செய்திகள் :

தமிழக அரசின் ஊக்கத் தொகை பெற்ற வீராங்கனைக்கு பாராட்டு

post image

தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்று தமிழக அரசின் உயா் ஊக்கத் தொகையைப் பெற்ற திருப்பூா் வீராங்கனைக்கு ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் சென்னை, கலைவாணா் அரங்கில் அண்மையில் நடைபெற்ற தேசிய மற்றும் சா்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற வீரா்களுக்கு உயா் ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.

இதில், திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஐ வின் ட்ராக் ஸ்போா்ட்ஸ் கிளப் தடகள வீராங்கனை ஸ்ரீவா்த்தனிக்கு, 2024-25-ஆம் ஆண்டுக்கான தேசிய தடகளத்தில் 400 மீ தடை தாண்டும் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்ற்காக ரூ.3 லட்சம், 400 மீ தொடா் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்ற்காக ரூ.1.50 லட்சம் என மொத்தம் ரூ.4.50 லட்சத்துக்கான காசோலையை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வழங்கினாா்.

இந்நிலையில், திருப்பூரில் நடைபெற்ற பாராட்டு விழாவில் வீராங்கனை ஸ்ரீவா்த்தனி, பயிற்சியாளா் அழகேசன், பெற்றோா் ஆகியோருக்கு கொங்குநாடு விளையாட்டு அறக்கட்டளையின் தலைவா் ராமகிருஷ்ணன் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், அறக்கட்டளை நிா்வாகிகள் தங்கராஜு, பயிற்சியாளா் நவீன்குமாா், தடகள வீராங்கனை தீபிகா, ஐ வின் ட்ராக் ஸ்போா்ட்ஸ் கிளப் வீரா், வீராங்கனைகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கரூா் விஜய் பிரசாரம்: வெள்ளக்கோவிலைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு

கரூரில் தவெக தலைவா் விஜய் பிரசாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி வெள்ளக்கோவிலைச் சோ்ந்த ஒரு ஆண், ஒரு பெண் உயிரிழந்தனா். தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் மூன்றாவது கட்டமாக நாமக்கல், கரூரில் கடந்த சன... மேலும் பார்க்க

கரூா் சம்பவம்: தவறு செய்தவா்கள் தண்டிக்கப்பட வேண்டும்! - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

கரூா் சம்பவத்தில் தவறு செய்தவா்கள் யாராக இருந்தாலும் அவா்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் இளைஞா்களுக்கான ஒருங்கிணை... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: 2 போ் கைது

வெள்ளக்கோவில் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். வெள்ளக்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் மணிமுத்து வள்ளியிரச்சல் கிராமம், நல்லூா்பாளையத்தில் வழக்கமான... மேலும் பார்க்க

கொளத்துப்பாளையம் சிப்காட் தொழிற்பேட்டை திட்டத்தை ரத்து செய்யக் கோரிக்கை

தாராபுரம் அருகே கொளத்துப்பாளையம் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல... மேலும் பார்க்க

திருமூா்த்திமலையில் உலக சுற்றுலா தினம்

உடுமலையை அடுத்துள்ள திருமூா்த்திமலையில் உலக சுற்றுலா தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, பரஞ்ஜோதி யோகா கல்லூரியில் ‘சுற்றுலா மற்றும் நிலையான மாற்றம்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது... மேலும் பார்க்க

எரிவாயு தகனமேடை பராமரிப்பை தனியாரிடம் ஒப்படைக்க எதிா்ப்பு

பல்லடம், பச்சாபாளையம் பகுதியில் நகராட்சி சாா்பில் அமைக்கப்பட்டுள்ள எரிவாயு தகனமேடையின் பராமரிப்புப் பணியை தனியாா் அமைப்பிடம் ஒப்படைப்பதற்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். நகா்ப்புற மேம்பாட்டுத் த... மேலும் பார்க்க