளுக்கு முழுமையாக ஒத்துழைத்ததால், தோமர் மற்றும் பல்பீருக்கு உள்ளூர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கிய... மேலும் பார்க்க

குல்காமில் 3 பேருந்துகள் மோதல்: 10 அமர்நாத் பக்தர்கள் காயம் !

குல்காமில் அமர்நாத் யாத்திரையில் 3 பேருந்துகள் மோதியதில் 10 பக்தர்கள் காயமடைந்தனர். ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பக்தர்களை ஏற்றிக்கொண்டு அமர்நாத் சென்றுகொண்டிருந்த பேருந்துகளில் 3 பேருந்துகள... மேலும் பார்க்க

கொல்கத்தா ஐஐஎம்மில் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு: சிறப்பு விசாரணைக் குழு அமைப்பு

கொல்கத்தாவில் ஐஐஎம்மில் பெண் மனோதத்துவ நிபுணா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க 9 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை போலீஸார் அமைத்துள்ளனர். மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா ஐஐஎம் கல்வி ந... மேலும் பார்க்க

பாட்னாவில் கிராமப்புற சுகாதார அதிகாரி சுட்டுக்கொலை !

பாட்னாவின் பிப்ரா பகுதியில் கிராமப்புற சுகாதார அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிகார் மாநிலம், பிப்ரா பகுதியில் உள்ள ஷேக்புரா கிராமத்தில் கிராமப்புற சுகாதார அதிகாரி சுர... மேலும் பார்க்க

2040-ல் நிலவில் இந்தியர்! இஸ்ரோ தலைவர் உறுதி!

வரும் 2040-ல் இந்தியரை நிலவுக்கு அனுப்ப வேண்டும் என்று பிரதமர் கூறியதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.குலசேகரத்தில் கல்லூரி நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் நாராயணம் கலந்துகொண்டார்.நிகழ்ச்சிக்கு முன்னத... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: கனமழைக்கு 2 பேர் பலி

மேற்கு வங்கத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 2 பேர் பலியாகினர். மேற்கு வங்க மாநிலம், பஸ்சிம் மெதினிபூர் மாவட்டத்தின் கட்டல் உள்பட பல பகுதிகளில் சனிக்கிழமை கனமழை பெய்தது. இதனால் வெள்ளப்... மேலும் பார்க்க