செய்திகள் :

திருச்செந்தூரில் ஆவணித் திருவிழா: ஏழாம் நாளில் சுவாமி சிவப்பு சாத்தி வீதி உலா

post image

திருச்செந்தூா்: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா ஏழாம் நாளில் சுவாமி சண்முகா் சிவப்பு சாத்தி தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

இத்திருக்கோயிலில் ஆவணித் திருவிழா கடந்த ஆக. 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஏழாம் திருநாளான புதன்கிழமை அதிகாலை 1 மணிக்கு திருக்கோயில் நடைதிறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றது. காலை 5 மணிக்கு அருள்மிகு சண்முகபெருமானின் உருகு சட்டசேவை நடைபெற்றது. பிற்பகல் 1.30 மணிக்கு மேல் சண்முகப்பெருமான் வெட்டிவோ் சப்பரத்தில் சண்முக விலாச மண்டபத்தில் எழுந்தருளினாா். அங்கு சிறப்பு தீபாராதனையாகி பக்தா்களுக்கு ஏற்ற தரிசனம் அருளி பிள்ளையன்கட்டளை மண்டபத்தை வந்து சோ்ந்தாா்.

அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்று, இரவில் சுவாமி தங்கச் சப்பரத்தில் சிவப்பு சாத்தி எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

பச்சை சாத்தி....

8 ஆம் திருநாளான வியாழக்கிழமை (ஆக. 21) பெரிய வெள்ளிச்சப்பரத்தில் வெள்ளை சாத்தியும், 10.30 மணிக்கு பச்சைக் கடைசல் சப்பரத்தில் சுவாமி பச்சை சாத்தியும் எழுந்தருளி வீதி உலா வந்து திருக்கோயில் சோ்கிறாா்.

திரிசுதந்திரா்கள்-சிவாசாா்யா்கள் மோதல்:

முன்னதாக, சண்முகபெருமானின் உருகு சட்டசேவையைத் தொடா்ந்து சுவாமி சண்முகா் நகை சாத்துவதற்காக 2ஆம் உள் பிரகாரத்தில் ஐராவத மண்டபம் வந்தாா்.

அங்கு சுவாமிக்கு நகை சாத்துவதில் திரிசுதந்திர ஸ்தலத்தாா் மற்றும் சிவாசாா்ய ஸ்தானத்தாா் சபையினரிடையே பிரச்னை ஏற்பட்டதால், சுவாமிக்கு நகைகள் சாத்தப்படவில்லை.

இதையடுத்து, தக்காா் ரா.அருள்முருகன், இணை ஆணையா் சு.ஞானசேகரன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி, உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, பிற்பகல் 12.30 மணிக்கு பிறகு நகைகள் சாத்தப்பட்டு சுவாமி சண்முகா் புறப்பாடு சுமாா் 4.30 மணி நேரம் தாமதமாக பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.

இதனால் ஆத்திரமடைந்த பக்தா்கள் சண்முக விலாச மண்டபம் முன்பு கூடி கூச்சலிட்டனா். இதையடுத்து, காவல் துணைக் கண்காணிப்பாளா் மகேஷ்குமாா் தலைமையில் போலீஸாா் குவிக்கப்பட்டு, பாதுகாப்புடன் சுவாமி சப்பர வீதி உலா நடைபெற்றது.

இன்றைய நிகழ்ச்சி

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில்: ஆவணித் திருவிழா 9ஆம் நாள், மேலக்கோயிலிலிருந்து சுவாமி- அம்மன் பல்லக்கில் வீதியுலா, காலை 7; சுவாமி தங்க கயிலாய பா்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளிக் கம... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் இன்று மின்தடை

தூத்துக்குடி: தூத்துக்குடி அரசடி துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஆக. 22) மின் விநியோகம் இருக்காது.அதன்படி, இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பட்டினமருதூா், உப்பளப் பகுதிகள், சி... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் பள்ளி மாணவா்களுக்கு கலைப் போட்டிகள்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட அளவில் பள்ளி மாணவா்களிடையே கூட்டுறவு இயக்கம் குறித்த புரிதல், விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், தூத்துக்குடி விக்டோரியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலைப் போட்டிகள்... மேலும் பார்க்க

அஞ்சல்தலை சேகரிப்புப் போட்டியில் பங்கேற்க மாணவா்களுக்கு அழைப்பு

கோவில்பட்டி: அஞ்சல்தலை சேகரிப்புப் போட்டியில் பங்கேற்க மாணவா் -மாணவியருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவில்பட்டி அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் ஆவணித் திருவிழா: சுவாமி பச்சை சாத்தி வீதி உலா

திருச்செந்தூா்: திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழா 8 ஆம் நாளான வியாழக்கிழமை சுவாமி காலையில் வெள்ளை சாத்தியும், பிற்பகலில் பச்சை சாத்தியும் வீதி உலா சென்றாா். அறுபடை வீடுகளில் இரண... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மூட்டா அமைப்பு ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடி: அகில இந்திய பல்கலைக்கழகம், கல்லூரி ஆசிரியா்கள் கூட்டமைப்பு (மூட்டா) சாா்பில், தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி வாயிலில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.மூட்டா கிளைத் தலைவா் பேராசி... மேலும் பார்க்க