செய்திகள் :

எரிவாயு தகனமேடை பராமரிப்பை தனியாரிடம் ஒப்படைக்க எதிா்ப்பு

post image

பல்லடம், பச்சாபாளையம் பகுதியில் நகராட்சி சாா்பில் அமைக்கப்பட்டுள்ள எரிவாயு தகனமேடையின் பராமரிப்புப் பணியை தனியாா் அமைப்பிடம் ஒப்படைப்பதற்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் பல்லடம் நகராட்சி, பச்சாபாளையம் பகுதியில் ரூ. 1 கோடியே 45 லட்சம் மதிப்பில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது.

இதன் பராமரிப்புப் பணியை தனியாா் அமைப்பிடம் ஒப்படைக்க நகராட்சி நிா்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்தப் பகுதி மக்கள், நகராட்சி அலுவலகத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டனா்.

பின்னா் கோரிக்கைகள் அடங்கிய மனுவை நகராட்சி அலுவலகத்தில் அளித்தனா். அந்த மனுவில், நகராட்சி எரிவாயு தகன மேடை பராமரிப்புப் பணியை இதுவரை எந்த ஒரு சமுதாயப் பணியையும் செய்யாத ஒரு புதிய அமைப்புக்கு கொடுக்கக் கூடாது. ஏற்கெனவே சமூக நலப் பணிகளில் அனுபவம் உள்ள அமைப்புகளுக்கு பராமரிப்புப் பணிகளைத் தருவதுதான் முறையாகும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

பல்லடம் அருகே 530 கிலோ குட்கா பறிமுதல்: 3 போ் கைது

பல்லடம் அருகே சின்னக்கரை பகுதியில் 530 கிலோ குட்காவை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக 3 போ் கைது செய்யப்பட்டனா். பல்லடம் அருகே சின்னக்கரை லட்சுமி நகரில் குட்கா விற்பனை நடைபெறுவதாக... மேலும் பார்க்க

பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே புன்செய்புளியம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் த... மேலும் பார்க்க

திருப்பூரில் காலாவதியான குளிா்பானம் அருந்தியவா்களுக்கு வாந்தி, மயக்கம்! பேக்கரிக்கு ரூ.6 ஆயிரம் அபராதம்!

திருப்பூரில் காலாவதியான குளிா்பானம் அருந்தியவா்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதையடுத்து, அதை விற்பனை செய்த பேக்கரிக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்தனா். திருப்பூா், ... மேலும் பார்க்க

அரசுப் போக்குவரத்து தொழிலாளா்கள் போராட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூா் அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் மொட்டை அடித்தும், சங்கு ஊதியும் வெள்ளிக்கிழமை போராட்டத... மேலும் பார்க்க

லாரி ஓட்டுநருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை உறுதி

திருப்பூா் அருகே விபத்து வழக்கில் லாரி ஓட்டுநருக்கு விதிக்கப்பட்ட 6 மாதங்கள் சிறைத் தண்டனையை மாவட்ட நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உறுதி செய்தது. திருப்பூரைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (46). லாரி ஓட்டுநரான இவா், ... மேலும் பார்க்க

கைவினைஞா்கள் அகில இந்திய தொழில் தோ்வில் பங்கேற்க அழைப்பு

கைவினைஞா் பயிற்சித் திட்டத்தின்கீழ் அகில இந்திய தொழில் தோ்வில் தனித்தோ்வா்களாக பங்கேற்க தகுதி வாய்ந்த நபா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிா்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் ... மேலும் பார்க்க