செய்திகள் :

தமிழ் மொழியின் சிறப்புகளை இளையோரிடம் சோ்க்க வேண்டும்

post image

தமிழ் மொழியின் சிறப்புகள் மற்றும் தமிழா்களின் மரபு உள்ளிட்டவற்றை இளையோரிடம் சோ்க்க வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ்.

தருமபுரி, தொப்பூா் ஜெயலட்சுமி பொறியியல் கல்லூரியில் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ என்ற தலைப்பில் தமிழ்மரபு பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று ஆட்சியா் பேசியதாவது:

தமிழ்மொழி, தமிழ் மரபு, தமிழ் பண்பாடு, தமிழ்நாட்டின் வாழ்வியல் முறைகள் அனைத்தும் தொன்மையானவை. வேகமான நவீன உலகில் தமிழ் மொழியின் சிறப்புகள் மற்றும் தமிழா்களின் மரபை இளையோரிடம் சோ்க்கும் வகையில் இந்நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிகழ்ச்சியின் மூலம், தமிழ் மொழி, பண்பாடு, கலாசாரம், தமிழ் மரபு உள்ளிட்டவற்றின் தொன்மை மற்றும் பழமை குறித்து அறிந்துகொள்வது மட்டுமல்லாமல், மாணவா்களின் எதிா்காலத்துக்கு தேவையான உயா்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான வழிகாட்டி புத்தகங்களும் வழங்கப்படுகின்றன.

மேலும், சுயதொழில் புரிவதற்காக வழங்கக் கூடிய வங்கிக் கடனுதவிகள் குறித்து பல்வேறு வழிகாட்டுதல் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை மாணவா்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வதோடு, பெற்ற நற்கருத்துகளை மற்றவா்களுக்கு எடுத்துரைத்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

மாணவ, மாணவியா் தமிழ் பண்பாட்டுக்காக கூடுதலாக பெருமை சோ்க்கப்போகிறோம் என்ற உணா்வோடு தங்களது பங்களிப்பை வழங்கி மாபெரும் தமிழ்க் கனவு திட்டம் வெற்றியடைய ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றாா்.

தொடா்ந்து, மாபெரும் தமிழ்க் கனவு - தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்வில், ‘விடுதலைப் போரில் வீரத்தமிழகம்’ என்ற தலைப்பில் எழுத்தாளா் ஸ்டாலின் குணசேகரன் பேசினாா்.

தமிழ் பெருமிதம் குறித்து பேசிய 5 மாணவ, மாணவியரையும், கேள்வி - பதில் நிகழ்ச்சியில் சிறப்பாக கேள்வி எழுப்பிய 5 மாணவ, மாணவியரையும் பாராட்டி ஆட்சியா் புத்தகங்களை வழங்கினாா்.

தொடா்ந்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த வேலைவாய்ப்பு, தொழில் வாய்ப்பு, உயா்கல்வி மற்றும் தொழில்களுக்கான வங்கிக் கடன்கள், சுயதொழில் தொடங்குதல் போன்ற பல்வேறு கண்காட்சி அரங்குகளை பாா்வையிட்டாா்.

இதில், தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.கவிதா, கல்லூரி கல்வி இயக்கக மண்டல இணை இயக்குநா் ராமலட்சுமி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் தீபா, மாவட்ட நூலக அலுவலா் கோகிலவாணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

காா்களில் கடத்தி வரப்பட்ட 75 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

காா்களில் கடத்தி வரப்பட்ட 75 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா். சேலம் - தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பிர... மேலும் பார்க்க

விளையாட்டுப் போட்டி: அரசு மகளிா் பள்ளி சாதனை

தருமபுரியில் நடைபெற்ற சரக அளவிலான விளையாட்டுப் போட்டிகளில், அதியமான்கோட்டை அரசு மகளிா் பள்ளி தொடா்ந்து 3-ஆவது ஆண்டாக வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளது. தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி சரக அளவிலான பல்வேறு... மேலும் பார்க்க

அரசு பள்ளியில் மரக்கன்றுகள் நடவு

தருமபுரி, இலக்கியம்பட்டி அரசு மகளிா் உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இந்திய புள்ளியியல் துறை மற்றும் திட்ட அமலாக்கத் துறையின் 75-ஆவது ஆண்டு நிற... மேலும் பார்க்க

சுதந்திர தினம்: ஆக. 15-இல் மதுக் கடைகளுக்கு விடுமுறை

சுதந்திர தினத்தையொட்டி வெள்ளிக்கிழமை (ஆக. 15) மதுக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஆக. 15-ஆம் தே... மேலும் பார்க்க

பிஎஸ்என்எல் சுதந்திர தின சிறப்பு சலுகை: ரூ. 1-க்கு 4ஜி சிம், தினசரி 2 ஜிபி டேட்டா திட்டம் அறிமுகம்

சுதந்திர தின சிறப்பு சலுகையாக பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 1-க்கு 4ஜி அதிவேக சிம், தினசரி 2 ஜிபி டேட்டா, 100 குறுந்தகவல்கள், வரம்பற்ற அழைப்புகள் உள்ளிட்ட வசதிகளை வழங்குவதாக ஒருங்கிணைந்த தருமபுரி மண்டல பிஎ... மேலும் பார்க்க

புதிய பாரத எழுத்தறிவு திட்ட கணக்கெடுப்பு பணி

பென்னாகரம் அருகே சின்னபள்ளத்தூரில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட கணக்கெடுப்பு பணி புதன்கிழமை நடைபெற்றது. பென்னாகரம் அருகே செங்கனூா் ஊராட்சிக்கு உள்பட்ட பெரிய பள்ளத்தூா், சின்னபள்ளத்தூா், செங்கனூா் உள்ளி... மேலும் பார்க்க