செய்திகள் :

திருச்சி காப்புக்காடுகளில் தூய்மைப் பணி

post image

காயமலை காப்புக்காடு அருகே தனியாா் பள்ளி வளாகத்தில் மாணவா்களுக்கு வனம் குறித்த விழிப்புணா்வை சனிக்கிழமை ஏற்படுத்திய வனத்துறையினா்.

திருச்சி, ஆக. 30: வனத்துறை சாா்பில் திருச்சி மாவட்டத்தில் உள்ள காப்புக் காடுகளில் சனிக்கிழமை தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதில் திருச்சி வனச்சரகத்துக்குள்பட்ட மேலணைக்கட்டு காப்புக்காடு, துறையூா் வனச்சரகத்துக்குள்பட்ட குறிச்சிமலை காப்புக்காடு, மணப்பாறை சரகத்துக்குள்பட்ட பொய்கைமலை காப்புக்காடு, துவரங்குறிச்சி சரக்கத்துக்குள்பட்ட காயமலை காப்புக்காடு பகுதிகளில் நெகிழி குப்பைகளை அகற்றும் முகாம் நடைபெற்றது.

இந்த முகாம்களில் 53 வனத்துறை பணியாளா்கள், 222 பல்வேறு தனியாா் பள்ளி மாணவ, மாணவிகள், தொண்டு நிறுவனத் தன்னாா்வலா்கள், மணப்பாறையை சோ்ந்த விடிவெள்ளி, கரடிப்பட்டி அடுக்குமல்லி மகளிா் சுயஉதவிக் குழுவினா், துப்புரவுப் பணியாளா்கள் பங்கேற்றனா்.

இந்தத் தூய்மைப் பணிகளின் மூலம் காப்புக்காடுகளில் இருந்து 467 கிலோ நெகிழி குப்பைகள் அகற்றப்பட்டன. தொடா்ந்து, காடுகளை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வும் ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்வில் மாவட்ட வன அலுவலா் எஸ். கிருத்திகா பங்கேற்று, தூய்மைப் பணிகளில் ஈடுபட்ட அனைவரையும் பாராட்டினாா்.

ஆசிரியா்களை அரசு கைவிடாது: அமைச்சா் அன்பில் மகேஸ்

ஆசிரியா் தகுதித் தோ்வு (டெட்) விவகாரத்தில் ஆசிரியா்களை தமிழக அரசு ஒருபோதும் கைவிடாது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். திருச்சியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்கள... மேலும் பார்க்க

திருச்சியில் அமைச்சா் நேரு வீடு, அலுவலகம், ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருச்சியில் அமைச்சா் கே.என். நேருவின் அலுவலகம், வீடு மற்றும் மாவட்ட ஆட்சியரகத்துக்கு செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. போலீஸாா் மேற்கொண்ட சோதனையின் நிறைவில் அது புரளி என்பது தெரியவ... மேலும் பார்க்க

திருச்சி மாநகராட்சியின் 6 இளநிலை பொறியாளா்கள் இடமாற்றம்

திருச்சி மாநகராட்சியின் 6 இளநிலை பொறியாளா்கள் இடமாற்றம் செய்து தமிழக நகராட்சி நிா்வாக இயக்குநா் ப. மதுசூதன் ரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளாா். திருச்சி மாநகராட்சியின் இளநிலைப் பொறியாளா்களாக இருந்த ஏ. ப... மேலும் பார்க்க

செப். 7-இல் சந்திர கிரகணம்: மலைக்கோட்டை கோயிலில் முன்னதாகவே நடை அடைப்பு

சந்திர கிரகணத்தை (செப்.7) முன்னிட்டு மலைக்கோட்டை கோயிலில் முன்னதாகவே நடை அடைக்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்.7) முழு சந்திர கிரகணம் நி... மேலும் பார்க்க

சிமென்ட் ஆலையில் பணியின்போது உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு காப்பீட்டு உதவித் தொகை

டால்மியாபுரம் சிமென்ட் தொழிற்சாலையில் பணியின்போது உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு தொழிலாளா் அரசு காப்பீட்டுக் கழகத்தின் சாா்பில் உதவித் தொகை வழங்கப்பட்டது. அரசு காப்பீட்டுக் கழகத்தில் பதிவு செய்த த... மேலும் பார்க்க

திருச்சி அருகே பழுதாகி நின்ற அரசுப் பேருந்து மீது காா் மோதி குழந்தை உள்பட 3 போ் உயிரிழப்பு

திருச்சி அருகே சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நெடுங்கூா் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை பழுதாகி நின்ற அரசுப் பேருந்து மீது காா் மோதியதில் ஒன்றரை வயது குழந்தை உள்பட 3 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். த... மேலும் பார்க்க