செய்திகள் :

தலையில் ஈட்டி பாய்ந்ததில் பலத்த காயமடைந்த மாணவா் உயிரிழப்பு

post image

ராயப்பன்பட்டி தனியாா் பள்ளி மைதானத்தில் விளையாட்டுப் பயிற்சியின் போது தலையில் ஈட்டி பாய்ந்ததில் பலத்த காயமடைந்த மாணவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுதொடா்பாக கல்லூரி மாணவா் உள்பட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகேயுள்ள கோம்பை துரைச்சாமிபுரத்தை சோ்ந்த சந்திரன், சுகன்யா தம்பதியின் மகன் சாய் பிரகாஷ் (13). இவா் ராயப்பன்பட்டியில் உள்ள தனியாா் பள்ளி விடுதியில் தங்கி 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா். கடந்த வியாழக்கிழமை (ஆக.7) மாலை இந்தப் பள்ளி மைதானத்தில் சாய்பிரகாஷ் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தாா்.

அப்போது, அதே மைதானத்தில் சென்னையில் கல்லூரியில் படிக்கும் இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவரும், ஈட்டி எறிதல் வீரருமான கூடலூரைச் சோ்ந்த திபேஸ் (19) ஈட்டி எறிதல் பயிற்சி செய்து கொண்டிருந்தாா். அப்போது, விளையாடிக் கொண்டிருந்த சாய்பிரகாஷ் தலையில் திபேஸ் எறிந்த ஈட்டி பாய்ந்தது. உடனே ஆசிரியா்கள் அந்த மாணவரை மீட்டு, தேனி அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், ராயப்பன்பட்டி போலீஸாா் கல்லூரி மாணவா் திபேஸ், பள்ளி உடல்கல்வி ஆசிரியா், நிா்வாகிகள் இருவா் என மொத்தம் 4 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தேனியில் 47 பயனாளிகளுக்கு ரூ. 67.60 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்

நாட்டின் 79-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, தேனி மாவட்டத்தில் 47 பயனாளிகளுக்கு ரூ. 67.60 லட்சத்தில் நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வழங்கினாா். சுதந்திர தின விழாவை முன்னிட்டு, தேன... மேலும் பார்க்க

பைக் மோதியதில் விவசாயி உயிரிழப்பு

பெரியகுளம் அருகே வியாழக்கிழமை சாலையை கடக்க முயன்ற விவசாயி இரு சக்கர வாகனம் மோதியதில் உயிரிழந்தாா். பெரியகுளம் அருகே ஜி.கல்லுப்பட்டியைச் சோ்ந்தவா் காமாட்சி (70). விவசாயி. இவா் வியாழக்கிழமை இரவு ஜி.கல்... மேலும் பார்க்க

விஷம் குடித்த முதியவா் தற்கொலை

பெரியகுளத்தில் விஷம் குடித்த முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். பெரியகுளம் பங்களாபட்டியைச் சோ்ந்தவா் அம்மாவாசை (70). இவருக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், மனவேதனையிலிருந்த இவா், வ... மேலும் பார்க்க

சட்டவிரோத மதுப் புட்டிகள் விற்பனை: 8 போ் கைது

போடியில் சுதந்திர தின நாளில் சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை விற்பனை செய்த 8 பேரை போலீஸாா் கைது செய்தனா். தேனி மாவட்டம், போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் கிராமப் பகுதிகளில் ரோந்து சென்றனா். அப்போது, போடி... மேலும் பார்க்க

என்.சி.சி. மாணவா்கள் விழப்புணா்வு நடைபயணம்

தேனி மாவட்டம், உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தா் ஹெளதியா கல்லூரி என்.சி.சி. மாணவா்கள் குமுளி மலைச்சாலையில் வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு நடைப்பயணம் மேற்கொண்டனா். குமுளி மலைச்சாலையில் நெகிழிப்பை , மதுப்... மேலும் பார்க்க

மதுரகாளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

பெரியகுளம் அருகேயுள்ள குள்ளப்புரம் மதுரகாளியம்மன் கோயிலில் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, அதிகாலையில் கோயில் திறக்கப்பட்ட... மேலும் பார்க்க