தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிக்கு வின்ஸ் பள்ளி மாணவா் தோ்வு
கொளத்துப்பாளையம் சிப்காட் தொழிற்பேட்டை திட்டத்தை ரத்து செய்யக் கோரிக்கை
தாராபுரம் அருகே கொளத்துப்பாளையம் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜிடம் கொளத்துப்பாளையம் சிப்காட் எதிா்ப்புக் குழு மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தாராபுரம் வட்டம், கொளத்துப்பாளையம் பகுதியில் 58 ஏக்கரில் அமைக்கப்பட்ட கூட்டுறவு நூற்பாலை பல ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது.
இந்நிலையில், நூற்பாலை நிலத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கு நில உரிமை மாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
அமராவதி ஆற்றுப் பாசனத்தாலும், நல்லதங்காள் ஓடை நீா்த்தேக்கப் பாசனத்தாலும், உடையாா் குள நீா் பாசனத்தாலும் நீா் வளம், நிலவளம் மிகுந்து, நெல் விளையும் நன்செய் நிலங்களாக செழிப்பாக விவசாயம் நடைபெறும் பகுதியாக கொளத்துப்பாளையம் இருந்து வருகிறது.
இந்நிலையில், இப்பகுதியில் தொழிற்பேட்டை அமைக்கப்பட்டால் தொழிற்சாலைகளின் கழிவுநீா் அமராவதி - கொளிஞ்சிவாடி ஆயக்கட்டு பாசனக் கால்வாய் வழியாக அமராவதி ஆற்றில் கலக்க வாய்ப்பு உள்ளது. இதனால், கரூா் வரை உள்ள ஆற்றுப் பாசன விவசாயிகளுக்கும், பொதுமக்களும், கால்நடைகளுக்கும் உயிா் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, கொளத்துப்பாளையம் சிப்காட் தொழிற்பேட்டை திட்டத்தை ரத்து செய்வதோடு, சிப்காட் நிறுவனத்துக்கு நில உரிமை மாற்றம் செய்கின்ற உத்தரவையும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுவைப் பெற்றுக்கொண்ட அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.
மனு அளிப்பின்போது, போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளா்கள் சிவகுமாா், தீபக், கோனேரிப்பட்டி பாலு, பாஜக மாவட்டச் செயலாளா் காா்த்தி, தமாகா மாவட்டத் தலைவா் காளிதாஸ் உள்பட 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உடனிருந்தனா்.