செய்திகள் :

தாய்லாந்து சந்தையில் துப்பாக்கிச் சூடு: 6 பேர் பலி!

post image

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கின் உள்ள சந்தையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தார்.

சடுசக் பகுதியில் இயங்கிவரும் காய்கறி சந்தையில் மக்கள் வழக்கம்போல் பரபரப்பாகப் பொருள்களை வாங்கிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர் அங்கிருந்த பாதுகாவலர்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் பாதுகாவலர்கள் நால்வரும், ஒரு பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கொலையாளி தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுதொடர்பாக போலீஸார் கூறியதாவது,

பயங்கரவாத துப்பாக்கிச்சூடு சம்பவம் பற்றி விசாரித்து வருகிறோம். துப்பாக்கிச்சூடு நடத்திய பிறகு கொலையாளியை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. தாய்லாந்துக்கும்-கம்போடியாவிற்கும் இடையிலான மோதல்போக்கு இதற்குக் காரணமாக என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

At least six people have been killed in a mass shooting incident in Thailand on Monday. As per reports, four of the deceased have been identified as security guards at a popular fresh food market in Bangkok.

இந்த நூற்றாண்டின் நீண்ட சூரியகிரகணம் எப்போது? 6 நிமிடங்கள் உலகமே இருளில்!

இந்த நூற்றாண்டின் மிக நீண்ட நேர சூரியகிரகணமானது 2027ஆம் ஆண்டு ஆகஸ்ட் இரண்டாம் தேதி நிகழவிருப்பதாகவும், அப்போது ஐரோப்பா, வட ஆப்ரிக்க, மத்திய கிழக்கு நாடுகள் 6 நிமிடங்களுக்கு இருளில் மூழ்கலாம் என்றும் க... மேலும் பார்க்க

போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட தாய்லாந்து - கம்போடியா!

தாய்லாந்து - கம்போடியா நாடுகளுடனான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இரு நாடுகளும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளன. தாய்லாந்து - கம்போடியா எல்லை தொடர்பான பிரச்சனையில் இரு நாடுகளுக்கு இடையே போர... மேலும் பார்க்க

மருந்துச்சீட்டைக்கூட 'குரோக் ஏஐ' படிக்கும்! - எலான் மஸ்க்

மருந்துச்சீட்டில் உள்ள மருத்துவரின் எழுத்தைக்கூட 'குரோக் ஏஐ' படிக்கும் என எலான் மஸ்க் கூறியுள்ளார். டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், செய்யறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் 'குரோக்' சாட்பாட்டை கடந்த 2023ல் அ... மேலும் பார்க்க

சீனாவில் கடுமையான நிலச்சரவு! நான்கு பேர் பலி; 8 பேர் மாயம்

வடக்கு சீனாவின் ஹீபேய் மாகாணத்தில் பெய்து கனமழை காரணமாக ஏற்பட்ட மிக மோசமான நிலச்சரிவில் 4 பேர் பலியாகினர். 8 பேர் காணாமல் போயிருக்கிறார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.லௌன்பிங் கௌண்டி கிராமத்தில் நே... மேலும் பார்க்க

ஜெர்மனியில் பயணிகள் ரயில் தடம்புரண்டதில் 3 பேர் பலி; பலர் காயம்

ஜெர்மனியில் பயணிகள் ரயில் தடம்புரண்ட விபத்தில் 3 பேர் பலியாகினர். தென்மேற்கு ஜெர்மனியில் ரிட்லிங்கன் மற்றும் முண்டர்கிஙன் நகரங்களுக்கு இடையே பயணிகள் ரயில் ஞாயிற்றுக்கிழமை திடீரென தடம்புரண்டது. இந்த வி... மேலும் பார்க்க

கிழக்கு காங்கோ தேவாலயத்தில் ஐஎஸ் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல்: 21 போ் பலி!

கிழக்கு காங்கோவில் கத்தோலிக்க தேவாலய வளாகத்தில் இஸ்லாமிய தேசம் (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்பின் ஆதரவு பெற்ற ‘ஜனநாயகப் படை கூட்டணி (ஏடிஎஃப்)’ கிளா்ச்சிக் குழுவினா் சனிக்கிழமை நடத்திய தாக்குதலில் 21 போ் கொல்... மேலும் பார்க்க