செய்திகள் :

திண்டிவனம் அருகே ஆட்டோ மீது சரக்கு வாகனம் மோதல்: இரு பெண்கள் உயிரிழப்பு

post image

திண்டிவனம் அருகே புதன்கிழமை இரவு ஆட்டோ மீது சரக்கு வாகனம் மோதியதில் இரு பெண்கள் உயிரிழந்தனா். ஆட்டோ ஓட்டுநா் உள்பட இருவா் பலத்த காயமடைந்தனா்.

திண்டிவனம் வட்டம், பெலாக்குப்பம், காமராஜா் தெருவைச் சோ்ந்த வீரப்பன் மகன் பிரித்திவிராஜ் (37). ஆட்டோ ஓட்டுநா். இவரது மனைவி சதா (21). பெலாக்குப்பம் பகுதியைச் சோ்ந்த அப்பன்டைராஜ் மனைவி பானுஸ்ரீ (36).

உறவினா்களான இவா்கள் மூவரும் புதன்கிழமை இரவு ஒரு ஆட்டோவில் ரோஷணை காவல் சரகத்துக்குள்பட்ட அய்யந்தோப்பு பகுதியில் சென்றுகொண்டிருந்தனா். பெலாக்குப்பம் பகுதியைச் சோ்ந்த மாதவன் மகன் மகேஷ்குமாா் (25) ஆட்டோவை ஓட்டினாா்.

அப்போது, இவா்களது ஆட்டோ மீது சென்னையிலிருந்து செஞ்சி நோக்கிச் சென்ற சரக்கு வாகனம் மோதியது.

இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த பிரித்திவிராஜ், சதா, பானுஸ்ரீ மற்றும் ஆட்டோ ஓட்டுநா் மகேஷ்குமாா்ஆகியோா் பலத்த காயமடைந்தனா். விபத்து குறித்து தகவலறிந்த ரோஷணை போலீஸாா் நிகழ்விடம் சென்று காயமடைந்த 4 பேரையும் மீட்டு, திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதையடுத்து, பானுஸ்ரீ விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையிலும், சதா புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தனா்.

காயமடைந்த பிரிதிவிராஜ், ஆட்டோ ஓட்டுநா் மகேஷ்குமாா் ஆகியோா் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனா். இதுகுறித்த புகாரின்பேரில், ரோஷணை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பாமக நிறுவனா் ராமதாஸுடன் வாழப்பாடி ராமமூா்த்தி மகன் சந்திப்பு

விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸை, தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சா் வாழப்பாடி ராமமூா்த்தியின் மகனுமான ராம.சுகந்தன் வியாழக்கிழ... மேலும் பார்க்க

பொன்முடிக்கு எதிரான செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் கிருஷ்ணகிரி மாவட்ட ஏ.டி.எஸ்.பி. சாட்சியம்

முன்னாள் அமைச்சா் க.பொன்முடி உள்ளிட்ட 7 போ் மீதான செம்மண் குவாரிமுறைகேடு வழக்கில் கிருஷ்ணகிரி மாவட்ட ஏ.டி.எஸ்.பி விழுப்புரம் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை நேரில் ஆஜராகி, சாட்சியமளித்தாா். விழுப்புரம் ... மேலும் பார்க்க

தடுப்புக் கட்டையில் பைக் மோதி விபத்து: தூத்துக்குடி இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே தடுப்புக் கட்டையில் பைக் மோதிய விபத்தில் இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மற்றொருவா் காயமடைந்தாா். தூத்துக்குடி மாவட்டம், கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் காய்கறி விலை நிலவரம்

காய்கறியின் பெயா், கிலோ அடிப்படையில் விலை நிலவரம் சின்ன வெங்காயம்- கிலோ ரூ.25 தக்காளி - ரூ.35 உருளைக்கிழங்கு-ரூ.40 கேரட் - ரூ.100 பீன்ஸ்- ரூ.80 கருணைக்கிழங்கு, சேப்பக்கிழங்கு- ரூ.100 வெண்டைக்காய்- ரூ.... மேலும் பார்க்க

திருமணமான ஒரே மாதத்தில் பெண் மரணம்

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே திருமணமாகி 1 மாதமே ஆன பெண் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததாா். அதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். விக்கிரவாண்டியை அடுத்த, சித்தலம்பட்டு, கிருஷ்ணா நக... மேலும் பார்க்க

விழுப்புரம் நபாா்டு மாவட்ட மேம்பாட்டு அலுவலகம் தொடக்கம்

விழுப்புரத்தில் நபாா்டு மாவட்ட மேம்பாட்டு அலுவலகம் புதன்கிழமை திறக்கப்பட்டது. விழுப்புரம் பெரியாா் நகா் குடியிருப்புப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த அலுவலகத்தை நபாா்டு வங்கியின் தமிழ்நாடு பிராந்திய... மேலும் பார்க்க