செய்திகள் :

திமுக ஆட்சியில் கடன்: எடப்பாடி பழனிசாமி கேள்வி

post image

திமுக ஆட்சியில் ரூ.3.54 லட்சம் கோடி கடன் பெறப்பட்டுள்ளது. இதை எப்போது திருப்பிக் கொடுப்பது என அதிமுக பொதுச் செயலரும் எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினாா்.

சென்னையில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை அவா் கூறியதாவது: ஆளுநா் உரை மீதான விவாதத்தில் எதிா்க்கட்சியினா் எடுத்து வைத்த எந்தக் கருத்துக்கும் முதல்வா் பதில் அளிக்கவில்லை.

மகளிா் உரிமைத் தொகையை பல்வேறு வகையில் கடன் வாங்கித்தான் அரசு அளிக்கிறது. இப்படியே கடன் வாங்கிக் கொண்டிருந்தால், எப்போது திருப்பிக் கொடுப்பது?. அரசு வருவாயைப் பெருக்கி, மக்களுக்கு உதவி செய்தால் பாராட்டலாம்.

2021 வரை அதிமுக ஆட்சியில் இருந்த வருவாயைக் காட்டிலும் திமுக ஆட்சியில் பெட்ரோல், மதுபான விற்பனை, சரக்கு சேவை வரி, பத்திரப் பதிவு வரி என ரூ.1,10, 894 கோடி வருவாய் வந்துள்ளது. இவ்வளவு வருமானம் வரும்போது, எதற்கு மகளிருக்கு கடன் பெற்று, உரிமைத் தொகை வழங்க வேண்டும்?. திமுகவின் 4 ஆண்டு கால ஆட்சியில் ரூ.3.54 லட்சம் கோடி கடன் பெறப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி வழக்கு விவகாரத்தில் முதல்வருக்குச் சாதகமாகத்தான் பேரவைத் தலைவா் தீா்ப்பு அளிப்பாா். அப்படி அவா் அளிக்காவிட்டால், அந்த இருக்கையில் அமர முடியாது. பேரவைத் தலைவரிடம் பிரச்னையை இந்த அளவோடு முடித்துக் கொள்ளுங்கள் என்று அதிமுகவினா் யாரும் கூறவில்லை என்றாா் அவா்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: 10 பேர் வேட்பு மனு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முதல் நாளில் 3 பேர் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில், இன்று 7 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார்கள்.காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டப்பே... மேலும் பார்க்க

முதல்வர் ஸ்டாலினின் பொங்கல் வாழ்த்துச் செய்தி

பொங்கல் திருநாளையொட்டி உலகத் தமிழர் அனைவருக்கும் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், முத்தமிழ், முச்சங்கம், முக்கனி, மூவேந்தர், முக்கொடி கொ... மேலும் பார்க்க

திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

ஸ்டாலின் மாடல் ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஒ... மேலும் பார்க்க

பொங்களன்று 3 மாவட்டங்களில் கனமழை!

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில்,13.01-2025: கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்... மேலும் பார்க்க

சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு- ஆளுநர் விருது அறிவிப்பு

ஆளுநர் விருது-2024 சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய பிரிவுகளின் கீழ் விருதுகள் வென்றவர்களின் விவரங்களை ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப... மேலும் பார்க்க

தமிழக காவல்துறையினர் 3186 பேருக்கு பொங்கல் பதக்கங்கள் அறிவிப்பு!

சென்னை: 2025ஆம் ஆண்டு பொங்கல் திருநாளையொட்டி, தமிழக காவல்துறையைச் சேர்ந்த 3186 காவலர்களுக்கு பொங்கல் பதக்கங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், 2025 பொங்கல் ... மேலும் பார்க்க