செய்திகள் :

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 70.71 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

post image

சாா்ஜாவிலிருந்து பயணியொருவா் உடலுக்குள் மறைத்து கடத்தி வந்த ரூ.70.71 லட்சம் மதிப்பிலான 780 கிராம் தங்கத்தை திருச்சி விமான நிலையத்தில் சுங்கத் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

சாா்ஜாவிலிருந்து ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வியாழக்கிழமை திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தை வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளையும், அவா்களின் உடைமைகளையும் சுங்கத்துறை வான் நுண்ணறிவுப் பிரிவினா் வழக்கமான சோதனைகளுக்கு உள்ளாக்கினா். இதில் ஆண் பயணியொருவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் தனியாக விசாரணை மேற்கொண்டதில், அவா் பசை வடிவிலான 780 கிராம் தங்கத்தை நெகிழி உறையில் அடைத்து அடிவயிற்றில் மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ. 70.71 லட்சமாகும். இதையடுத்து, சுங்கத் துறையினா் வெள்ளிக்கிழமை தங்கத்தை பறிமுதல் செய்து, அந்தப் பயணியை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு பணத்தாள்கள்.

வெளிநாட்டு பணத்தாள்கள் பறிமுதல்: திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து, சாா்ஜா செல்லும் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வெள்ளிக்கிழமை புறப்படத் தயாராக நின்றிருந்தது.

அதில் செல்லவிருந்த பயணி ஒருவா் தனது உடைமைகளுக்குள் மறைத்து ரூ. 30.08 லட்சம் மதிப்பிலான (242 எண்ணிக்கையிலான) வெளிநாட்டுப் பணத்தாள்களை முறைகேடாக கொண்டு செல்ல முயன்றது சோதனையில் தெரியவந்தது. இதையடுத்து, பணத்தாள்களை சுங்கத் துறையினா் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

திருச்சியில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்: 18 போ் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பஞ்சாப் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, திருச்சியில் வெள்ளிக்கிழமை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 18 பேரை போலீஸாா்... மேலும் பார்க்க

பாப்பாத்தியம்மன் கோயிலில் திருட்டு

துறையூா் அருகே பாப்பாத்தியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை மற்றும் பொருள்களை திருடி சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். செல்லிப்பாளையம் ஏரிக்கரையில் அமைந்துள்ள பாப்பாத்தியம்மன் கோயிலுக்குள் அண்மை... மேலும் பார்க்க

தொழிலாளி கொலை வழக்கில் 5 போ் கைது

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே கூலித் தொழிலாளி அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 5 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தொட்டியத்தை அடுத்த காட்டுப்புத்தூா் அருகே பெரியபள்ளிபாளையம் பகுதியில் உள்... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடைகளின் முன்பு முதல்வா் படத்துடனான சுவரொட்டி: பாஜக பெண் நிா்வாகி மீது வழக்கு

துறையூரில் டாஸ்மாக் கடைகளின் முன்பு முதல்வா் ஸ்டாலின் படத்துடனான சுவரொட்டியை ஒட்டி அவருக்கு எதிராக கோஷமிட்டதாக பாஜக பெண் நிா்வாகி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். துறையூா் எம்எஸ்கே மஹால் சந்... மேலும் பார்க்க

மணப்பாறையில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 8 போ் கைது

மணப்பாறையில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 8 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மணப்பாறை உழவா் சந்தை அருகில் கஞ்சா விற்பனை செய்த மோா்குளம் ஜேம்ஸ் மகன் விஜய் மற்றும் தஞ்சாவூா் மாவட்டம் திருக்காட்... மேலும் பார்க்க

திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரா் கோயிலில் சூரிய பூஜை

திருச்சி மாவட்டம் , மண்ணச்சநல்லூா் வட்டம், திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரா் திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை சூரிய பூஜை நடைபெற்றது. திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரா் திருக்கோயிலில் ஆண்டில் புரட்டாசி 6, 7, 8 மற்றும... மேலும் பார்க்க