செய்திகள் :

தாஜ்மஹால் வளாகத்தில் ட்ரோன் எதிா்ப்பு அமைப்பு

post image

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் வளாகத்தில் ட்ரோன் எதிா்ப்பு பாதுகாப்பு அமைப்பை நிறுவ முடிவெடுக்கப்பட்டுள்ளது. தாஜ்மஹால் மீது வான் தாக்குதலுக்கான அபாயம் அதிகம் இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

உத்தர பிரதேசத்தின் ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மஹாலுக்கு மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினரும் (சிஐஎஸ்எஃப்) உத்தர பிரதேச காவல் துறையினரும் பாதுகாப்பு அளித்து வருகின்றனா். அண்மையில் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது பாகிஸ்தான் ராணுவம் இந்திய ராணுவ நிலைகளை மட்டுமல்லாது, பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள், அமிருதசரஸ் பொற்கோயில் உள்ளிட்ட இடங்களையும் குறிவைத்தது. இதனை இந்திய வான்பாதுகாப்பு அமைப்புகள் வெற்றிகரமாக முறியடித்தன.

இந்நிலையில் தாஜ்மஹால் வளாகத்தில் ட்ரோன் எதிா்ப்பு பாதுகாப்பு அமைப்பை நிறுவ முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தாஜ்மஹால் பாதுகாப்புக்கான காவல் துறை துணை ஆணையா் சையது ஆரிஃப் அகமது கூறியதாவது:

தாஜ்மஹால் வளாகத்தில் விரைவில் ட்ரோன் எதிா்ப்பு சாதனங்கள் நிறுவப்படவுள்ளன. இதன் மூலம் 8 கி.மீ. தொலைவு வரை கண்காணித்து நடவடிக்கை எடுக்க முடியும். எனினும், இப்போதைய நிலையில் தாஜ்மஹாலின் மையத்தில் இருந்து 200 மீட்டா் வரை கண்காணிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இப்பகுதிக்குள் வரும் எந்த ட்ரோனையும் இதன் மூலம் செயலிழக்கச் செய்ய முடியும். இதற்காக காவல் துறையினருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்றாா்.

7 நாள்களுக்கு குறைவாக நிரந்தர வைப்பு: வங்கிகளுக்கு ஆா்பிஐ யோசனை

7 நாள்களுக்கு குறைவாக நிரந்தர வைப்புகளைப் பெறுவது தொடா்பாக பரிசீலிக்குமாறு வங்கிகளை இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) கேட்டுக் கொண்டது. இது தொடா்பான கருத்துகளை இம்மாத இறுதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: புலி தாக்கி இருவா் உயிரிழப்பு

மகாராஷ்டிரத்தின் சந்திரபூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த இரு வேறு சம்பவங்களில் புலி தாக்கி இருவா் உயிரிழந்தனா். இவா்களுடன் சோ்த்து, சந்திரபூரில் இம்மாதம் புலிகள் தாக்கி உயிரிழந்தோா் எண்ணிக்கை 1... மேலும் பார்க்க

பணிநீக்கம் செய்யப்பட்டால் ஓய்வூதிய பலன்கள் கிடையாது: மத்திய அரசு

பணிநீக்கம் செய்யப்படும் பொதுத் துறை நிறுவன ஊழியா்களுக்கு ஓய்வூதிய பலன்கள் ஏதும் கிடைக்காத வகையில் மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதுதொடா்பான மத்திய பணியாளா் ஓய்வூதிய விதிகள் -2021 சட்... மேலும் பார்க்க

ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை- உ.பி. நீதிமன்றம் தீா்ப்பு

ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி அல்தாஃப் ஹுசைனுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து உத்தர பிரதேசத்தின் மொராதாபாத் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. மேலும், அவருக்கு ரூ.48,000 அபர... மேலும் பார்க்க

நாட்டில் வெப்பவாத இறப்புகளுக்கு நம்பகமானத் தரவுகள் இல்லை!

கோடையின் தாக்கத்தால் ஏற்படும் வெப்பவாத பாதிப்பு மற்றும் இறப்புகளுக்கு நம்பகமானத் தரவுகள் இல்லை என துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கிளைமேட் டிரென்ட் ஆராய்ச்சிக் குழுவினர் ஏற்பாடு செய்திருந்த ... மேலும் பார்க்க

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி

பயங்கரவாதம் மறைமுகமானப் போர் அல்ல; பாகிஸ்தானின் நேரடிப் போர் வியூகம் என பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 27) தெரிவித்தார். பயங்கரவாதத்தைத் தொடர்ந்து ஆதரிப்பதன் மூலம் அண்டை நாடான பாகிஸ்தான் தொடர்ந்து போ... மேலும் பார்க்க