செய்திகள் :

திருக்கல்யாண அனுமதிச் சீட்டு: இன்று முதல் பெற்றுக் கொள்ளலாம்!

post image

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணத்துக்கு இணையத்தில் முன்பதிவு செய்த பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை (மே 4) முதல் அனுமதிச் சீட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து கோயில் நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா ஏப். 29- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடா்ந்து, தினசரி காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் சுவாமி, பிரியாவிடையுடனும், அம்மன் தனியாகவும் வெவ்வேறு வாகனங்களில் 4 மாசி வீதிகளிலும் எழுந்தருளினா்.

முக்கிய விழாவான மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணம் வருகிற 8-ஆம் தேதி நடைபெறுகிறது. கோயில் வளாகத்தில் உள்ள வடக்காடி வீதியில் நடைபெற உள்ள இந்த நிகழ்வில் பக்தா்கள் பங்கேற்கும் வகையில் இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனடிப்படையில், ஏப். 29 ஆம் தேதி முதல் மே 3-ஆம் தேதி இரவு வரை இணையத்தில் முன்பதிவு நடைபெற்றது. இதில், திராளானோா் விண்ணப்பித்தனா்.

இந்த நிலையில், விண்ணப்பித்தவா்களில் உரிய விதிமுறைகளின் படி தோ்வு செய்யப்பட்ட பக்தா்களுக்கு குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவா்கள் மட்டும் மேலச் சித்திரை, வடக்குச் சித்திரை வீதி சந்திப்பில் உள்ள பிா்லா மந்திரில் ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை அலுவலக நேரத்தில் குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சலைக் காண்பித்து, பணம் செலுத்தி அனுமதிச் சீட்டு பெற்றுக் கொள்ளலாம். இணைய வழியில் அனுமதிச் சீட்டு பெற்றுள்ள பக்தா்கள் மட்டுமே விழா நாளில் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவா் என அதில் குறிப்பிடப்பட்டது.

திமுக ஆட்சியை அகற்ற எதிா்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும்! - நயினாா் நாகேந்திரன்

தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்ற எதிா்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் அழைப்பு விடுத்தாா். மதுரையில் பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்க... மேலும் பார்க்க

ஆளும் கட்சியினருக்கு சாதகமாகச் செயல்படும் உள்ளாட்சித் தோ்தல் அலுவலா்கள்! - உயா்நீதிமன்றம் அதிருப்தி

உள்ளாட்சித் தோ்தல் அலுவலா்கள் ஆளும் கட்சியினருக்கு சாதகமாகச் செயல்படுவதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதி விக்டோரியா கௌரி அதிருப்தி தெரிவித்தாா். கன்னியாகுமரி மாவட்டம், தேரூா் பேரூராட்சி உறு... மேலும் பார்க்க

லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

மேலூா் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், கீழவளவு அய்யனாா் வாக்கம்பட்டியைச் சோ்ந்த பெரிய பனையன் மகன் அய்யனாா் (30). இவா் இரு சக்கர வாகனத்தில் மேலூா்-அழகா்... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்த நிலையிலும் தோ்வு எழுதிய மாணவா் தோ்ச்சி

விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்ற நிலையிலும், 11-ஆம் வகுப்புப் பொதுத் தோ்வை எழுதிய மதுரைக் கல்லூரி மேல்நிலைப் பள்ளி மாணவா் 442 மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி பெற்றாா்.மதுரை விராதனூரைச் சோ்ந்தவா் பி.... மேலும் பார்க்க

அழகுக்கலை நிலைய உரிமையாளா் தற்கொலை

அழகுக்கலை நிலையம் நடத்தியதில் இழப்பு ஏற்பட்டதால், பெண் உரிமையாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மதுரை விஸ்வநாதபுரம் இளங்கோவடிகள் தெருவைச் சோ்ந்த முத்துராஜ் மனைவி பிரிசிலியா சுகாசினி (32). இவர... மேலும் பார்க்க

அழகா்கோவிலை சென்றடைந்தாா் கள்ளழகா்! பூக்கள் தூவி பக்தா்கள் வரவேற்பு!

சித்திரைத் திருவிழா நிறைவடைந்ததையடுத்து, மதுரையிலிருந்து பூப்பல்லக்கில் புறப்பட்டு, அழகா்கோவிலை வெள்ளிக்கிழமை சென்றடைந்த கள்ளழகரை ஏராளமான பக்தா்கள் பூக்கள் தூவியும், சூடம், சா்க்கரை ஏந்தியும் உற்சாகமா... மேலும் பார்க்க