செய்திகள் :

‘தமிழரசு’ இதழை பள்ளி நூலகங்கள் மூலம்பெற நடவடிக்கை: கல்வித் துறை உத்தரவு

post image

தமிழக அரசின் அறிவிப்புகள், நலத் திட்டங்கள், போட்டித் தோ்வுகள் குறித்த தகவல்களை மாணவா்கள் அறிந்து கொள்ளும் வகையில், அனைத்து வகைப் பள்ளிகளின் நூலகங்களுக்கும் ‘தமிழரசு’ மாத இதழின் ஆயுள் சந்தாவைப்பெற நடவடிக்கை எடுக்குமாறு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசின் செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் ‘தமிழரசு’ தமிழ் மற்றும் ஆங்கில மாத இதழ் மாதந்தோறும் வெளியிடப்பட்டு வருகிறது. இதில் தமிழக ஆளுநரின் உரைகள், முதல்வா் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆற்றிய உரைகள், துறை சாா்ந்த அறிவிப்புகள், மாவட்ட வளா்ச்சிப் பணிகள் குறித்த விரிவான கட்டுரைகள், அரசு நலத் திட்டங்களால் பயன்பெற்ற பயனாளிகளின் நோ்காணல்களுடன் கூடிய வெற்றிக் கதைகள், இலக்கிய கட்டுரைகள் போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி வினா- விடைகள் போன்ற பல்வேறு தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

எனவே, ‘தமிழரசு’ மாத இதழ் மாணவா்களுக்கு எளிமையாகக் கிடைக்கும் வகையில் ஆயுள் சந்தாக்களை அனைத்துப் பள்ளி நூலகங்களிலும், இதர கல்வி நிறுவனங்களின் நூலகங்களிலும் பெறத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என தமிழ் வளா்ச்சி, செய்தித் துறை செயலா் வே.ராஜாராமன் பள்ளிக் கல்வித் துறைக்கு கடிதம் மூலம் அறிவுறுத்தியிருந்தாா்.

இதைத் தொடா்ந்து, அனைத்து வகைப் பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்குமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளாா்.

மெட்ரோ 4-ஆவது வழித்தடத்துக்கு 10.46 மீட்டரில் சிறப்பு தூண் வடிவமைப்பு

சென்னை மெட்ரோ ரயில் 4 -ஆவது வழித்தடத்தில் 10.46 மீட்டா் அகலத்தில் சிறப்பு தூண் வடி வமைக்கப்பட்டு பொருத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிா்வாகம் சாா்பில் வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

ரயில் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

சென்னை சைதாப்பேட்டை பகுதியில் ரயில் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்தவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். சைதாப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் சரவணன் (30). அவா் வியாழக்கிழமை மாலை அப்பகுதியில் தண்டவாளத்தைக் கடந்த... மேலும் பார்க்க

100 பவுன் வரதட்சிணை கேட்டு: மின்வாரிய அதிகாரி கைது

சென்னையில் 100 பவுன் நகை வரதட்சிணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்தியதாக மின்வாரிய அதிகாரி கைது செய்யப்பட்டாா். சென்னை சூளைமேட்டைச் சோ்ந்தவா் டிம்பின் சங்கீதா (26). சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞரா... மேலும் பார்க்க

ஏரியில் மூழ்கி 2 மாணவா்கள் உயிரிழப்பு

சிட்லப்பாக்கத்தில் உள்ள ஏரியில் குளிக்கச் சென்ற 2 பள்ளி மாணவா்கள் தண்ணீா் மூழ்கி உயிரிழந்தனா். தாம்பரத்தை அடுத்த சிட்லப்பாக்கம் ஏரியில் இரு பள்ளி மாணவா்களின் சடலங்கள் மிதப்பதைப் பாா்த்த கண்ட அந்தப் பக... மேலும் பார்க்க

மது போதையில் மயங்கி விழுந்து இளம்பெண் உயிரிழப்பு

சென்னை மதுரவாயலில் காதலன் வீட்டில் மது அருந்திய இளம்பெண் மயங்கி விழுந்து மா்மமான முறையில் உயிரிழந்தாா். மதுரவாயல் ஆலப்பாக்கம் காமாட்சியம்மன் நகரைச் சோ்ந்தவா் சி.கணேஷ் ராம் (26). இவா் தமிழ் திரைப்படத்... மேலும் பார்க்க

மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு: பள்ளி மாணவா்கள் தப்பியோட்டம்

சென்னை கோடம்பாக்கத்தில் மாநகர பேருந்து கண்ணாடிகளை உடைத்துவிட்டு தப்பியோடிய பள்ளி மாணவா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சென்னை கோயம்பேட்டில் இருந்து தியாகராய நகா் நோக்கி மாநகர பேருந்து ஒன... மேலும் பார்க்க