செய்திகள் :

தமிழ்நாட்டுக் கொள்கையை மாற்றச் சொல்வதற்கு மத்திய அரசுக்கு உரிமை இல்லை! - அன்புமணி

post image

மத்திய அரசின் கொள்கைகளை மாநில அரசு ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என்ற கட்டாயமில்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

"மக்கள்தொகையை குறைக்க வேண்டும் என்ற நோக்கில் தென் மாநிலங்கள் கூடுதல் கவனம் செலுத்தி கடந்த 30, 40 ஆண்டு காலமாக நடவடிக்கைகள் மேற்கொண்டதன்படி தற்போது தமிழகத்திலும் கேரளத்திலும்தான் பிறப்பு விகிதம் மிகவும் குறைவாக உள்ளது. இதுவே நமக்கு பாதகமாக இருக்கக்கூடாது.

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக முதல்வர் கூட்டியுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாமக பங்கேற்று கருத்துகளைத் தெரிவிக்கும்.

இதையும் படிக்க | 'மேடையில் இப்படி பொய் சொல்லலாமா? - விஜய்க்கு அண்ணாமலை கேள்வி!

புதிய கல்விக்கொள்கையை ஏற்றால்தான் கல்வி நிதியை கொடுப்போம் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வலியுறுத்தி வருகிறார். இது தவறான போக்கு. எந்தவொரு மாநிலத்திலும் மத்திய அரசின் கொள்கைகளைத் திணிக்கக் கூடாது.

கல்வி பொதுப்பட்டியலில் இருக்கிறது. மத்திய அரசு ஒரு சட்டம் கொண்டுவந்தால் மாநில அரசு அதை ஏற்றுத்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயமில்லை. மும்மொழிக்கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் நிதி என்பது தவறான உதாரணம். அதனை ஏற்றுக்கொள்ளக் கூடாது. கடந்த 50, 60 ஆண்டு காலமாக இருமொழிக் கொள்கையை கடைப்பிடித்து வருகிறோம். எந்த மொழியையும் கற்றுக்கொள்ளலாம். ஆனால், திணிக்கக் கூடாது. தமிழ்நாட்டுக்கென்று ஒரு கொள்கை இருக்கிறது. அதனை மாற்றச் சொல்வதற்கு மத்திய அரசுக்கு உரிமை இல்லை" என்று கூறினார்.

மீனாட்சி அம்மன் கோவில் மதுரையின் பெருமை: ஞானேஷ்குமார்

மதுரை: சமீபத்தில் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக பதவியேற்ற ஞானேஷ் குமார் தனது குடும்பத்தினருடன் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தவர், மீனாட்சி அம்மன் கோவில் மதுரையின் பெருமை என தெரிவித்... மேலும் பார்க்க

மருத்துவத்தில் உயர்ந்து நிற்கும் தமிழ்நாடு: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

தமிழகத்தில் அரசு மருத்துவமனை பணிகளுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ள 2,642 மருத்துவா்களுக்கு புதன்கிழமை பணி நியமன ஆணைகளை வழங்கிய முதல்வா் மு.க.ஸ்டாலின், நாட்டின் மருத்துவத் தலைநகராக தமிழ்நாடு உயர்ந்து நிற... மேலும் பார்க்க

தமிழ் வளர்ச்சிக்காக திமுக என்ன செய்தது?: அன்புமணி கேள்வி

சேலம்: தமிழை வைத்து அரசியல் செய்யும் திமுக, இதுவரை தமிழ் வளர்ச்சிக்காக என்ன செய்தார்கள் என்று அன்புமணி கேள்வி எழுப்பினார்.சேலத்தில் நடைபெற்ற ஜி.கே.மணி இல்ல திருமண விழாவில் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அ... மேலும் பார்க்க

இந்தியை திமுக ஏன் இன்னமும் எதிர்க்கிறது?: மு.க.ஸ்டாலின் விளக்கம்

சென்னை: தமிழகத்தில் இந்தியை திமுக ஏன் இன்னமும் எதிர்க்கிறது என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து திமுகவினருக்கு புதன்கிழமை எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதா... மேலும் பார்க்க

தமிழர்கள் ஹிந்தி கற்றுக்கொள்வது புத்திசாலித்தனம்: ஸ்ரீதர் வேம்பு

வணிகரீதியான வளர்ச்சிக்கு பொறியாளர்கள், தொழில்முனைவோர் ஹிந்தி கற்றுக்கொள்வது அவசியம் என ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார். தில்லி, மும்பையில் பணியாற்றும் ஸோஹோ நிறுவன பொறியாளர்கள் மத்தியில் பேசி... மேலும் பார்க்க

உ.பி: ரூ.1 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த குற்றவாளி சுட்டுப்பிடிப்பு!

லக்னௌ: உத்தரப்பிரதேச மாநிலம்,காசியாபாத் கொள்ளை வழக்கில் ரூ.1 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த குற்றவாளி ஜிதேந்திரா புதன்கிழமை காலை மீரட்டில் நடந்த போலீஸ் என்கவுண்டரில் சுட்டுப்பிடிக்கப்... மேலும் பார்க்க