செய்திகள் :

திருச்செந்தூர் கோயிலில் சட்டவிரோதமாக டிக்கெட் விற்றால் குற்றவியல் நடவடிக்கை: நீதிமன்றம்

post image

மதுரை: திருச்செந்தூர் சுப்பிரமணியன் சுவாமி திருக்கோயிலில், சுவாமி தரிசனத்துக்கு சட்டவிரோதமாக டிக்கெட் விற்பனை செய்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோயிலில், சுவாமி தரிசனத்துக்கு கோயிலில் சட்ட விரோதமாக டிக்கெட் விற்பனை நடைபெறுவதாகவும் அதனை தடுக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, பக்தர்கள் கோயிலுக்கு வருவது மன நிம்மதியைத் தேடித்தான். அங்கும் சட்டவிரோத செயல்களை அனுமதிக்க முடியாது என்று நீதிபதி குறிப்பிட்டார்.

மேலும், திருச்செந்தூர் சுவாமி கோயிலில் சட்ட விரோத தரிசன டிக்கெட் விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும். முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களிடம், சட்டவிரோதமாக தரிசன டிக்கெட் விற்பனையைத் தடுக்க, அறநிலையத்துறையும் காவல்துறையும் இணைந்து செயல்பட வேண்டும்.

சட்டவிரோதமாக டிக்கெட் விற்பனை செய்யும் நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள், அமைதியான முறையில் சாமி தரிசனம் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்று என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் மூளை தின்னும் அமீபா பரவல் இல்லை: மா. சுப்பிரமணியன்

தமிழகத்தில் மூளை தின்னும் அமீபா பரவல் இல்லை என சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.கேரளத்தில் இந்தவகை அமீபா பரவலால் பலி எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அவர் இவ்வாறு தெரிவித... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நீர்வரத்து மேலும் அதிகரிப்பு!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று (செப். 1) மாலை நிலவரப்படி வினாடிக்கு 36,985 கனஅடியாக அதிகரித்துள்ளது.அணையின் நீர்மட்டம் 119.48 அடியாக உயர்ந்தது. மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற... மேலும் பார்க்க

மூளையைத் தின்னும் அமீபா: தமிழக சுகாதாரத்துறை முக்கிய உத்தரவு!

கேரளத்தில் மூளையைத் தின்னும் அமீபா பரவல் அதிகரித்துள்ளதையடுத்து தமிழகத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு தமிழக பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. நன்னீர... மேலும் பார்க்க

அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி!

வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில், வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பக... மேலும் பார்க்க

முடிவெட்டும் கடவுளான முடிசூடும் பெருமாள்! டிஎன்பிஎஸ்சி-யின் குளறுபடி!

டிஎன்பிஎஸ்சி தேர்வின் கேள்வித் தாளில், அய்யா வைகுண்ட சுவாமியின் பெயரைத் தவறுதலாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருப்பது சர்ச்சையாகி உள்ளது.டிஎன்பிஎஸ்சி-யின் கவனக் குறைவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக முன்... மேலும் பார்க்க

விஜய்யுடன் கூட்டணியா? - ஓபிஎஸ் பதில்

2026 தேர்தலில் விஜய்யின் தவெகவுடன் கூட்டணியா? என்ற கேள்விக்கு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார். செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், "விஜய் தற்போதுதான் அரசியல் இயக்கத்தை ஆரம... மேலும் பார்க்க