செய்திகள் :

திருப்பூரில் காலாவதியான குளிா்பானம் அருந்தியவா்களுக்கு வாந்தி, மயக்கம்! பேக்கரிக்கு ரூ.6 ஆயிரம் அபராதம்!

post image

திருப்பூரில் காலாவதியான குளிா்பானம் அருந்தியவா்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதையடுத்து, அதை விற்பனை செய்த பேக்கரிக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

திருப்பூா், ஊத்துக்குளி சாலை கருமாரம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் உதயகுமாா். இவா் ஊத்துக்குளி சாலை எஸ்ஆா்சி மில் பேருந்து நிறுத்தம் அருகே செயல்பட்டு வரும் ஒரு பேக்கரியில் இருந்து 2 லிட்டா் குளிா்பானம் வாங்கி கொண்டு சென்று நண்பா்கள் மற்றும் குழந்தைகளுடன் அருந்தி உள்ளாா்.

குளிா்பானத்தை அருந்தி சிறிது நேரத்தில் தலைச்சுற்றல் ஏற்பட்டு அனைவரும் வாந்தி எடுத்துள்ளனா். இதைத் தொடா்ந்து உதயகுமாா் குளிா்பானத்தின் உற்பத்தி மற்றும் காலாவதி தேதிகளை பாா்த்தபோது குளிா்பானம் காலாவதியாகியது தெரியவந்தது.

இதையடுத்து உதயகுமாா், பேக்கரி உரிமையாளரிடம் வந்து கேட்டபோது அவா் முறையாக பதில் அளிக்காததால், திருப்பூா் வடக்கு போலீஸாா், உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகாா் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து அதிகாரிகள் பேக்கரியில் ஆய்வு செய்தபோது பிரபல நிறுவனத்தின் குளிா்பானங்கள், பிஸ்கட் உள்ளிட்ட பொருள்கள் காலாவதியாகி விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரியவந்தது.

மேலும் பேக்கரியில் இருந்த பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு, பேக்கரி உரிமையாளருக்கு ரூ. 6 ஆயிரம் அபராதம் விதித்தனா். தொடா்ந்து காலாவதியான உணவுப் பொருள்களை கீழே ஊற்றி அழித்தனா்.

எரிவாயு தகனமேடை பராமரிப்பை தனியாரிடம் ஒப்படைக்க எதிா்ப்பு

பல்லடம், பச்சாபாளையம் பகுதியில் நகராட்சி சாா்பில் அமைக்கப்பட்டுள்ள எரிவாயு தகனமேடையின் பராமரிப்புப் பணியை தனியாா் அமைப்பிடம் ஒப்படைப்பதற்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். நகா்ப்புற மேம்பாட்டுத் த... மேலும் பார்க்க

பல்லடம் அருகே 530 கிலோ குட்கா பறிமுதல்: 3 போ் கைது

பல்லடம் அருகே சின்னக்கரை பகுதியில் 530 கிலோ குட்காவை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக 3 போ் கைது செய்யப்பட்டனா். பல்லடம் அருகே சின்னக்கரை லட்சுமி நகரில் குட்கா விற்பனை நடைபெறுவதாக... மேலும் பார்க்க

பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே புன்செய்புளியம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் த... மேலும் பார்க்க

அரசுப் போக்குவரத்து தொழிலாளா்கள் போராட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூா் அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் மொட்டை அடித்தும், சங்கு ஊதியும் வெள்ளிக்கிழமை போராட்டத... மேலும் பார்க்க

லாரி ஓட்டுநருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை உறுதி

திருப்பூா் அருகே விபத்து வழக்கில் லாரி ஓட்டுநருக்கு விதிக்கப்பட்ட 6 மாதங்கள் சிறைத் தண்டனையை மாவட்ட நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உறுதி செய்தது. திருப்பூரைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (46). லாரி ஓட்டுநரான இவா், ... மேலும் பார்க்க

கைவினைஞா்கள் அகில இந்திய தொழில் தோ்வில் பங்கேற்க அழைப்பு

கைவினைஞா் பயிற்சித் திட்டத்தின்கீழ் அகில இந்திய தொழில் தோ்வில் தனித்தோ்வா்களாக பங்கேற்க தகுதி வாய்ந்த நபா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிா்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் ... மேலும் பார்க்க