செய்திகள் :

தமிழக முன்னேற்றத்துக்காக உழைக்கும் முதல்வர் ஸ்டாலின்: டிஆர்பி ராஜா

post image

ஒசூர் : தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்காக ஒவ்வொரு நாளும் உழைத்துக் கொண்டிருக்கிறார் நமது முதல்வர் என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.

ஒசூரில் இன்று நடைபெற்ற தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, முதல்வர் அவருடைய வீட்டில் துக்க நிகழச்சி, இருந்தாலும் இந்த தொழில் முதலீட்டு மாநாட்டிற்கு வந்தார். அவருடைய சம்பந்தி இன்று இயற்கை எய்து விட்டார். அந்த துயர நிகழ்ச்சி இருந்தாலும் ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்று இங்கு வந்துள்ளார் முதல்வர்.

திராவிட மாடல் ஆட்சி எல்லோரையும் உள்ளடக்கி பரவலாக்கிய வளர்ச்சி. அந்த முயற்சியில் தமிழ்நாடு வரலாறு காணாத அனைத்து பகுதிகளையும் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதுவரை சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகள், கோவை, கோவை சுற்றுப்புற பகுதிகள், மதுரை மற்றும் தென் மாவட்டங்கள் வளர்ச்சி இல்லாத நிலை மாறி வருகிறது.

முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி முயற்சியினால் டிவிஎஸ் போன்ற நிறுவனங்கள் ஒசூரில் தொழிலை தொடங்கின. தொழில் புரட்சி தொடங்கியது. அதன் பிறகு தமிழ்நாடு முழுவதும் தொழில் வளர்ச்சி நடந்தது என்றால் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆட்சியில்தான் நடைபெற்றுள்ளது என்பது அனைவரும் தெரியும்.

ரூ.15000 கோடி முதலீட்டை ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று 17,000 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி உள்ளார். கடந்த முறை தூத்துக்குடியில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் 32 ஆயிரம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டது. ஒசூரில் 24 ஆயிரம் கோடியில் முதலீடு பெறும் வகையில், தொழில் வளர்ச்சிக்கு முதலீடுகளை பெற்று வருகிறார்.

பெரிய தொழிற்சாலைகள் இங்கு வரும் பொழுது சிறு குறு தொழிற்சாலைகள் வளரும். பல்வேறு தொழில்கள், கார் உற்பத்தி, எலக்ட்ரானிக்ஸ் கார், கெமிக்கல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இன்று முதலீடு செய்யப்படுகிறது என தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தார்.

Minister TRP Raja has said that Stalin is the Chief Minister who is working for the progress of Tamil Nadu.

இதையும் படிக்க...நூலிழையில், ஹெலிகாப்டர் கயிறு மூலம் தப்பிய நேபாள அமைச்சர், குடும்பம்!

மனைவி, கள்ளக் காதலன் தலையினை வெட்டிக் கொலை செய்த கணவர்!

கள்ளக்குறிச்சி: மலைக்கோட்டாலம் கிராமத்தில் மனைவி மற்றொறுவருடன் தனிமையில் இருந்ததைப் பார்த்த கணவர் கொடுவாளால் இருவரது தலையை வெட்டி பையில் எடுத்துக் கொண்டு வேலூர் மத்திய சிறையின் முன்பாக நின்று கொண்டிரு... மேலும் பார்க்க

கோவையில் அக். 9,10-ல் உலக புத்தொழில் மாநாடு: முதல்வர் ஸ்டாலின்

கோயம்புத்தூரில் வரும் அக். 9,10 ஆகிய தேதிகளில் உலக புத்தொழில் மாநாடு நடைபெறும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.முதல்வர் ஸ்டாலின் இன்று (செப். 11) தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக... மேலும் பார்க்க

மின்சுற்றுப் பலகை உற்பத்தி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்!

ஒசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், எல்காட் ஓசூர் தொழில் நுட்பப் பூங்காவில் அசென்ட் சர்க்யூட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் புதிதாக நிறுவவுள்ள மல்டிலேயர் எச்டிஐ பிரிண்டட் சர்க்யூட் போர்டுகள் உற்பத்தி திட்டத்த... மேலும் பார்க்க

ஓசூர் மாநாட்டில் 92 ஒப்பந்தங்கள் மூலம் 49,353 வேலைவாய்ப்பு!

ஓசூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ரூ. 24,307 கோடி முதலீட்டில் 49,353 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கிடும் வகையில் 92 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள... மேலும் பார்க்க

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை!

தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு ஒரிசா – வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.தென்னிந்திய பகுத... மேலும் பார்க்க

ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை: அன்புமணி தரப்பு

பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து அன்புமணியை நீக்குவதற்கு ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை என்று கட்சியின் மூத்த நிர்வாகி வழக்கறிஞர் கே. பாலு தெரிவித்துள்ளார்.பாமக ஒழுங்கு நடவடிக்கை குழுவின் நோட்டீஸுக்கு பத... மேலும் பார்க்க