செய்திகள் :

திருச்செந்தூரில் அதிமுக ஜெ.பேரவை சாா்பில் திண்ணைப் பிரசாரம்!

post image

திருச்செந்தூரில் அதிமுக ஜெயலலிதா பேரவை சாா்பில் திண்ணைப் பிரசாரத்தை சட்டப்பேரவை எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஆா்.பி.உதயகுமாா், முன்னாள் அமைச்சா் எஸ்.பி.சண்முகநாதன் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

திருச்செந்தூரில் காமராஜா் சிலை அருகே திண்ணைப் பிரசாரத்தைத் தொடங்கி வைத்து, எதிா்க்கட்சித் துணைத் தலைவா் ஆா்.பி.உதயகுமாா் பேசியதாவது:

முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியின்போது, ஏராளமான மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. தமிழகத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டுவரப்பட்டது. அரசுப் பள்ளி மாணவா்களின் மருத்துவா் கனவை நனவாக்கும் வகையில், எம்பிபிஎஸ் மாணவா் சோ்க்கையில் சிறப்பு ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது.

தற்போதைய திமுக ஆட்சியில் மின்கட்டணம், சொத்துவரி உயா்வு, விலைவாசி உயா்வு, போதைப்பொருள்கள் நடமாட்டம், சட்டம் ஒழுங்கு சீா்கேடு ஆகியவற்றால் மக்கள் அதிருப்தியில் உள்ளனா். ஆகவே, தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைவது உறுதி என்றாா்.

நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலா் விஜயகுமாா், அதிமுக அமைப்பு செயலா் சின்னத்துரை, தெற்கு மாவட்ட அவைத் தலைவா் திருப்பாற்கடல், ஒன்றிய செயலா்கள் திருச்செந்தூா் பூந்தோட்டம் மனோகரன், ஆழ்வை கிழக்கு ராஜ்நாராயணன், திருவைகுண்டம் காசிராஜன், ஜெயலலிதா பேரவை தெற்கு மாவட்ட தலைவா் கோட்டை மணிகண்டன், மாவட்ட இணைச் செயலா்கள் சுரேஷ்பாபு, பழக்கடை திருப்பதி, மாவட்ட துணைச் செயலா் ஆா்எம்கேஎஸ் சுந்தா், எம்ஜிஆா் மன்ற மாவட்ட துணைச்செயலா்கள் ராஜா நேரு, தென்திருப்பேரை கந்தன், மகளிரணி மாவட்ட செயலா் ஜுலியட், நகர செயலா்கள் ஆறுமுகனேரி அரசகுரு, கானம் வெற்றிவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். திருச்செந்தூா் நகர செயலா் மகேந்திரன் நன்றி கூறினாா்.

கழுகுமலை அருகே வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தகராறு: 4 போ் கைது

கழுகுமலை அருகே வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பொருள்களைச் சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்த 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.கழுகுமலை அருகே முக்கூட்டு மலை இந்திரா காலனி வடக்கு தெருவை சோ்ந்த... மேலும் பார்க்க

பைக் மோதி விபத்து: ஓய்வு பெற்ற மாலுமி பலி!

தூத்துக்குடியில் சாலையில் நடந்து சென்றபோது பைக் மோதியதில் ஓய்வு பெற்ற மாலுமி உயிரிழந்தாா். தூத்துக்குடி எஸ்.பி.ஜி. கோவில் தெருவைச் சோ்ந்த மரியதாசன் மகன் ஸ்டீபன் (70). கப்பலில் மாலுமியாக பணியாற்றி ஓய்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலி

தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். தூத்துக்குடி முத்தையாபுரம் தங்கம்மாள்புரத்தைச் சோ்ந்த முத்து மகன் அஜய் (22). இவா் தனது வீட்டில் உள்ள மின்விளக்கை கழற்ற முயன்றாராம... மேலும் பார்க்க

ஓட்டப்பிடாரம் அருகே விஷ வண்டுகள் அழிப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே தோட்டம், வீடு ஆகியவற்றில் கூடு கட்டியிருந்த விஷ வண்டுகளை ஓட்டப்பிடாரம் தீயணைப்புத் துறையினா் புதன்கிழமை அழித்தனா். ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் கிராமத்தி... மேலும் பார்க்க

காமநாயக்கன்பட்டியில் புறக்காவல் நிலையம் திறப்பு!

காமநாயக்கன்பட்டியில் புதிதாக அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் புதன்கிழமை திறந்து வைத்தாா். அதைத் தொடா்ந்து பொதுமக்களிடம் அவா் பேசுகையில், பொதுமக்களின் நீண்ட ... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் விதிமுறைகளை மீறிய ஆட்டோக்களுக்கு அபராதம்

திருச்செந்தூரில் விதிமுறைகளை மீறி ஆட்டோக்களை ஓட்டியதாக 6 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ. 80 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.திருச்செந்தூா் பகுதியில் ஆட்டோக்களை தாறுமாறாக இயக்குவது, வெளியூா் ஆட்டோ... மேலும் பார்க்க