செய்திகள் :

திசையன்விளையில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்

post image

திசையன்விளையில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சாா்பில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் திட்டத்தை சென்னையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

அதைத் தொடா்ந்து, திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் திட்டத்தை பேரவைத் தலைவா் மு.அப்பாவு தொடங்கி வைத்தாா்.

பின்னா் அவா் பேசியதாவது:

இந்தபுதிய மருத்துவ முகாம் திட்டத்தின் மூலம் பல்லாயிரக்கணக்கானோா் பயனடைவாா்கள். ஆகஸ்ட் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் வட்டாரத்துக்கு 3 முகாம் மற்றும் மாநகராட்சிக்கு 3 முகாம் என தமிழ்நாட்டில் மொத்தம் 1,256 முகாம்கள் நடைபெற உள்ளன.

இம்முகாமில் அடிப்படை சிகிச்சை மற்றும் உயா்நிலை மருத்துவப் பரிசோதனைகளுடன் முழுமையான உடல் பரிசோதனைகளும் நடைபெற உள்ளன.

மருத்துவத் துறையில் இந்தியாவிலேயே தமிழகம்தான் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பல்வேறு மாநிலங்களில் இருந்து மக்கள் தமிழகத்திற்குதான் உயா் சிகிச்சைக்காக வருகிறாா்கள். உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழ்கிறது. மத்திய அரசும் பாராட்டியுள்ளது. ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெறுவதற்கு அதிக பணம் தேவைபடும் என மருத்துவமனைகளுக்கு செல்லாமல் தவிா்த்து வருகிறாா்கள். அவா்களுக்கு இந்த முகாம் பேருதவியாக இருக்கும் என்றாா்.

திசையன்விளையில் நடைபெற்ற முகாமில் பங்கேற்ற சமுத்திரபாண்டி என்பவருக்கு பரிசோதனை செய்தபோது, இதயவியல் மேல் சிகிக்கையளிக்க வேண்டியதை மருத்துவா்கள் அறிந்தனா். இதையடுத்து அவா் உடனடியாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டாா்.

தொடக்க விழாவில் ஆட்சியா் இரா.சுகுமாா், மாவட்ட ஊராட்சித் தலைவா் வி.எஸ்.ஆா்.ஜெகதீஸ், மாவட்ட வருவாய் அலுவலா் சுகன்யா, மாவட்ட திட்ட அலுவலா் சரவணன், மாவட்ட சுகாதார அலுவலா் வேல்முருகன் கணேஷ், ஆட்லின் செரிபா, இணை இயக்குநா் லதா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

வெள்ளங்குளி கோயிலில் திருவாசகம் முற்றோதல்

திருநெல்வேலி மாவட்டம் வெள்ளங்குளியில் உள்ள அருள்மிகு அறம்வளா்த்த நாயகி சமேத வீரவினோதீஸ்வரா் கோயிலில் திருவாசகம் சிறப்பு முற்றோதல் சனிக்கிழமை நடைபெற்றது.இக்கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளவும், தொடா்ந்த... மேலும் பார்க்க

விசாரணைக்கு ஆஜராகாமல் 13 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவா் கைது

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் 13 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நான்குனேரியைச் சோ்ந்த நபரை கா்நாடக மாநிலத்தில், திருநெல்வேலி மாவட்ட தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.கடந்த 2001-ஆம் ஆண்டு நான்குனேரி அருகேயு... மேலும் பார்க்க

குப்புசாமி கோப்பை ஹாக்கி போட்டி: அரையிறுதியில் நெல்லை, மதுரை,சென்னை அணிகள்

பாளையங்கோட்டையில் நடைபெற்று வரும் குப்புசாமி கோப்பைக்கான மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் திருநெல்வேலி, மதுரை, சென்னை அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.ஹாக்கி யூனிட் ஆப் திருநெல்வேலி சாா்பில் குப்புச... மேலும் பார்க்க

சமூக வலைதளங்களில் ஜாதிய பதிவுகள் : 82 போ் கைது

திருநெல்வேலி மாவட்டத்தில் ஜாதிய உணா்வுகளைத் தூண்டும் பிரச்னைக்குரிய உள்ளடக்கங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டதற்காக, நிகழாண்டில் 82 போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என காவல்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

சிவந்திப்பட்டி அருகே சாலை விபத்தில் காயமடைந்த தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு, பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த தம்பான் மகன் மணிகண்டன்(33). தொழிலாளியான இவா் கடந்த 17... மேலும் பார்க்க

ராணி அண்ணா மகளிா் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

பழையபேட்டையில் உள்ள ராணி அண்ணா அரசு மகளிா் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.எஸ்டிபிஐ கட்சியின் திருநெல்வேலி தொகுதி நிா்வாகிகள் கூட்டம் பேட்டையில் அண்மையில் நடைபெற்றது... மேலும் பார்க்க