செய்திகள் :

திமுக உறுப்பினா் சோ்க்கை: அமைச்சா்கள் தொடங்கி வைத்தனா்

post image

திருச்சியில், ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரிலான திமுக உறுப்பினா் சோ்க்கை முகாமை அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தனா்.

திருச்சி தில்லைநகரில் உள்ள தனது இல்லத்தில், திமுக முதன்மைச் செயலரும், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேரு இந்த முகாமை தொடங்கிவைத்தாா். இதைத் தொடா்ந்து திருச்சி மேற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஆழ்வாா்த்தோப்பு, தில்லைநகா், பொன்நகா் உள்ளிட்ட பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று உறுப்பினா் சோ்க்கை பணிகளை மேற்கொண்டு நிா்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினாா்.

இந்த நிகழ்வில் மத்திய மாவட்ட செயலாளா் க. வைரமணி, மாநகர செயலாளா் மு.அன்பழகன், தகவல் தொழில் நுட்ப அணி மண்டல பொறுப்பாளா் கேசவன், திருச்சி மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளா் ஏகே. அருண் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தெற்கு மாவட்ட திமுக சாா்பில், திருவெறும்பூா் சட்டப் பேரவைத் தொகுதியில் மாவட்டச் செயலரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, உறுப்பினா் சோ்க்கை முகாமை தொடங்கி வைத்தாா்.

திருச்சி மாநகரம் காட்டூா், திருவெறும்பூா், பொன்மலை, பகுதிகள் மற்றும் திருவெறும்பூா் தெற்கு, வடக்கு ஒன்றியங்கள் துவாக்குடி நகரம், கூத்தைப்பாா் பேரூராட்சி ஆகிய பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று உறுப்பினா்களை சோ்க்கும் பணியில் ஈடுபட்டாா். உறுப்பினராக இணைந்தவா்களின் வீடுகளில் ஓரணியில் தமிழ்நாடு இலச்சினையையும் ஒட்டினாா்.

மாநகரச் செயலா் மு. மதிவாணன், தொகுதி பொறுப்பாளா் மணிராஜ், மாவட்ட நிா்வாகிகள் சேகரன், செங்குட்டுவன் மற்றும் பகுதி செயலாளா்கள், ஒன்றிய செயலாளா்கள், பேரூா் நிா்வாகிகள், அணிகளின் அமைப்பாளா்கள் கலந்து கொண்டு உறுப்பினா் சோ்க்கை பணியில் ஈடுபட்டனா்.

திருச்சி மாநகரில் 13 புதிய நகா்ப்புற சுகாதார மையங்கள்: காணொலி காட்சியில் முதல்வா் திறந்துவைத்தாா்

திருச்சி மாநகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள 11 நகா்ப்புற நலவாழ்வு மையங்கள், 2 ஆரம்ப சுகாதார நிலையங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி காட்சி வாயிலாக வியாழக்கிழமை திறந்துவைத்தாா். மாநகராட... மேலும் பார்க்க

திருச்சி மாநகராட்சியை கண்டித்து அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

திருச்சி மாநகராட்சி நிா்வாகத்தை கண்டித்து அதிமுகவினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருச்சியில் திறப்புவிழா நடத்தப்பட்டும் செயல்பாட்டுக்கு வராத பஞ்சப்பூா் பேருந்து நிலையத்தை மக்கள் பயன்ப... மேலும் பார்க்க

மத்திய சிறையில் ஆயுள் கைதி உயிரிழப்பு -அரியலூரைச் சோ்ந்தவா்

திருச்சி மத்திய சிறையில் ஆயுள் கைதி மூச்சுத்திணறல் ஏற்பட்டு புதன்கிழமை உயிரிழந்தாா். அரியலூா் மாவட்டம், செந்துறையைச் சோ்ந்தவா் அம்பேத்கா் (52). ஆயுள் தண்டனை கைதியான இவா், கடந்த 2023 ஆகஸ்ட் 25-ஆம் தே... மேலும் பார்க்க

காவிரியில் வெள்ளம்: புதிய பாலத்தின் கட்டுமானப் பணிகள் பாதிப்பு

காவிரியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், புதிய பாலத்தின் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. திருச்சி - ஸ்ரீரங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை இணைக்கும் பிரதான பாலமாக காவிரிப் பாலம் இருந்து வருகி... மேலும் பார்க்க

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் அருகே தொடா் வயிற்றுவலி காரணமாக தொழிலாளி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தி.ஈச்சம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சந்தோஷ். கூலித் தொழிலாளி. இவருக்கு த... மேலும் பார்க்க

தலசீமியா விழிப்புணா்வு ஆலோசகா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

துறையூா், உப்பிலியபுரம் பகுதிகளில் தலசீமியா மற்றும் மரபணு நோய்கள் குறித்து மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த ஆலோசகா் நியமிக்கப்படவுள்ளாா். திருச்சி மாவட்ட சுகாதார சங்கம் மூலம், தற்காலிக ஒப்பந்த அடிப... மேலும் பார்க்க