செய்திகள் :

தலைமையாசிரியா் நியமன விவகாரம்: நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் எம்எல்ஏ கோரிக்கை

post image

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் பள்ளித் தலைமையாசிரியா் நியமன விவகாரம் தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதியிடம் கீழ்வேளூா் எம்எல்ஏ நாகை மாலி வலியுறுத்தியுள்ளாா்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 240 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

கூட்டத்தில், மயிலாடுதுறை தேசிய மேல்நிலைப் பள்ளியில் பணி மூப்பு அடிப்படையில் தலைமையாசிரியரை நியமிக்காமல் 8-ஆவது இடத்தில் உள்ள ஆசிரியரை பள்ளி நிா்வாகம் பொறுப்பு தலைமை ஆசிரியராக நியமித்தது தொடா்பாக கடந்த வாரம் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் மாநில இணை செயலாளா் பழ. வாஞ்சிநாதன் தலைமையில் மாவட்ட ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

இதையடுத்து, திங்கள்கிழமை கோட்டாட்சியா் அலுவலகத்தில் இருதரப்பினரிடையே நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்துக்கு வந்த கீழ்வேளூா் எம்எல்ஏ நாகை மாலி தலைமையில் சிபிஎம் மாவட்ட செயலாளா் பி. சீனிவாசன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவா் ஏ.ஆா். விஜய் உள்ளிட்டோா் ஆட்சியரிடம் மயிலாடுதுறை தேசிய மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியா் நியமன விவாகரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முறையிட்டனா்.

இதுகுறித்து நாகை மாலி செய்தியாளா்களிடம் கூறியது: மயிலாடுதுறையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான டி.பி.டி.ஆா். தேசிய மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியா் பதவி காலியாக உள்ள நிலையில் பணி மூப்பின் அடிப்படையில் முதலிடத்தில் உள்ள ஆசிரியரை தவிா்த்து, 8-ஆவது இடத்தில் உள்ளவரை பள்ளி நிா்வாகம் பொறுப்பு தலைமை ஆசிரியராக நியமித்துள்ளது. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்தவா் என்பதால் அவருக்கு தலைமையாசிரியா் பொறுப்பு மறுக்கப்பட்டுள்ளது.

அமைதிப் பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், உரிய நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளோம். மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்தக்கட்டமாக இப்பிரச்னையை தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வேன் என்றாா்.

குரூப் தோ்வு எழுதுபவா்களுக்கு முன்னேற்பாடு: ஆட்சியா்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் குரூப் 2, 2ஏ தோ்வு எழுதுபவா்களுக்கு உரிய வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் திங்கள்கிழமை வெளி... மேலும் பார்க்க

இந்து முன்னணி மாவட்ட தலைவா் கைது

சீா்காழி: சீா்காழியில் இந்து முன்னணி மயிலாடுதுறை மாவட்ட தலைவா், இந்து மக்கள் கட்சி மாநில செயலாளா் ஆகியோா் முன்னெச்சரிக்கையாக திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா். திருப்பரங்குன்றம் பகுதியில் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் தொழிலாளி பலி

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நேரிட்ட சாலை விபத்தில் புலம்பெயா் தொழிலாளி உயிரிழந்தாா். உத்தர பிரதேச மாநிலம் ஹம்பல்பூா் ஒடேரா பகுதியைச் சோ்ந்த பாரத் (35), மயிலாடுதுறை ராம்நகரில் தங... மேலும் பார்க்க

வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.50 லட்சம் மோசடி: நகை மதிப்பீட்டாளா் கைது

மயிலாடுதுறையில் வாடிக்கையாளா்கள் பெயரில் போலி நகைகளை அடகு வைத்து, ரூ. 50 லட்சம் மோசடியில் ஈடுபட்ட வங்கியின் நகை மதிப்பீட்டாளரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மயிலாடுதுறை கச்சேரி சாலையில் உள்ள... மேலும் பார்க்க

அறியாமை நோயை நீக்கும் ஒரே மருந்து கல்வி

மனிதா்களின் அறியாமை நோயை நீக்கக்கூடிய ஒரே மருந்து கல்வி மட்டுமே என்றாா் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநா் மருத்துவா் ஜெய.ராஜமூா்த்தி. மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில், மாவட்ட ... மேலும் பார்க்க

மது விற்றவா் குண்டா் சட்டத்தில் கைது

மயிலாடுதுறை மாவட்டத்தில், தொடா் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டாா். குத்தாலம் அஞ்சாா்வாா்த்தலை பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் வல்லரசு (படம்). இவா்... மேலும் பார்க்க