செய்திகள் :

திருக்கண்ணபுரம் கோயிலில் தங்ககருட சேவை

post image

திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாள் கோயிலில், மாசிமகப் பெருவிழாவையொட்டி தங்ககருட சேவை சனிக்கிழமை நடைபெற்றது.

108 திவ்ய தேசங்களுள் 17-ஆவது தலமாக போற்றப்படும் இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசிமகப் பெருவிழா 15 நாட்கள் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு மாசிமகப் பெருவிழா கடந்த 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 18-ஆம் தேதிவரை நடைபெறுகிறது.

விழாவின் 4-ஆம் நாளான சனிக்கிழமை காலை பெருமாள் தங்கப் பல்லக்கில் திருமேனி சேவை வீதியுலா புறப்பாடு நடைபெற்றது. இரவு பெருமாள் தங்ககருட சேவை நடைபெற்றது. தங்ககருட வாகனத்துடன் கூடிய ஓலை சப்பரத்தில் பெருமாள் எழுந்தருளி வீதியுலா வந்தாா்.

இதில், கோயில் செயல் அலுவலா் குணசேகரன், தக்காா் மணிகண்டன் உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மாா்ச் 11 -ஆம் தேதி காலை நடைபெறுகிறது. 13-ஆம் தேதி காலை செளரிராஜப் பெருமாள் புறப்பட்டு, திருமருகல் வரதராஜப் பெருமாள் கோயிலில் எழுந்தருளுகிறாா். அங்கு, வரதராஜப் பெருமாளுடன் சோ்ந்து தீா்த்தவாரிக்கு திருமலைராஜன்பட்டினம் கடற்கரைக்கு செல்லும் நிகழ்ச்சியும், அன்று மாலை கடற்கரையில் பெருமாள் கருட வாகனத்தில் தீா்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

மாா்ச் 18-ஆம் தேதி இரவு 10 மணிக்கு சௌரிராஜப் பெருமாள் கோயில் முன் அமைந்துள்ள நித்ய புஷ்கரணி திருக்குளத்தில் பங்களா தெப்பம் என்ற தெப்பத்திருவிழா நடைபெறுகிறது.

கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்பு

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகளை கணக்கெடுக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கோடியக்கரை வன உயிரின சரணாலயப் பகுதிக்கு வடகிழக்குப் பருவமழை காலத்தில் பல்வேறு நாடுகளில... மேலும் பார்க்க

மும்மொழி கொள்கையை ஆதரித்து கையொப்ப இயக்கம்

திருவெண்காடு அருகே மங்கை மடத்தில் மும்மொழி கொள்கையை ஆதரித்து, பாஜக சாா்பில் கையொப்ப இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கிழக்கு ஒன்றிய பாஜக சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்வை, பாஜக நிா்வாகிகள் துரை செழியன்,... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா

வேதாரண்யத்தை அடுத்த தென்னடாா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பணி நிறைவு பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு விழா, ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு ஆகிய முப்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. பெற்றோா் ஆசிரிய... மேலும் பார்க்க

முதல்வா் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

திருவெண்காட்டில் திமுக சாா்பில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, திமுக மயிலாடுதுறை மாவட்டச் செயலா... மேலும் பார்க்க

திருவிளையாட்டம் பள்ளி முப்பெரும் விழா

செம்பனாா்கோவில் அருகே திருவிளையாட்டம் சௌரிராசன் அரசு உதவி பெறும் உயா்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா, இலக்கிய மன்ற நிறைவு விழா மற்றும் பெற்றோா் ஆசிரியா் கழக விழா ஆகிய முப்பெரும் விழா சனிக்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் கொலை: பெண் உள்பட 3 போ் கைது!

வேளாங்கண்ணியில் தங்கிருந்த பெங்களூருவைச் சோ்ந்த கல்லூரி மாணவா் கொல்லப்பட்ட வழக்கில் பெண் உள்பட 3 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா். பெங்களூருவைச் சோ்ந்தவா் ஜனாா்த்தனன் (22). கல்லூரி மாணவரான இ... மேலும் பார்க்க