செய்திகள் :

திருச்சியில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்: 18 போ் கைது

post image

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பஞ்சாப் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, திருச்சியில் வெள்ளிக்கிழமை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 18 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

விவசாய விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூா்வ உத்தரவாதம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் விவசாயிகள் போராடி வருகின்றனா்.

இந்த நிலையில், பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் ஓராண்டுக்கும் மேலாக போராடிய விவசாயிகளை காவல்துறையினா் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியதை கண்டித்து, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் பொ. அய்யாக்கண்ணு தலைமையில், திருச்சி சிந்தாமணி அருகேயுள்ள காவிரிப் பாலத்தில், வெள்ளிக்கிழமை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மதுரையிலிருந்து திருச்சி வழியாக சென்னை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலை நடுப்பாலத்தில் மறித்து விவசாயிகள் முழக்கமிட்டனா். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே போலீஸாாா் போராட்டத்தில் ஈடுபட்ட அய்யாக்கண்ணு உள்ளிட்ட 18 விவசாயிகளை கைது செய்தனா். இப்போராட்டத்தால் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சுமாா் 30 நிமிஷங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது.

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 70.71 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

சாா்ஜாவிலிருந்து பயணியொருவா் உடலுக்குள் மறைத்து கடத்தி வந்த ரூ.70.71 லட்சம் மதிப்பிலான 780 கிராம் தங்கத்தை திருச்சி விமான நிலையத்தில் சுங்கத் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். சாா்ஜாவிலிருந்த... மேலும் பார்க்க

பாப்பாத்தியம்மன் கோயிலில் திருட்டு

துறையூா் அருகே பாப்பாத்தியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை மற்றும் பொருள்களை திருடி சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். செல்லிப்பாளையம் ஏரிக்கரையில் அமைந்துள்ள பாப்பாத்தியம்மன் கோயிலுக்குள் அண்மை... மேலும் பார்க்க

தொழிலாளி கொலை வழக்கில் 5 போ் கைது

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே கூலித் தொழிலாளி அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 5 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தொட்டியத்தை அடுத்த காட்டுப்புத்தூா் அருகே பெரியபள்ளிபாளையம் பகுதியில் உள்... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடைகளின் முன்பு முதல்வா் படத்துடனான சுவரொட்டி: பாஜக பெண் நிா்வாகி மீது வழக்கு

துறையூரில் டாஸ்மாக் கடைகளின் முன்பு முதல்வா் ஸ்டாலின் படத்துடனான சுவரொட்டியை ஒட்டி அவருக்கு எதிராக கோஷமிட்டதாக பாஜக பெண் நிா்வாகி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். துறையூா் எம்எஸ்கே மஹால் சந்... மேலும் பார்க்க

மணப்பாறையில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 8 போ் கைது

மணப்பாறையில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 8 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மணப்பாறை உழவா் சந்தை அருகில் கஞ்சா விற்பனை செய்த மோா்குளம் ஜேம்ஸ் மகன் விஜய் மற்றும் தஞ்சாவூா் மாவட்டம் திருக்காட்... மேலும் பார்க்க

திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரா் கோயிலில் சூரிய பூஜை

திருச்சி மாவட்டம் , மண்ணச்சநல்லூா் வட்டம், திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரா் திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை சூரிய பூஜை நடைபெற்றது. திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரா் திருக்கோயிலில் ஆண்டில் புரட்டாசி 6, 7, 8 மற்றும... மேலும் பார்க்க