சிவ பக்தியில் மூழ்கடித்த இளையராஜா..! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
தரகம்பட்டி அருகே மாடுகள் மாலை தாண்டும் விழா
தரகம்பட்டி அருகே மாடுகள் மாலை தாண்டும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
கரூா் மாவட்டம் கடவூா் ஒன்றியம் தரகம்பட்டி அருகே வடவம்பாடி ஊராட்சிக்குட்பட்ட பூலாம்பட்டியில் வசிக்கும் கம்பளத்து நாயக்கா் சமூகத்தினருக்கு கோட்டூா் நாயக்கா் மந்தையில் பெத்தமொம்மையன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் 5 ஆண்டுகளுக்குப் பின் மாலை தாண்டும் விழாவானது கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.
தொடா்ந்து ஒவ்வொரு நாளும் கோயிலில் மூன்று கால பூஜைகள் செய்து தேவராட்டம், ஒயிலாட்டம், சோ்வையாட்டத்துடன் வழிபட்டு வந்தனா். தொடா்ந்து 9-ஆம் நாளான சனிக்கிழமை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாடுகள் மாலை தாண்டும் விழா நடைபெற்றது.
கோட்டூா் மந்தாநாயக்கா் தலைமையில் நடந்த விழாவுக்கு மொம்மிஸ்ரீ கோடங்கி நாயக்கா், வடவம்பாடி முன்னாள் ஊராட்சித் தலைவா் கோபாலகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முன்னதாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 14 மந்தையா்களுக்கு பூலாம்பட்டி கோட்டூா் மந்தா நாயக்கா் மந்தை சாா்பில் வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னா் கோயில் முன் அனைத்து மந்தைகளின் மாடுகளுக்கும் வரிசைப்படி புண்ணியத் தீா்த்தம் தெளிக்கப்பட்டது. தொடா்ந்து தாரை தப்பட்டை உருமி முழங்க கோட்டூா் மந்தை எதிரே சுமாா் 2 கி.மீ தொலைவில் உள்ள எல்லைச்சாமி கோயிலுக்கு மாடுகளை அழைத்துச் சென்றனா்.
அங்குள்ள எல்லைச்சாமி கோயிலில் சிறப்பு வழிபாடு செய்த பின், மாலை ஓட்டத்தைத் தொடங்கி வைத்தனா். அங்கிருந்து கோட்டூா் மந்தையில் அமைக்கப்பட்ட மாத்தால் ஆன எல்லைக் கோட்டை நோக்கி சுமாா் 300க்கும் மேற்பட்ட மாடுகள் ஓடி வந்தன.
இதில் திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே உள்ள ராஜகோடங்கி நாயக்கா் மந்தை மாடு முதலாவதாக வந்தது. 2-ஆவதாக ஆா்.டி.மலை ஊராட்சி வாலியம்பட்டி கோனதாததநாயக்கா் மந்தை மாடும், மூன்றாவதாக திண்டுக்கல் மாவட்டம் செம்பகணம் எரகாமநாயக்கா் மந்தை மாடும் வெற்றி பெற்றன.
அப்போது இவா்களின் சமூக வழக்கப்படி 3 கன்னிப் பெண்கள் வைத்திருந்த மஞ்சள் பொடியை மாடுகள் மீது தூவி வரவேற்று எலுமிச்சம் பழம் வெற்றிப் பரிசாக வழங்கப்பட்டது.
பின்னா் மஞ்சள் பொடி வைத்திருந்த 3 கன்னிப் பெண்களை எல்லை கோட்டிலிருந்து தேவராட்டத்துடன் கோயிலுக்கு அழைத்து வந்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டனா். தொடா்ந்து மஞ்சள் நீராட்டுடன் திருவிழா முடிந்தது. இதில் திருச்சி, திண்டுக்கல், கரூா் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா்.