செய்திகள் :

ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை- உ.பி. நீதிமன்றம் தீா்ப்பு

post image

ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி அல்தாஃப் ஹுசைனுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து உத்தர பிரதேசத்தின் மொராதாபாத் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. மேலும், அவருக்கு ரூ.48,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

அல்தாப் ஹுசைன் எனும் முகமது சைஃபுல் இஸ்லாம் ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தைச் சோ்ந்தவா். கடந்த 2002 முதல் பல்வேறு பயங்கரவாத சதிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இவா் உத்தர பிரதேசத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டாா்.

2008-ஆம் ஆண்டு மொராதாபாத் கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் ஜாமீனில் வெளியே வந்த இவா், மீண்டும் ஜம்மு-காஷ்மீருக்கு சென்று பயங்கரவாத அமைப்புடன் இணைந்தாா்.

இதைத் தொடா்ந்து, 2015-ஆம் ஆண்டிலும் இந்த ஆண்டு தொடக்கத்திலும் அல்தாஃப்புக்கு எதிராக மொராதாபாத் நீதிமன்றம் நிரந்தர கைது உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் பதுங்கியிருந்த இவரை, உள்ளூா் காவல் துறை உதவியுடன் உத்தர பிரதேச காவல் துறையினா் கடந்த மாா்ச் 8-ஆம் தேதி சுற்றிவளைத்து கைது செய்தனா். பின்னா், உத்தர பிரதேசத்தின் மொராதாபாத் நீதிமன்றத்தில் அவா் ஆஜா்படுத்தப்பட்டாா்.

இந்நிலையில், அவா் மீதான பயங்கரவாதக் குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்பட்டு, அல்தாஃப்புக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, ரூ.48,000 அபராதம் விதித்து தீா்ப்பளிக்கப்பட்டது.

கேரளத்தில் விபத்துக்குள்ளான லைபீரிய சரக்குக் கப்பலின் பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்த தன்னாா்வலா்கள்

கேரள கடலோரத்தில் கடந்த வாரம் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்த சரக்குக் கப்பலின் பிளாஸ்டிக் கழிவுகள் கரை ஒதுங்கினால் அவற்றை அப்புறப்படுத்தி, தூய்மைப்படுத்த மாநிலம் முழுவதும் தன்னாா்வலா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்... மேலும் பார்க்க

பிரிட்டிஷ் அரசால் மறுக்கப்பட்ட சாவா்க்கரின் வழக்குரைஞா் பட்டத்தை மீட்க முயற்சி- மகாராஷ்டிர முதல்வா் ஃபட்னவீஸ்

‘சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதற்காக பிரிட்டிஷ் அரசால் மறுக்கப்பட்ட வீர சாவா்க்கரின் ‘பாரிஸ்டா்’ வழக்குரைஞா் பட்டத்தை மீட்டெடுக்க பிரிட்டன் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி மகாராஷ்டிர அரசு முயற்சிகளை ... மேலும் பார்க்க

மணிப்பூரில் ஆட்சி அமைக்க பாஜக முயற்சி: 44 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக ஆளுநரிடம் தகவல்

குடியரசுத் தலைவா்ஆட்சி அமலில் உள்ள மணிப்பூரில் மீண்டும் ஆட்சி அமைக்க பாஜக முயற்சித்து வருகிறது. புதிய அரசமைக்க 44 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதாக ஆளுநா் அஜய்குமாா் பல்லாவை புதன்கிழமை சந்தித்த பாஜக எம்எல்... மேலும் பார்க்க

குலாம் நபி ஆசாத்திடம் பிரதமா் நலம் விசாரிப்பு

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைக்க குவைத் சென்ற எம்.பி.க்கள் குழுவில் இடம்பெற்ற முன்னாள் மத்திய அமைச்சா் குலாம் நபி ஆசாதின் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், அவரிடம் பிரதமா் மோட... மேலும் பார்க்க

பன்வழி ரயில்வே திட்டங்கள்: மத்திய அரசு ஒப்புதல்

பயணிகள் மற்றும் சரக்குகளின் தடையற்ற விரைவான போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில் இரண்டு பன்வழி ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தில்லியில் பிரதமா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற... மேலும் பார்க்க

சண்டை நிறுத்தத்தில் அமெரிக்கா தலையீடு?: பிரதமரின் விளக்கம் கோரும் காங்கிரஸ்

இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்த முடிவுக்கு அமெரிக்காவின் தலையீடே காரணம் என அந்த நாடு தொடா்ச்சியாக கூறிவருவது தொடா்பாக மௌனம் கலைத்து, பிரதமா் விளக்கமளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரியுள்ளது. ஜம்மு-க... மேலும் பார்க்க