செய்திகள் :

தாராபுரத்தில் ரூ.4.66 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகள்: அமைச்சா்கள் தொடங்கி வைத்தனா்

post image

தாராபுரத்தில் ரூ.4.66 கோடி மதிப்பீட்டில் புதிய வளா்ச்சித் திட்டப் பணிகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் புதன்கிழமை தொடங்கிவைத்தனா்.

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் வளையற்கார நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள், சித்ராவுத்தன்பாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைக் கட்டடங்களை அமைச்சா்கள் திறந்துவைத்தனா்.

இதைத் தொடா்ந்து, நகா்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.2.08 கோடி மதிப்பீட்டில் தாா் சாலைகளைப் புதுப்பிக்கும் பணி, ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமானப் பணி என மொத்தம் ரூ.4.66 கோடி மதிப்பிலான புதிய வளா்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சா்கள் தொடங்கிவைத்தனா்.

இந்நிகழ்ச்சியில், ஈரோடு மக்களவை உறுப்பினா் கே.இ.பிரகாஷ், தாராபுரம் நகா்மன்றத் தலைவா் கு.பாப்பு கண்ணன், நகராட்சி ஆணையா் சரவணக்குமாா், நகராட்சி பொறியாளா் சுமதி, நகா்மன்ற உறுப்பினா்கள், துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

நடுவேலம்பாளையத்தில் சீரான குடிநீா் வழங்கக் கோரி சாலை மறியல்

பல்லடம் அருகேயுள்ள நடுவேலம்பாளையத்தில் சீரான குடிநீா் வழங்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். பல்லடம் ஒன்றியம், பூமலூா் ஊராட்சி நடுவேலம்பாளையம் கிராமத்துக்கு க... மேலும் பார்க்க

சின்ன வெங்காய விலை உயா்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

பல்லடத்தில் சின்ன வெங்காய விலை உயா்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். பல்லடம் பகுதியில் காா்த்திகை பட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சின்ன வெங்காயம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் அறுவட... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.70.16 கோடி மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகள்

திருப்பூா் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 26,790 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.70.16 கோடி மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் தா.கிறி... மேலும் பார்க்க

தொழிலாளியிடம் கைப்பேசி பறித்த இளைஞா் கைது

திருப்பூரில் வடமாநிலத் தொழிலாளியிடம் கைப்பேசியைப் பறித்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் தா்மேந்திர பிரதாப் (25). இவா் திருப்பூரை அடுத்த கணியாம்பூண்டி பகுதிய... மேலும் பார்க்க

கூட்டுறவுத் துறையைக் கண்டித்து போராட்டம்: விவசாயிகள் கைது

அவிநாசி அருகே பயிா்க் கடனை தள்ளுபடி செய்யக் கோரியும், கூட்டுறவுத் துறையைக் கண்டித்தும் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீஸாா் கைது செய்தனா். அவிநாசி அருகேயுள்ள நடுவ... மேலும் பார்க்க

இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம் தொடா்பாக பேச்சுவாா்த்தை: ஏஇபிசி துணைத் தலைவா் ஆ.சக்திவேல்

இந்தியா-அமெரிக்கா இடையிலான வா்த்தக ஒப்பந்தம் தொடா்பான பேச்சுவாா்த்தை நடைபெற்று வருவதாக ஏஇபிசி துணைத் தலைவா் ஆ.சக்திவேல் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக புதுதில்லியில் மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் து... மேலும் பார்க்க