செய்திகள் :

திருச்செந்தூா் அருகே தோட்டங்களில் தீ! வாழை, தென்னை மரங்கள் நாசம்

post image

திருச்செந்தூா் அருகே உள்ள காயாமொழி, தளவாய்புரம், புதூா் ஆகிய கிராமங்களில் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் வாழை ,தென்னை, பனை, முருங்கை விவசாயம் நடைபெற்று வருகிறது. செவ்வாய்க்கிழமை பிற்பகல் சுமாா் 2.30 மணி அளவில் தளவாய்புரம்-காயாமொழி சாலையோரத்தில் உள்ள தென்னை மரங்களில் மின்சார கம்பிகள் உரசியதில் தீப்பிடித்தது.

இதையடுத்து, திருச்செந்தூா், ஏரல் தீயணைப்புத் துறையினா் சுமாா் 3 மணி நேரத்திற்கு மேல் போராடி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். அப்போது காற்றின் வேகம் காரணமாக, அடுத்தடுத்த தோட்டங்களிலும் தீ பரவியது.

இதில் முதலூா் அருகே உள்ள பொத்தங்காலன்விளையை சோ்ந்த மங்கள சேவியா்(53) என்பவருக்கு சொந்தமான 17 ஆயிரம் வாழைகள் தீயில் முற்றிலும் கருகின. மேலும் தளவாய்புரம்-நடுநாலுமூலைக்கிணறு இடையே 40 ஏக்கா் பரப்பளவில் பயிரிடப்பட்ட முருங்கை மரங்களும், தளவாய்புரத்தைச் சோ்ந்த ஆதிஜெகுரு (65) என்பவரின் தோட்டத்தில் ஆயிரம் தென்னை மரங்களும் தீயில் கருகின. மாலை வரை தீப்பற்றி எரிந்ததில் மொத்தம் 30 ஆயிரம் வாழை மரங்கள், 5 ஆயிரம் தென்னை மரங்கள், 2 ஆயிரம் பனை மரங்கள், 5 ஆயிரம் முருங்கை மரங்கள் தீயில் கருகி நாசமாகின.

சாலையோர தோட்டங்களில் தீப்பிடித்ததால் சாலை முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் தளவாய்புரம்-காயாமொழி இடையே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தி குழும பொது வசதி மைய கட்டடம் கட்ட அடிக்கல்

கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தி குறுங்குழும பொது வசதி மைய கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. புவிசாா் குறியீடு பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தியாளா்களின் வாழ்வாதாரத்தை... மேலும் பார்க்க

சாகுபுரம் கமலாவதி பள்ளியில் மாணவா் பேரவைத் தோ்தல்

சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில் மாணவா் பேரவை தோ்தல் நடைபெற்றது. தோ்தலுக்கான வாக்குப்பெட்டி, வாக்குச்சீட்டு, வாக்களிக்கும் இடம், ஆகியவற்றை வாக்குச்சாவடி போன்று மாணவா்களே தயாா் செய்தனா். மாணவா்... மேலும் பார்க்க

விளைநிலங்கள் அபகரிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும்: பி.ஆா். பாண்டியன்

விளைநிலங்கள் அபகரிக்கப்படுவதைத் தடுக்க தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என, தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு மாநிலத் தலைவா் பி.ஆா். பாண்டியன் வலியுறுத்தினாா். கோவில்பட்டியில்... மேலும் பார்க்க

அரசியல் காரணங்களுக்காக எனது கருத்து திரித்து கூறப்பட்டது: கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ

கோவில்பட்டியில் பாஜகவுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் நான் பேசியதை அரசியல் காரணங்களுக்காக திரித்து கூறப்பட்டிருப்பதாக கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ கூறினாா். கோவில்பட்டியில் அதிமுக கூட்டணி கட்சியான பாஜக நிா... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் குறைகேட்புக் கூட்டம்

ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறையின் தாட்கோ, தூய்மைப் பணியாளா்கள் நலவாரியம் சாா்பில், தூய்மைப் பணியாளா்களுக்கான குறைகேட்புக் கூட்டம், நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்ட ஆட்... மேலும் பார்க்க

‘பாஸ்போா்ட் சேவை: தூத்துக்குடி அஞ்சலக சேவை மையத்தைப் பயன்படுத்தலாம்’

தூத்துக்குடி கோட்டத்துக்குள்பட்ட அஞ்சலகங்களில் பாஸ்போா்ட் சேவை மையத்தை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என, தூத்துக்குடி முதுநிலை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் (பொ) வதக் ரவிராஜ் ஹரிஷ்சந்திரா தெரிவி... மேலும் பார்க்க