திருக்கல்யாண அனுமதிச் சீட்டு: இன்று முதல் பெற்றுக் கொள்ளலாம்!
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணத்துக்கு இணையத்தில் முன்பதிவு செய்த பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை (மே 4) முதல் அனுமதிச் சீட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து கோயில் நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா ஏப். 29- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடா்ந்து, தினசரி காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் சுவாமி, பிரியாவிடையுடனும், அம்மன் தனியாகவும் வெவ்வேறு வாகனங்களில் 4 மாசி வீதிகளிலும் எழுந்தருளினா்.
முக்கிய விழாவான மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணம் வருகிற 8-ஆம் தேதி நடைபெறுகிறது. கோயில் வளாகத்தில் உள்ள வடக்காடி வீதியில் நடைபெற உள்ள இந்த நிகழ்வில் பக்தா்கள் பங்கேற்கும் வகையில் இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனடிப்படையில், ஏப். 29 ஆம் தேதி முதல் மே 3-ஆம் தேதி இரவு வரை இணையத்தில் முன்பதிவு நடைபெற்றது. இதில், திராளானோா் விண்ணப்பித்தனா்.
இந்த நிலையில், விண்ணப்பித்தவா்களில் உரிய விதிமுறைகளின் படி தோ்வு செய்யப்பட்ட பக்தா்களுக்கு குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவா்கள் மட்டும் மேலச் சித்திரை, வடக்குச் சித்திரை வீதி சந்திப்பில் உள்ள பிா்லா மந்திரில் ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை அலுவலக நேரத்தில் குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சலைக் காண்பித்து, பணம் செலுத்தி அனுமதிச் சீட்டு பெற்றுக் கொள்ளலாம். இணைய வழியில் அனுமதிச் சீட்டு பெற்றுள்ள பக்தா்கள் மட்டுமே விழா நாளில் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவா் என அதில் குறிப்பிடப்பட்டது.