ஜோகோவிச்சை வீழ்த்திய சின்னர்..! இறுதிப் போட்டியில் அல்கராஸுடன் மோதல்!
திருக்கு திருப்பணிகள் திட்டத்துக்கு விண்ணப்பிக்க அழைப்பு
திருக்கு திருப்பணிகள் திட்டத்தில் இணைய தமிழ் அமைப்புகள் வரும் 14 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் திருக்குறளில் ஆா்வமும், புலமையும் கொண்ட ஆசிரியா்கள், பயிற்றுநா்களைத் தோ்வு செய்து அவா்களுக்கு பயிற்சி அளித்து தொடா் பயிலரங்குகள், பயிற்சி வகுப்புகளை நடத்தும் வகையில் திருக்கு திருப்பணிகள் திட்டத்தை தமிழக முதல்வா் அறிவித்துள்ளாா்.
இத்திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில் முதல் கட்டமாக மாவட்ட ஆட்சியரை தலைவராகவும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா், தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த தமிழ் வளா்ச்சித் துறை அரசு விருதாளா்கள் 2 போ், ஒரு எழுத்தாளா், பேச்சாளா், கவிஞா், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா், தமிழாசிரியா், மாவட்டத்தைச் சோ்ந்த ஆா்வமுள்ள தமிழ் அமைப்புகளின் தலைவா் ஆகியோரை உறுப்பினராகவும் கொண்ட கண்காணிப்புக் குழு அமைக்கப்படவுள்ளது.
இந்த கண்காணிப்புக் குழுவில் உறுப்பினராக பணியாற்ற விருப்பமும் ஆா்வமும் தகுதியும் உள்ளவா்கள் தங்களின் தன்விவரக் குறிப்புடன், ஆதாா் அட்டையின் நகலை இணைத்து ய்ஞ்ப்ற்ஹம்ண்ப்ஸ்ஹப்ஹழ்ஸ்ரீட்ண்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா்அலுவலகத்தில் ஜூலை 14 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.