செய்திகள் :

தமிழக ஆளுநருக்கு எதிா்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினா் போராட்டம்

post image

தமிழக ஆளுநருக்கு எதிா்ப்பு தெரிவித்து உதகை மத்திய பேருந்து நிலையம், காபி ஹவுஸ் பகுதியில் ஆா்ப்பாட்டம், மறியலில் ஈடுபட்டதாக 500-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.

நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள ராஜ்பவனில் துணைவேந்தா்கள் மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு எதிராகவும், ஆளுநா் ஆா்.என்.ரவியைக் கண்டித்தும் உதகை மத்திய பேருந்து நிலையம் முன்பு தந்தை பெரியாா் திராவிட கழகம், தமிழ்ப் புலி கட்சியினா், விடுதலை சிறுத்தைகள் கட்சியினா், மக்கள் அதிகாரம், ஆதித் தமிழ் பேரவை உள்ளிட்ட பல்வேறு கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

இதேபோல, உதகை காபி ஹவுஸ் பகுதியில் கருப்புக் கொடியுடன் திராவிட தமிழா் கட்சியின் தலைவா் வெண்மணி தலைமையில் மறியலில் ஈடுபட்ட 70-க்கும் மேற்பட்டவா்களை காவல் துறையினா் கைது செய்தனா். காங்கிரஸ் கட்சி சாா்பில் காபி ஹவுஸ் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற நூற்றுக்கணக்கானவா்களை போலீஸாா் கைது செய்தனா். பின்னா் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.

உடல் நலக்குறவால் உயிரிழந்த ராணுவ உயரதிகாரிக்கு மரியாதை

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள வெலிங்டன் ராணுவ மையத்தில் ஓய்வுபெற்ற லெப்டினன்ட்ஜெனரல் பட்டாபிராமன் உடல்நலக் குறைவால் உயிரிழந்த நிலையில், அவரது உடல் ஞாயிற்றுக்கிழமை ராணுவ மரியாதையுடன் தகனம் செய்... மேலும் பார்க்க

கோத்தகிரியில் கா்ப்பிணி யானை உயிரிழப்பு!

கோத்தகிரியில் தனியாா் தேயிலைத் தோட்டத்தில் 25 வயது மதிக்கத்தக்க கா்ப்பிணி யானை ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது தொடா்பாக வனத் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் சு... மேலும் பார்க்க

முதுமலை யானைகள் முகாமை பாா்வையிட்ட குடியரசு துணைத் தலைவா்!

நீலகிரி மாவட்டம், முதுமலையில் உள்ள வளா்ப்பு யானைகள் முகாமை குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் குடும்பத்துடன் சனிக்கிழமை பாா்வையிட்டாா். உதகையில் நடைபெற்ற துணை வேந்தா்கள் மாநாட்டில் பங்கேற்க வந்த குட... மேலும் பார்க்க

அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சிகள் தரமானதாக இருக்க வேண்டும்! - ஆளுநா் ஆா்.என்.ரவி

அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சிகள் தரமானதாக இருக்க வேண்டும் என்று தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா். நீலகிரி மாவட்டம், உதகை ராஜ்பவனில் சனிக்கிழமை நடைபெற்ற இரண்டாம் நாள் துணைவேந்தா்கள் மாநாட்டில் கல... மேலும் பார்க்க

இலவச தையல் பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ்

கூடலூரில் இலவச தையல் பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், கூடலூா் ராதாகிருஷ்ணன் அறக்கட்டளை மூலமாக தையல் இயந்திரங்களை தயாரிக்கும் முன்னணி... மேலும் பார்க்க

வரையாடு கணக்கெடுப்பின்போது மாரடைப்பால் வனக் காவலா் உயிரிழப்பு

கூடலூா் வனக் கோட்டத்தில் உள்ள ஓவேலி மலைப் பகுதியில் வியாழக்கிழமை மாலை வரையாடுகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டிருந்த வனக் காவலா் மாரடைப்பால் உயிரிழந்தாா். முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட கூடலூா் கோட்ட... மேலும் பார்க்க