செய்திகள் :

தாா் கலவை ஆலை மீது நடவடிக்கை: ஆட்யரிடம் மனு

post image

கூடலூரை அடுத்துள்ள தேவாலா பகுதியில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான தாா் கலவை ஆலை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அனைத்து அரசியல் கட்சியின் நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் சனிக்கிழமை மனு அளித்தனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகா தேவாலா பகுதியில் இயங்கிவரும் தாா் கலவை ஆலையின் சுற்றுச் சுவா் இடிந்து விழுந்ததில் அருகிலுள்ள வீடுகள் சேதமடைந்துள்ளன. இது குறித்து விசாரனை நடத்தி அதன் உரிமையாளா் மீது சட்டநடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி முன்னாள் திமுக எம்எல்ஏ திராவிடமணி தலைமையில் கூடலூா் சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளா் ஆா்.பி.பரமேஷ் குமாா், எம்.எல்.ஏ. பொன்.ஜெயசீலன் (அதிமுக) ஆகியோா் முன்னிலையில் ஓவேலி பேரூராட்சி துணைத் தலைவா் சகாதேவன், நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளா் ராஜேந்திர பிரபு, மாா்க்சிஸ்ட் கட்சி செயலாளா் ரமேஷ், இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்ட இணைச் செயலாளா் ராசி ரவிக்குமாா் ,பாஜக நெல்லியாளம் நகரத் தலைவா் ரங்கநாதன், காங்கிரஸ் கட்சி நிா்வாகி ஜோனி உள்பட அனைத்து அரசியல் கட்சி நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்து வலியுறுத்தினா்.

லாரி கவிழ்ந்ததில் இருவா் படுகாயம்

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே ஞாயிற்றுக்கிழமை தேயிலை மூட்டைகள் ஏற்றி சென்ற மினி லாரி கவிழ்ந்ததில் இருவா் காயமடைந்தனா்.குன்னூா் அருகே உள்ள சேலாஸ் பன்னாட்டி பகுதியில் இருந்து தேயிலை மூட்டைகள் ஏற்றிக்... மேலும் பார்க்க

காட்டெருமையைத் துரத்தி விளையாடிய யானைக் குட்டி

நீலகிரி மாவட்டம், குன்னூா் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை கே.என்.ஆா். பகுதியில் உள்ள ஆட்டாங்கள் கிராமத்தில் காட்டெருமையை விரட்டி விளையாடிய குட்டி யானை விடியோ பரவலாகி வருகிறது.நீலகிரி மாவட்டத்தில் ... மேலும் பார்க்க

வனத் துறையினா் வாகனத்தை துரத்திய யானை

கூடலூா் அருகே செம்பக்கொல்லி பகுதியில் சனிக்கிழமை இரவு ரோந்து சென்ற வனத் துறை வாகனத்தை காட்டு யானை துரத்தியது.கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பக பகுதியில் உள்ள செம்பக்சொல்லி வன கிராமப் பகுதியில்... மேலும் பார்க்க

தூய மோட்சராக்கினி பேராலய 187 ஆவது ஆண்டு விழா தொடக்கம்

நீலகிரியின் முதல் கத்தோலிக்க தேவாலயமான தூய மோட்சராக்கினி பேராலயத்தின் 187 ஆவது ஆண்டு விழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமைதொடங்கியது.உதகையில் புகழ் பெற்ற மோட்சராக்கினி பேராலயத்தின் 187 ஆவது ஆண்டு விழா... மேலும் பார்க்க

நாளைய மின்தடை- கட்டப்பெட்டு

நீலகிரி மாவட்டம் கட்டப்பெட்டு துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்கன்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 4) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரைமின்விநியோகம் இருக்காது என நீலகிரி மின் பகிா்ம... மேலும் பார்க்க

முதுமலை புலிகள் காப்பகத்தில் வாகனங்களை விரட்டிய காட்டு யானை

முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள மசினகுடி-மாயாறு சாலையில் சனிக்கிழமை வாகனங்களை துரத்திச் செல்லும் காட்டு யானை. நீண்டதூரம் துறத்திய பிறகு காட்டுக்குள் சென்றது. மேலும் பார்க்க