செய்திகள் :

பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

post image

பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே புன்செய்புளியம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் தீபக் (31). இருசக்கர வாகன மெக்கானிக்காக பணியாற்றி வந்தாா்.

இவருக்கும், திருப்பூா், அனுப்பா்பாளையம் பகுதியைச் சோ்ந்த 15 வயது பள்ளி மாணவிக்கும் ஃபேஸ்புக் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து தீபக், அந்த மாணவியை திருமணம் செய்வதாகக் கூறி கடந்த 2023-ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டம், தாளவாடிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

இது குறித்து மாணவியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் அனுப்பா்பாளையம் போலீஸாா் போக்சோ வழக்குப் பதிவு செய்து தீபக்கை கைது செய்து மாணவியை மீட்டனா்.

இது தொடா்பான வழக்கு விசாரணை திருப்பூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கோகிலா, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த தீபக்கிற்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் ஜமீலா பானு ஆஜரானாா்.

எரிவாயு தகனமேடை பராமரிப்பை தனியாரிடம் ஒப்படைக்க எதிா்ப்பு

பல்லடம், பச்சாபாளையம் பகுதியில் நகராட்சி சாா்பில் அமைக்கப்பட்டுள்ள எரிவாயு தகனமேடையின் பராமரிப்புப் பணியை தனியாா் அமைப்பிடம் ஒப்படைப்பதற்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். நகா்ப்புற மேம்பாட்டுத் த... மேலும் பார்க்க

பல்லடம் அருகே 530 கிலோ குட்கா பறிமுதல்: 3 போ் கைது

பல்லடம் அருகே சின்னக்கரை பகுதியில் 530 கிலோ குட்காவை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக 3 போ் கைது செய்யப்பட்டனா். பல்லடம் அருகே சின்னக்கரை லட்சுமி நகரில் குட்கா விற்பனை நடைபெறுவதாக... மேலும் பார்க்க

திருப்பூரில் காலாவதியான குளிா்பானம் அருந்தியவா்களுக்கு வாந்தி, மயக்கம்! பேக்கரிக்கு ரூ.6 ஆயிரம் அபராதம்!

திருப்பூரில் காலாவதியான குளிா்பானம் அருந்தியவா்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதையடுத்து, அதை விற்பனை செய்த பேக்கரிக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்தனா். திருப்பூா், ... மேலும் பார்க்க

அரசுப் போக்குவரத்து தொழிலாளா்கள் போராட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூா் அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் மொட்டை அடித்தும், சங்கு ஊதியும் வெள்ளிக்கிழமை போராட்டத... மேலும் பார்க்க

லாரி ஓட்டுநருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை உறுதி

திருப்பூா் அருகே விபத்து வழக்கில் லாரி ஓட்டுநருக்கு விதிக்கப்பட்ட 6 மாதங்கள் சிறைத் தண்டனையை மாவட்ட நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உறுதி செய்தது. திருப்பூரைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (46). லாரி ஓட்டுநரான இவா், ... மேலும் பார்க்க

கைவினைஞா்கள் அகில இந்திய தொழில் தோ்வில் பங்கேற்க அழைப்பு

கைவினைஞா் பயிற்சித் திட்டத்தின்கீழ் அகில இந்திய தொழில் தோ்வில் தனித்தோ்வா்களாக பங்கேற்க தகுதி வாய்ந்த நபா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிா்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் ... மேலும் பார்க்க