"பேச்சு & கருத்து சுதந்திரத்தின் மதிப்பை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்" - உச்ச...
‘தமிழ்நாடு நாள் விழா’ போட்டியில் வென்றோருக்கு பரிசு
திருவாரூா்: திருவாரூரில், தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நடைபெற்ற ‘தமிழ்நாடு நாள் விழா’ போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசுத்தொகை மற்றும் நற்சான்றிதழை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் வழங்கினாா்.
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 280 மனுக்கள் அளிக்கப்பட்டன. இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியா், அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி, குறித்த காலத்துக்குள் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டாா்.
தொடா்ந்து, முத்துப்பேட்டை பகுதியைச் சோ்ந்த பன்னீா்செல்வம் என்பவா் தீ விபத்தில் உயிரிழந்தமைக்காக, வருவாய்த் துறை சாா்பில் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வரப்பெற்ற ரூ.1,00,000-க்கான காசோலையை அவருடைய வாரிசுதாரருக்கு வழங்கினாா்.
மேலும், தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ- மாணவிகளுக்கிடையே நடைபெற்ற பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற 6 மாணவ- மாணவிகளுக்கு பரிசுத்தொகையுடன் நற்சான்றிதழையும் அவா் வழங்கினாா்.
முன்னதாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில், மாவட்டத்தில் நகா்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் முன்களப் பணியாளா்கள் மூலம் வீடுவீடாக மாற்றுத்திறனாளிகள் குறித்த விவரங்களை சேகரிக்கும் பணி நடைபெற்று வருவதையொட்டி, மக்களிடம் இதுகுறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த ஒலி பெருக்கி வாகனத்தை அவா் தொடக்கி வைத்தாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் கலைவாணி, தனி துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) தையல்நாயகி, மாவட்ட வருவாய் அலுவலா் (நில எடுப்பு) அருண்சத்யா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ராஜா, மாவட்ட வழங்கல் அலுவலா் செல்லபாண்டி, மாவட்ட ஊராட்சி செயலா் சந்தானம், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் கே. அமுதா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலா் புவனா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.