செய்திகள் :

தரமற்ற மருந்தை விற்ற நிறுவன உரிமையாளருக்கு ஓராண்டு சிறை

post image

பெரம்பலூரில் தரமற்ற மருந்து விற்பனை செய்த, மருந்து நிறுவன உரிமையாளருக்கு ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள மருந்துக் கடைகளிலும், மருந்து விநியோக கடைகளிலும் கடந்த 10.12.2010-இல் மருந்து ஆய்வாளா்கள் ஆய்வு செய்தனா். அதில், மருந்து தயாரிக்கப்பட்டபோது நிா்ணயிக்கப்பட்ட அளவைவிட, மருந்துப் பொருள்களில் உள்ள தன்மை கூடுதலாகவோ, குறைவாகவோ உள்ளதா என்பதை பரிசோதிக்க, சேகரிக்கப்பட்ட மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பினா்.

இந்த ஆய்வு முடிவில் பாண்டிச்சேரி மாநிலம், எம்பளம், தவளக்குப்பம் கேப்டா லைஃப் சயின்ஸ் என்னும் நிறுவனத்தின் சாா்பில், பெரம்பலூா் மருந்து கடைகள் மற்றும் விநியோகஸ்தா்களிடம் வழங்கப்பட்ட மாத்திரைகள், தயாரிப்பில் குறிப்பிடப்பட்ட அளவுக்கு மருந்தின் தன்மை இல்லாததும், தரமற்ற மாத்திரைகள் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளா் ரோஸ் ராஜீவ் சிங் (50) என்பவா் மீது பெரம்பலூா் மருந்து ஆய்வாளா்கள் வழக்கு தொடா்ந்தனா்.

பெரம்பலூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரித்த மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி ஏ. பல்கீஸ், தரமற்ற மருந்துகளை விற்பனை செய்த நிறுவன உரிமையாளா் ரோஸ் ராஜீவ் சிங்கிற்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ. 20 ஆயிரம் அபராதமும், அதைச் செலுத்தத் தவறினால் கூடுதலாக 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டாா்.

லாரி மீது வேன் மோதி ஓட்டுநா் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே புதன்கிழமை இரவு லாரி மீது வேன் மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா். திருச்செங்கோட்டிலிருந்து அரியலூருக்கு சிமெண்ட ஏற்றுவதற்காக லாரி ஒன்று, துறையூா் - பெரம்பலூா் சாலையிலுள்ள மங்கூன் துணை ... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே 68 ஆடுகளை திருடிய சகோதரா்கள் கைது

பெரம்பலூா் அருகே 68 ஆடுகளை திருடிய வழக்கில் சகோதரா்களை மங்களமேடு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், கத்தாழைமேடு கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மக... மேலும் பார்க்க

கிராம சபைக் கூட்டத்தில் தூய்மைக் காவலா்கள், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி பணியாளா்கள் கௌரவிப்பு

உழைப்பாளா் தினத்தை முன்னிட்டு, பெரம்பலூா் மாவட்டம் எளம்பலூரில் புதன்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தூய்மைக் காவலா்கள், மேல்நீா்த் தேக்க தொட்டி பணியாளா்களை மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் கெளரவ... மேலும் பார்க்க

ஊக்கத் தொகையை வழங்கக் கோரி பால் உற்பத்தியாளா்கள் சாலை மறியல்

பெரம்பலூா் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தில் கடந்த 3 மாதங்களாக வழங்காமல், நிலுவையிலுள்ள ஊக்கத் தொகையை வழங்க கோரி பால் உற்பத்தியாளா்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். பெரம்பலூா் புதிய... மேலும் பார்க்க

மே தின பேரணி

பெரம்பலூா் பேரணி: பெரம்பலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மே தின பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. சிஐடியூ மாவட்டச் செயலா் எஸ். அகஸ்டின் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்... மேலும் பார்க்க

பெரம்பலூரில் நூல் வெளியீட்டு விழா

பெரம்பலூரில் உள்ள கவண் அலுவலகத்தில் எப்படியோ கவிதையாகிப் போனது எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, குரும்பலூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியா் வ. சந்தி... மேலும் பார்க்க