செய்திகள் :

"தமிழ்நாட்டிற்கு இதைக் கொண்டு வராமல், புதிய விமான நிலையங்கள் திறந்து என்ன பயன்?" - டி.ஆர்.பி. ராஜா

post image

தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடுவிற்குக் கடிதம் எழுதியுள்ளார். அதை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில்...

"மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரச்னையில் தலையிட்டு, தமிழ்நாட்டிற்கு விமானப் போக்குவரத்தில் மேற்கொள்ளப்படும் அநீதியைக் கலைய வேண்டும்.

விமானப் போக்குவரத்து அமைச்சர் கிஞ்சரபு ராம் மோகன் நாயுடு
விமானப் போக்குவரத்து அமைச்சர் கிஞ்சரபு ராம் மோகன் நாயுடு

இதற்குப் பதில்...

சென்னை - திருச்சி, சென்னை - தூத்துக்குடி வழியே செல்லும் ஒவ்வொரு இண்டிகோ விமானமும் நிரம்பித்தான் செல்கின்றன. ஆனாலும், மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் இந்தப் பாதையில் வழக்கமாகச் செல்லும் ATR விமானங்களுக்குப் பதிலாக, '320' விமானத்தை மாற்ற மறுக்கிறது.

இந்த விமானங்கள் மூன்று அடுக்கு இணைப்புப் பாதைகளுக்கு வேண்டுமானாலும் சரியாக இருக்கலாம். ஆனால், இந்தியாவின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்காற்றும் ஒரு மாநிலத்திற்குச் சரிப்பட்டு வராது.

ஏ.சி அதிகம் இல்லாத இந்த விமானங்களில் பயணிக்கும் பிசினஸ் பயணிகள் F11 ரேசர்கள் போல, வெப்பம் மற்றும் வியர்வை மிகுந்த பயணத்தில் ஒரு கிலோ அல்லது இரண்டு கிலோ குறைகிறார்கள்.

என்ன பயன்?

தமிழ்நாட்டிற்குள் இருக்கும் மாவட்டங்களை இணைக்கும் விமானங்கள் சிறிய ATR விமானங்களாக இருப்பது குறித்தும், பெரிய 320 விமானங்களாக இல்லாதது குறித்தும் பல தொழிலதிபர்கள் புகார் அளித்திருக்கிறார்கள்.

தமிழ்நாட்டிற்குப் பெரிய விமானங்களை அறிமுகப்படுத்தாமல், புதிய, நவீன விமான நிலையங்களை அறிமுகப்படுத்துவதில் என்ன பயன்?

ஒன்றிய அரசும், இண்டிகோ நிறுவனமும் அதிக கட்டணங்களை வசூலிக்கும்போது, பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதியைக் கருத்தில் கொள்ளாமல் புறக்கணிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

இண்டிகோ நிறுவனம்
இண்டிகோ நிறுவனம்

தவிர்க்கின்றனர்!

ATR விமானங்களில் டர்புலன்ஸ் மற்றும் கடினமான லேண்டிங் அடிக்கடி நடக்கும் என்பது நன்கு தெரிந்ததுதான். அதனால், அடிக்கடி பயணம் செய்பவர்கள் இந்த விமானங்களைத் தவிர்க்கின்றனர்.

இது குறித்துப் பல முதலீட்டாளர்கள் என்னிடம் புகார் தெரிவிக்கிறார்கள். நானும் இது குறித்துப் பல முறை ஒன்றிய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளேன். அமைச்சரிடமும் தெரிவித்துள்ளேன். எங்களது எம்.பிக்களும் தனிப்பட்ட முறையில் இதைத் தெரிவித்திருக்கிறார்கள்.

இருந்தும், ஒரு பிசியான பாதையில் இண்டிகோ இன்னும் சின்ன விமானத்தை இயக்கிக் கொண்டிருப்பது ஏன்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

OPS: "தமிழ்நாடு புறவழிச் சாலைகளிலும் சுங்க கட்டணமா?" - திமுக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் எதிர்ப்பு

தமிழ்நாட்டு புறவழிச் சாலைகளைப் பயன்படுத்தும் வாகனங்களுக்குச் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் முடிவை எடுத்துள்ள தி.மு.க அரசை எதிர்த்து அறிக்கை வெளியிட்டுள்ளார் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்... மேலும் பார்க்க

RN Ravi: "ஆளுநர் ரவிக்கு அப்படி என்ன தமிழர்களின் மீது வெறுப்பு?" - கனிமொழி எம்.பி கேள்வி

நேற்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி தனது பேச்சில் ஆளும் திமுக அரசின் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்தார். அந்தக் குற்றச்சாட்டுகளில் முக்கியமான ஒன்று, தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரி... மேலும் பார்க்க

மோடியின் சுதந்திர தின உரை: "தான் ஒரு RSS தயாரிப்பு என்பதை மீண்டும் உறுதி செய்திருக்கிறார்" - திருமா

டெல்லி செங்கோட்டையில் இந்தியாவின் 79-வது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் பிரதமர் மோடியின் கொடியேற்றத்துடன் இன்று நடைபெற்றது.அப்போது பிரதமர் மோடி தனது உரையில், 1948, 1975-77, 1992 என மூன்று முறை மத்திய அ... மேலும் பார்க்க

தூய்மைப் பணி: "11 மண்டலங்களை தனியார்மயமாக்கியது அதிமுக; அதற்கு அதிமுகவின் பதில் என்ன?" - திருமா

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே 13 நாள்களாக தனியார்மயமாதலை எதிர்த்தும், தங்களுக்குப் பணி நிரந்தரம் கோரியும் போராடி வந்த தூய்மைப் பணியாளர்களை, உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் ஆகஸ்ட் 13-ம் தேதி நள... மேலும் பார்க்க

புதுச்சேரி: "தனிநபர் வருமானம் ரூ. 3,02,680 லட்சமாக உயர்வு" - முதல்வர் ரங்கசாமி சுதந்திர தின உரை

நாட்டின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பாண்டிச்சேரி கடற்கரைச் சாலையில் தேசியக் கொடி ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார் முதல்வர் ரங்கசாமி.தொடர்ந்து பேசிய அவர், `... மேலும் பார்க்க

ஈரோடு: 79வது ஆண்டு சுதந்திர தினம் விழா; ஆயுதப்படை மைதானத்தில் கொண்டாட்டம் | Photo Album

ஈரோடு சுதந்திர தினவிழா ஈரோடு சுதந்திர தினவிழா ஈரோடு சுதந்திர தினவிழா ஈரோடு சுதந்திர தினவிழா ஈரோடு சுதந்திர தினவிழா ஈரோடு சுதந்திர தினவிழா ஈரோடு சுதந்திர தினவிழா ஈரோடு சுதந்திர தினவிழா ஈரோடு சுதந்திர த... மேலும் பார்க்க