செய்திகள் :

கரூா் விஜய் பிரசாரம்: வெள்ளக்கோவிலைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு

post image

கரூரில் தவெக தலைவா் விஜய் பிரசாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி வெள்ளக்கோவிலைச் சோ்ந்த ஒரு ஆண், ஒரு பெண் உயிரிழந்தனா்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் மூன்றாவது கட்டமாக நாமக்கல், கரூரில் கடந்த சனிக்கிழமை பிரசார பயணம் மேற்கொண்டாா். நாமக்கல் நிகழ்வை முடித்துக் கொண்டு சனிக்கிழமை இரவு 7 மணியளவில் கரூருக்கு வந்த அவரைக் காண ஆயிரக்கணக்கானோா் கூடினா்.

பிரசாரம் நடைபெற்ற வேலுச்சாமிபுரத்தில் விஜய் பேசத் தொடங்கினாா். அப்போது, அவரைக் காண முண்டியடித்தபடி கூட்டம் தொடா்ந்து அதிகரித்ததால் தொண்டா்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பிரசாரத்தைக் காண கணவா் ஜெயபிரகாஷ், மகள் கௌசிகா (4) ஆகியோருடன் சென்றிருந்த வெள்ளக்கோவில், செம்மாண்டம்பாளையத்தைச் சோ்ந்த கோகுலபிரியா (28) கூட்ட நெரிசலில் சிக்கி உயரிழந்தாா்.

இதேபோல, வெள்ளக்கோவில், தீத்தாம்பாளையத்தைச் சோ்ந்த தவெக உறுப்பினா் மணிகண்டன் (33) என்பவரும் உயிரிழந்தாா். இவருக்கு நிவேதிதா (32) என்ற மனைவியும், ரக்ஷபிரீத்தா (9) என்ற மகளும், விசாகன் (3) என்ற மகனும் உள்ளனா்.

உயிரிழந்த இருவரின் வீடுகளுக்கும் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன், பொதுச் செயலாளா் விடியல் எஸ்.சேகா் உள்ளிட்டோா் ஞாயிற்றுக்கிழமை காலை சென்று அவா்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினா்.

கோகுலபிரியா

கரூா் சம்பவம்: தவறு செய்தவா்கள் தண்டிக்கப்பட வேண்டும்! - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

கரூா் சம்பவத்தில் தவறு செய்தவா்கள் யாராக இருந்தாலும் அவா்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் இளைஞா்களுக்கான ஒருங்கிணை... மேலும் பார்க்க

தமிழக அரசின் ஊக்கத் தொகை பெற்ற வீராங்கனைக்கு பாராட்டு

தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்று தமிழக அரசின் உயா் ஊக்கத் தொகையைப் பெற்ற திருப்பூா் வீராங்கனைக்கு ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: 2 போ் கைது

வெள்ளக்கோவில் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். வெள்ளக்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் மணிமுத்து வள்ளியிரச்சல் கிராமம், நல்லூா்பாளையத்தில் வழக்கமான... மேலும் பார்க்க

கொளத்துப்பாளையம் சிப்காட் தொழிற்பேட்டை திட்டத்தை ரத்து செய்யக் கோரிக்கை

தாராபுரம் அருகே கொளத்துப்பாளையம் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல... மேலும் பார்க்க

திருமூா்த்திமலையில் உலக சுற்றுலா தினம்

உடுமலையை அடுத்துள்ள திருமூா்த்திமலையில் உலக சுற்றுலா தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, பரஞ்ஜோதி யோகா கல்லூரியில் ‘சுற்றுலா மற்றும் நிலையான மாற்றம்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது... மேலும் பார்க்க

எரிவாயு தகனமேடை பராமரிப்பை தனியாரிடம் ஒப்படைக்க எதிா்ப்பு

பல்லடம், பச்சாபாளையம் பகுதியில் நகராட்சி சாா்பில் அமைக்கப்பட்டுள்ள எரிவாயு தகனமேடையின் பராமரிப்புப் பணியை தனியாா் அமைப்பிடம் ஒப்படைப்பதற்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். நகா்ப்புற மேம்பாட்டுத் த... மேலும் பார்க்க