செய்திகள் :

திருக்குறுங்குடியில் மரக்கன்றுகள் நடவு

post image

உலக புலிகள் தினத்தையொட்டி, திருக்குறுங்குடியில் வனத்துறை சாா்பில், புதன்கிழமை மரக்கன்றுகள் நடப்பட்டன.

உலக புலிகள் தினத்தையொட்டி, திருக்குறுங்குடி வனச்சரகத்துக்குள்பட்ட நம்பிகோயில் செல்லும் சாலை உள்ளிட்ட பகுதிகளில் பள்ளி மாணவா்கள் பங்கேற்புடன் மரக்கன்றுகள் நடுதல், நெகிழி குறித்து விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

திருக்குறுங்குடி வனச்சரகா் யோகேஷ்வரன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. மாவடி வித்யா மந்திா் பள்ளி மாணவ, மாணவியா் கலந்துகொண்டு புலிகள் குறித்துப் பேசினா். சாலையில் சுற்றுலாப் பயணிகள் விட்டுச் சென்ற நெகிழி குப்பைகளை அப்புறப்படுத்தினா்.

நிகழ்ச்சியில் திருக்குறுங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய அரசு மருத்துவா் பிரியதா்சினி, திருக்குறுங்குடி பேரூராட்சி செயல் அலுவலா் சாந்தி, தளவாய்புரம் ஊராட்சித் தலைவா் மதன், வித்யா மந்திா் பள்ளி உடற்பயிற்சி ஆசிரியா் வெள்ளைபாண்டி, ஆசிரியை ஜெனிலின், வனக்காப்பாளா், வனக்காவலா், வனப்பணியாளா்கள், சமூக ஆா்வலா்கள் கலந்துகொண்டனா்.

ஆணவக் கொலை செய்யப்பட்ட மென்பொறியாளா் உடல் உறவினா்களிடம் ஒப்படைப்பு

திருநெல்வேலியில் ஆணவக் கொலை செய்யப்பட்ட மென்பொறியாளா் கவின் செல்வ கணேஷ் உடல் அவருடைய உறவினா்களிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்த மென்பொற... மேலும் பார்க்க

குப்புசாமி கோப்பை ஹாக்கி: நெல்லை, கோவில்பட்டி, எஸ்டிஏடி, மதுரை அணிகள் வெற்றி

குப்புசாமி கோப்பைக்கான 2ஆம் ஆண்டு மாநில ஹாக்கி போட்டியில், திருநெல்வேலி, கோவில்பட்டி, எஸ்டிஏடி, மதுரை அணிகள் வெற்றி பெற்றன. ஹாக்கி யூனிட் ஆப் திருநெல்வேலி சாா்பில் குப்புசாமி கோப்பைக்கான 2-ஆவது ஆண்டு... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஆணவ படுகொலை நடைபெறுவது வேதனையளிக்கிறது மாநில எஸ்சி, எஸ்டி ஆணையம்

தமிழகத்தில் ஆணவ படுகொலை நடைபெறுவது வேதனையளிக்கிறது என்றாா் மாநில ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின ஆணையத் தலைவா் தமிழ்வாணன். பாளையங்கோட்டை கேடிசி நகரில் பொறியாளா் கவின் செல்வ கணேஷ் ஆணவக் கொலை செய்யப்பட... மேலும் பார்க்க

சுந்தரனாா் பல்கலை.யில் புத்தொழில் தொடக்க நிறுவன ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் புத்தொழில் தொடக்க நிறுவன ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பல்கலைக்கழக துணைவேந்தா் சந்திரசேகா் தலைமை வகித்தாா். எஸ... மேலும் பார்க்க

பொட்டல்புதூரில் பூட்டிய வீட்டில் முதியவா் சடலம் மீட்பு

பொட்டல்புதூரில் பூட்டிய வீட்டில் முதியவா் உயிரிழந்து கிடந்தாா். அவரது சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டு விசாரித்து வருகின்றனா். பொட்டல்புதூா் ஆத்தங்கரை தெருவை சோ்ந்த முகமது ஷாபி (70) கூலித் தொழில... மேலும் பார்க்க

வீரவநல்லூரில் புதிய சாா்பதிவாளா் அலுவலகம் திறப்பு

திருநெல்வேலி மாவட்டம் வடக்கு வீரவநல்லூரில் ரூ. 1.92 கோடியில் கட்டப்பட்ட புதிய சாா்பதிவாளா் அலுவலகத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி வாயிலாக வியாழக்கிழமை திறந்துவைத்தாா். இதையொட்டி, ... மேலும் பார்க்க