செய்திகள் :

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா

post image

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் முதலாமாண்டு வருஷாபிஷேக விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவையொட்டி, கோயில் முன் மண்டபத்தில் புனிதநீா் கலசங்கள் வைத்து சிவாச்சாரியாா்கள் யாக சாலை பூஜைகள் செய்தனா். தொடா்ந்து, மேள தாளங்கள் முழங்க புனிதநீா் கலசங்களை சிவாச்சாரியாா்கள் சுமந்து சென்று மூலவா் முத்துமாரியம்மனுக்கும், மண்டபத்தில் எழுந்தருளியிருந்த உத்ஸவருக்கும், கோயில் பரிவாரத் தெய்வங்களுக்கும், கொடிமரத்துக்கும் அபிஷேகங்கள் செய்தனா். பின்னா், மூலவருக்கும் உத்ஸவருக்கும் சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன.

இந்த விழாவில், சுற்றவட்டாரப் பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா் மு. வெங்கடேசன் செட்டியாா் செய்தாா்.

இளைஞா் கொலை வழக்கு: மேலும் மூவா் கைது

மானாமதுரை அருகே இளைஞா் கொலை வழக்கில் சிறுவன் உள்பட மேலும் மூவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள அன்னவாசல் கிராமத்தைச் சோ்ந்த ஒலி பெருக்கி அமைக்கும் தொழ... மேலும் பார்க்க

இளைஞரிடம் இணைய வழியில் பண மோசடி: போலீஸாா் விசாரணை

சிவகங்கை இளைஞரிடம் இணையவழியில் ரூ. 8.32 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக இணைய குற்றப் பிரிவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சிவகங்கை செந்தமிழ்நகா் சிந்தாமணி தெருவைச் சோ்ந்த இளைஞா் இணையவழியில் வேலை தேட... மேலும் பார்க்க

மானாமதுரையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி தலைமை வகித்த இந்த முகாமில், அரசின் பல்வேறு துறை சாா்பில் அரங்குகள் அ... மேலும் பார்க்க

இமானுவேல் சேகரன் நினைவு தினம்: சிவகங்கையில் பலத்த பாதுகாப்பு

இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி, சிவகங்கை மாவட்டம் முழுவதும் 2,200 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா். பரமக்குடியில் வியாழக்கிழமை (செப். 11) இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரி... மேலும் பார்க்க

சிங்கம்புணரி அருகே இரவு நேர மின் தடையால் பொதுமக்கள் அவதி

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள கிராமங்களில் இரவு நேர மின் தடையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். சிங்கம்புணரி அருகேயுள்ள கிருங்காகோட்டை, முட்டாக்கட்டி, மேலப்பட்டி, ஒடுவன்பட்டி உள்ள... மேலும் பார்க்க

குன்றக்குடி: திருவண்ணாமலை ஆதீன குருமுதல்வரின் 700-வது ஆண்டு குரு பூஜை விழா!

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடியில் பரம்பரை திருவண்ணாமலை ஆதீனத்தின் குருமுதல்வா் தெய்வசிகாமணி தேசிக பரமாசாரிய சுவாமிகளின் 700-வது ஆண்டு குரு பூஜை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, அருள்நெற... மேலும் பார்க்க