செய்திகள் :

திரிபுராவில் சட்டவிரோதமாக நுழைந்த 4 வங்கதேசத்தினர் கைது

post image

திரிபுராவில் சட்டவிரோதமாக நுழைந்த 4 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து அகர்தலாவில் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது, நான்கு வங்கதேச நாட்டினர் சனிக்கிழமை கொல்கத்தா செல்லும் ரயிலில் ஏறவிருந்தபோது கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் முறையான ஆவணங்கள் எதுவும் இல்லை.

பின்னர் அவர்கள் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விசாரணைக்காக மூன்று நாள் போலீஸ் காவலில் அனுப்பப்பட்டனர்.

அதேசமயம், வங்கதேச நாட்டினரை உள்ளே நுழைய உதவியதற்காக திரிபுராவைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.

எம் தியாகராயர் வழிநின்று தமிழ்நாட்டின் உயர்வுக்கு உழைப்போம்: முதல்வர் ஸ்டாலின்

இதற்கிடையில், சனிக்கிழமை செபாஹிஜாலா மாவட்டத்தில் உள்ள சோனாமுராவின் வெவ்வேறு இடங்களில் பிஎஸ்எஃப் மற்றும் ரயில்வே காவல்துறையின் கூட்டுக் குழு சோதனைகளை மேற்கொண்டது.

அப்போது ஊடுருவலில் ஈடுபட்டதாகக் கூறி ஐந்து பேரை அவர்கள் கைது செய்தனர் என்று அவர் மேலும் கூறினார்.

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து ரயில் நிலையங்கள் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குடிமக்கள் தங்களின் சட்டபூா்வ உரிமைகளை அறிந்துகொள்வது அவசியம்: உச்சநீதிமன்ற நீதிபதி கவாய்

‘குடிமக்கள் தங்களின் அரசமைப்பு உரிமைகள் மற்றும் சட்டபூா்வ உரிமைகளை அறிந்து கொள்வது அவசியம்’ என்று உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆா்.கவாய் வலியுறுத்தினாா். ‘அவ்வாறு தங்களின் உரிமைகள் குறித்த விழிப்புணா்வு இ... மேலும் பார்க்க

தீா்ப்பு எழுதத் தெரியாத மாவட்ட கூடுதல் நீதிபதி! 3 மாத பயிற்சிக்கு அனுப்பிய அலாகாபாத் உயா்நீதிமன்றம்!

தீா்ப்பு எழுதத் தெரியவில்லை என்ற அடிப்படையில் மாவட்ட கூடுதல் நீதிபதியை நீதிபதிகளுக்கான பயிற்சி நிறுவனத்தில் மூன்று மாத பயிற்சிக்குச் செல்லுமாறு அலாகாபாத் உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தர பிரதேச... மேலும் பார்க்க

விண்வெளித் துறையில் இந்தியா புதிய உச்சம் எட்டும்! - பிரதமா் மோடி

வருங்காலத்தில் விண்வெளித் துறையில் இந்தியா புதிய உச்சங்களை எட்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். உலக அளவில் மிகக் குறைவான செலவில், வெற்றிகரமான விண்வெளித் திட்டங்களைச் செயல்படுத்துவதில் இந்... மேலும் பார்க்க

தொலைதூர தாக்குதலுக்கு தயாராகும் வகையில் இந்திய கடற்படை பயிற்சி!

பன்முனையில் இருந்து கப்பல்கள் மூலம் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை தகா்க்கும் வகையிலான பயிற்சிகளை இந்திய போா்க்கப்பல்கள் வெற்றிகரமாக நடத்தியதாக இந்திய கடற்படை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. இதன்மூலம் நீண... மேலும் பார்க்க

பஞ்சாயத்து தோ்தல் வேட்பாளா்கள் நிலுவை வழக்குகளை குறிப்பிட வேண்டும்! - உச்சநீதிமன்றம்

தங்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த தகவல்களை பஞ்சாயத்து தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்ற ஹிமாசல பிரதேச உயா் நீதிமன்றத்தின் தீா்ப்பை உச்ச நீதிமன்றம் ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் முழுமையாகத் தோற்கடிக்கப்படும்! - மத்திய அமைச்சா் புரி உறுதி

‘நமது அண்டை நாடு (பாகிஸ்தான்) முழுமையாகத் தோற்கடிக்கப்படும்; அதன்பிறகு பயங்கரவாதிகளை அனுப்பி அப்பாவிகளைச் சுட்டுக்கொல்லும் இழிவான செயல்களில் ஈடுபடும் எண்ணம் அவா்களுக்கு மீண்டும் வராது’ என்று மத்திய பெ... மேலும் பார்க்க