செய்திகள் :

தாய்லாந்திலிருந்து ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல்; இந்திய ஹாக்கி அணி முன்னாள் வீரர் சிக்கியது எப்படி?

post image

மும்பை பேலாப்பூரில் கடந்த வாரம் பில்டர் குருநாத் என்பவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தனது மகன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள போதைப்பொருள் வழக்கிற்காக தன்னை போலீஸார் அடிக்கடி விசாரணைக்கு அழைத்துச் சித்ரவதை செய்வதாக குறிப்பிட்டு இருந்தார்.

இதையடுத்து போதைப்பொருள் தொடர்பாக நவிமும்பை போலீஸார் விசாரணையைத் தொடங்கினர்.

இதில் நவிமும்பை நெரூல் பகுதியில் வீட்டு மாடியில் போதைப்பொருள் பரிவர்த்தனை நடக்க இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

கஞ்சா
கஞ்சா

இதையடுத்து போலீஸார் அங்கு ரெய்டு நடத்தி கஞ்சாவைப் பறிமுதல் செய்ததோடு அக்கட்டிட உரிமையாளர் ஆசிஷ் மற்றும் அகமத் ஆகிய இரண்டு பேரை மட்டும் கைது செய்தனர்.

ஆனால் ஆகாஷ் என்பவர் தப்பித்துவிட்டார். அவர்களிடம் விசாரித்த கஞ்சாவை ஹாக்கி வீரர் சுஜித் மற்றும் போதைப்பொருள் வியாபாரி சாஹில் ஆகியோரிடமிருந்து வாங்கியதாக தெரிவித்தனர்.

இதையடுத்து நெரூல் பகுதியில் இரண்டு பேரும் கைது செய்யப்பட்டனர். சுஜித் இந்திய ஹாக்கி அணிக்காக விளையாடி இருக்கிறார். சுஜித்தும், சாஹிலும் ஹைட்ரோபோனிக் முறையில் தாய்லாந்தில் வளர்க்கப்பட்ட கஞ்சாவை, விமானத்தின் மூலம் கடத்தி வந்தது தெரிய வந்தது.

கஞ்சா மும்பை விமான நிலையத்திற்கு வந்ததும் கஸ்டம்ஸ் ஏஜெண்ட் கமால் என்பவர் சுங்க அதிகாரி பிரசாந்த் கவுர் என்பவர் துணையோடு விமான நிலையில் இருந்து வெளியில் கொண்டு வந்ததாக நவிமும்பை குற்றப்பிரிவு துணை போலீஸ் கமிஷனர் அமித் காலே தெரிவித்தார்.

கமால் மற்றும் பிரசாந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் மேற்கொண்டு விசாரித்தபோது நவிமும்பை போலீஸ் சந்தீப் மற்றும் சஞ்சய் ஆகியோர் கஸ்டம்ஸ் ஏஜெண்ட் கமாலுடன் தொடர்பில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களும் கைது செய்யப்பட்டனர்.

சுஜித்தும், கமாலும் போதைப்பொருளை விற்பனை செய்து பணத்தை கூரியர் மூலம் தாய்லாந்துக்கு அனுப்பியதும், அங்குப் பணம் கிரிப்டோகரன்சியாக மாற்றப்பட்டதாகப் போதைப்பொருள் தடுப்புபிரிவு இன்ஸ்பெக்டர் சந்தீப் நிகாடே தெரிவித்தார்.

நைஜீரிய போதைப்பொருள் வியாபாரிகள்

அவர் மேலும் கூறுகையில், கடந்த மார்ச் மாதம் 1000 கோடி மதிப்பு போதைப்பொருள் பிடிபட்ட வழக்கில் தேடப்படும் நவீன் என்பவர் தாய்லாந்து அல்லது மலேசியாவில் இருந்து கொண்டு போதைப்பொருள் வியாபாரம் செய்து வருவதாகவும், அவனைப் பிடிக்க ரெட் கார்னர் நோட்டீஸ் விடுக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டனர். இதே போன்று நவிமும்பை கார்கர் பகுதியில் போலீஸார் ரெய்டு நடத்தி ஆப்பிரிக்கப் பிரஜைகள் போதைப்பொருள் பரிவர்த்தனை செய்யும் இடத்தில் 10க்கும் மேற்பட்ட நைஜீரிய பிரஜைகளைக் கைது செய்து அவர்களிடமிருந்து போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான அனைவரும் விசா முடிவடைந்தவர்கள் ஆவர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

`கஸ்டமர்ஸ்க்கு மொபைல் ஆப்; சேப்டிக்கு வாடகை வீடு' - பாலியல் தொழில் செய்த 4 பெண்கள் கைது

தஞ்சாவூரில் தமிழ் பல்கலைக்கழக காவல் நிலையத்திற்கு உட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் வாடகைக்கு வீடு எடுத்து பாலியல் தொழில் நடப்பதாக போலீஸாருக்கு தகவல் சென்று கொண்டே இருந்தது. இதில் சில பெண்கள் தொடர்ந்து ... மேலும் பார்க்க

திருமணம் மீறிய உறவு; 5 வயது சிறுவனுக்குப் பாலியல் தொல்லை; நண்பரோடு கைதான இளைஞர்; பின்னணி என்ன?

திருச்சி, ஏர்போர்ட் வசந்த நகரைச் சேர்ந்தவர் நாசர் அலி (வயது: 30). இவர், கே.கே நகர்ப் பகுதியில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார்.இவருக்கும் திருமணமான ஒரு பெண்ணுக்கும் திருமணம் மீறிய உறவு இருந்து வந்துள்ள... மேலும் பார்க்க

திருமணம் மீறிய உறவு; இடையூறாக இருந்த குழந்தையை கொன்ற நண்பர்கள்.. மது போதையில் வெறிச்செயல்

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகே வசிக்கும் சரோஜா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை இருக்கும் நிலை... மேலும் பார்க்க

மாணவிக்குப் பாலியல் தொல்லை? விசாரணைக்குப் பயந்து தூக்க மாத்திரை சாப்பிட்ட ஆசிரியர்; என்ன நடந்தது?

சென்னையைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அரசுப் பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.இந்நிலையில் கடந்த 23.4.2025-ம் தேதி பள்ளி முடிந்து வீட்டுக... மேலும் பார்க்க

`வங்கியில் ரூ.8 கோடி மோசடி' - மகாராஷ்டிரா அமைச்சர் மீது வழக்கு.. நடந்தது என்ன?

ராதாகிருஷ்ண விகே பாட்டீல் யார்?மகாராஷ்டிரா பா.ஜ.க கூட்டணி அரசில் நீர்வளத்துறை அமைச்சராக இருப்பவர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர் தனது மகனுக்கு காங்கிரஸ் கட்சி சீட் கொடுக்க... மேலும் பார்க்க

`இட்லி பார்சல், ரூ.8 கூடுதலாக வாங்கிய உணவகத்துக்கு ரூ.30,000 அபராதம்' - நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி

விழுப்புரம் வழுதரெட்டி முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவர், அனைத்து நுகர்வோர் பொதுமக்கள் சுற்றுச்சூழல் பொது நலச் சங்கத்தின் மாநிலத் தலைவராக உள்ளார். இவர் கடந்த 2022 -ம் ஆண்டு செப்டம்... மேலும் பார்க்க