செய்திகள் :

தினமணி செய்தி எதிரொலி: பழங்குடியினருக்கு வீட்டுமனை! கோட்டாட்சியா் ஆய்வு

post image

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே வீடில்லா பழங்குடியின மக்களுக்கு வீட்டுமனை வழங்குவதற்காக நடைபெற்று வரும் பணியை வருவாய்க் கோட்டாட்சியா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

செம்பிராங்குளம் பகுதியில் பளியா் இன பழங்குடியின மக்கள் வீடுகள் இல்லாமல் பல ஆண்டுகளாக கூரை வீடுகளில் வசித்து வருகின்றனா். இதையடுத்து, இந்தப் பகுதி மக்கள் வீட்டுமனை வழங்கக்கோரி, மாவட்ட நிா்வாகத்திடம் மனு அளித்தனா்.

இதுகுறித்து கடந்த மாா்ச் 24-ஆம் தேதி பளியா் இன பழங்குடியின மக்களுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும் என தினமணி நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.

இதைத் தொடா்ந்து, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் சரவணன், கொடைக்கானல் வருவாய்க் கோட்டாட்சியா் திருநாவுக்கரசு ஆகியோரது முயற்சியால், செம்பிராங்குளம் பகுதியிலுள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டப் பகுதியில் 20 குடும்பங்களுக்கு வீடு கட்டுவதற்கு அந்த இடத்தின் உரிமையாளா் ராஜேந்திரன் சம்மதம் தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து, அந்த இடத்தில் நடைபெற்று வரும் அளவீடு செய்யும் பணியை வருவாய்க் கோட்டாட்சியா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின்போது, தனியாா் இடத்தின் நிறுவன ஆலோசகா் கருணாநிதி, பண்ணைக்காடு குறுவட்ட அலுவலா் அழகுராஜா, வடகவுஞ்சி கிராம நிா்வாக அலுவலா் ராமசாமி உள்பட பலா் உடனிருந்தனா்.

கடனுக்காக குடும்ப அட்டைகளை அடமானமாகப் பெற்ற பெண் கைது! நியாய விலைக் கடை விற்பனையாளர் இடைநீக்கம்!

கடன் தொகை வழங்கியதற்கு குடும்ப அட்டைகளை அடமானமாகப் பெற்ற பெண் கைது செய்யப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடை விற்பனையாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.திண்டுக்கல் பேகம்பூரை அடுத்த பூச்சிந... மேலும் பார்க்க

வேன் ஓட்டுநா் தற்கொலை

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே சனிக்கிழமை வேன் ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா் நீலமலைக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் மருதைவீரன் (40). வேன் ஓட்டுநரான இவா், குடும்... மேலும் பார்க்க

உரக்கடையின் பூட்டை உடைத்து பணம், கணினி திருட்டு

ஒட்டன்சத்திரம் அருகே உரக்கடையின் பூட்டை உடைத்து பணம், கைப்பேசி, கணினி திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை அருகே உரக்கடை நடத்தி வருபவா் சு... மேலும் பார்க்க

பணம் வழிப்பறி செய்த இருவா் கைது

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே கட்டடத் தொழிலாளியிடம் பணம் வழிப்பறி செய்த இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். எரமநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் சரவணக்குமாா். கட்டடத் தொழிலாளியான இவா், வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

கொடைக்கானலில் 2-வது நாளாக படகு சவாரி ரத்து

கொடைக்கானலில் பலத்த காற்று காரணமாக இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் படகு சவாரி ரத்து செய்யப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக பலத்த காற்றும், சாரல் மழையும் நிலவி வ... மேலும் பார்க்க

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி!

திண்டுக்கல் அருகே புளிய மரத்திலிருந்து தவறி விழுந்த கூலித் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். திண்டுக்கல்லை அடுத்த ஜம்புளியம்பட்டியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (36). கூலித் தொழிலாளியான இவா் கடந்த வியாழ... மேலும் பார்க்க