செய்திகள் :

தாணே: 3 நாள்களில் 10 கரோனா பாதிப்புகள் உறுதி!

post image

மகாராஷ்டிரத்தின் தாணே மாவட்டத்தில் கடந்த 3 நாள்களில் 10 கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

தெற்காசிய நாடுகளில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் இந்தியாவின் பல்வேறு மாவட்டங்களிலும் கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மகாராஷ்டிரத்தின் தாணே நகரில் கடந்த 3 நாள்களில் 10 கரோனா பாதிப்புகள் உறுதியாகியுள்ளதால், அங்குள்ள மருத்துவமனைகள் அனைத்தும் தயார்நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக, தாணே நகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதிக்கப்பட்ட நோயாளிகள் அனைவரிடமும் லேசான அறிகுறிகள் மட்டுமே தென்படுவதாகவும், அவர்கள் அனைவரும் தங்களது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், தாணே நகராட்சி ஆணையர் சௌரப் ராவ், பொதுநலத் துறை மற்றும் மருத்துவமனைகள் அனைத்தும் எச்சரிக்கையுடன் தயார்நிலையில் இருக்கவும், கரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சை தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார்.

இந்தத் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த, அம்மாநில தலைமைச் சுகாதார ஆணையர் மருத்துவர் சேத்னா நிதில், உயர்நிலை அதிகாரிகளுடன் நேற்று (மே 23) ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

அதன்பின்னர், அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

’தேவையான அளவுக்கு மருந்துக்கள் அனைத்து மருத்துவ நிலையங்களிலும் சேமிக்கப்பட்டுள்ளன மற்றும் கரோனா பரிசோதனைக் கருவிகளும் தயார்நிலையிலுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கரோனா சிகிச்சைக்காக அங்குள்ள முக்கிய மருத்துவமனைகளில் படுக்கைகள் தயார்நிலையிலுள்ளதாகவும், இந்தத் தொற்றுப் பரவல் தற்போது கட்டுப்பாட்டிலுள்ளதால் மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:பினராயி விஜயனுக்குப் பிறந்தநாள்: பிரதமர் உள்பட தலைவர்கள் வாழ்த்து!

பிரதமர் மோடியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!

நீதி ஆயோக் கூட்டம் நிறைவு பெற்றதையடுத்து பிரதமர் மோடியைச் சந்தித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார். ஆண்டுதோறும் நடைபெறும் நீதி ஆயோக் கூட்டம், தில்லி பாரத் மண்டபத்தில் பிரதமர் மோடி தலைமையில் இன்ற... மேலும் பார்க்க

இந்தியாவின் ஒற்றுமையைக் கேள்விக்குள்ளாக்குவதே ராகுலின் பழக்கம்: ஜோதிராதித்ய சிந்தியா

இந்தியர்கள் ஒன்றுபட்டிருந்தாலும், நாட்டின் ஒற்றுமையைக் கேள்விக்குள்ளாக்கும் பழக்கம் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியிடம் இருப்பதாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியுள்ளார். வெளியு... மேலும் பார்க்க

அசாமில் பாக். ஆதரவாளர்களின் கைதுகள் 76 ஆக உயர்வு!

வடகிழக்கு மாநிலமான அசாமில் கைது செய்யப்பட்டு வரும் பாகிஸ்தான் ஆதரவாளர்களின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது. பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து, அசாமில் பாகிஸ்தானுக்கு ஆதரவான நடவடி... மேலும் பார்க்க

கட்டுமானப் பொருள்கள் வைப்பது தொடர்பாக எழுந்த வாக்குவாதம்: துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி

பிகாரில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலின்போது நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியானார்கள்.பிகார் மாநிலம், பக்சர் மாவட்டத்தில் உள்ள அஹியாபூர் கிராமத்தில் மணல் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களை சாலைய... மேலும் பார்க்க

பாகிஸ்தானுடன் ராகுல் நேரடி ஒத்துழைப்பு! பாஜக கண்டனம்!

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்ட பூஞ்ச் பகுதியைப் பார்வையிட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அப்பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலை ஒரு சோகமான நிகழ்வு என்று குறிப்பிட... மேலும் பார்க்க

மக்கள் பீதியடைய வேண்டாம்: கர்நாடக சுகாதார அமைச்சர்

கர்நாடகத்தில் கரோனா தொற்று படிபடியாக அதிகரித்துவரும் நிலையில், மக்கள் பீதியடைய அவசியமில்ல என்று கர்நாடக சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களுடன் பேசிய அவர், ... மேலும் பார்க்க