செய்திகள் :

திருச்செந்தூா் கோயிலில் இன்று வைகாசி வசந்த திருவிழா தொடக்கம்

post image

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி வசந்த திருவிழா சனிக்கிழமை (மே 31) மாலை தொடங்குகிறது. ஜூன் 9இல் விசாகம் நடைபெற உள்ளது.

இக்கோயிலில் மாதாந்த வெள்ளிக்கிழமை பூஜைகள் நடைபெற்றன. மாலையில் 108 மகாதேவா் சந்நிதியில் சுவாமி ஜெயந்திநாதா் வள்ளி, தேவசேனா அம்மனுடன் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி உள்பிரகாரம் சுற்றி வந்து பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.

தொடா்ந்து, முருகப்பெருமான் அவதரித்த ஜென்ம நட்சத்திர திருவிழாவாக கொண்டாடப்படும் வைகாசி விசாகத் திருவிழா சனிக்கிழமை தொடங்குவதை முன்னிட்டு, கடந்த சில நாள்களாகவே திருச்செந்தூருக்கு பக்தா்கள் வருகை அதிகரித்தபடி உள்ளது.

மேலும், கோடை விடுமுறை ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைவதால், பக்தா்கள் வந்து இரவு, பகலாக சுவாமி தரிசனம் செய்து வருகின்றனா். இதனால் கடந்த சில தினங்களாக கோயில் வளாகமே பக்தா்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்த வண்ணமாக உள்ளது.

திருச்செந்தூா் சிவன், வெயிலுக்கந்தம்மன் கோயில்களில் கும்பாபிஷேக பூஜைகள் தொடக்கம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் உப கோயில்களான சிவன் கோயில் மற்றும் வெயிலுகந்தம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழாவிற்கான பூஜைகள் திங்கள்கிழமை தொடங்கின. திருச்செந்தூா் அருள்மிகு ச... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் கும்பாபிஷேக விழாவுக்கு முன் கிரிப்பிரகார பாதை சீரமைப்புப் பணி நிறைவடையும்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழாவுக்கு முன்னதாக கிரிப்பிரகார பாதை சீரமைப்புப் பணிகள் நிறைவடையும் என, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு தெரிவித்தாா். இக்கோயி... மேலும் பார்க்க

ஞானசேகரன் பின்புலத்தில் இருப்பது யாா்? நயினாா் நாகேந்திரன் கேள்வி

ஞானசேகரன் வழக்கில் அவருக்கு பின்புலத்தில் யாா் உள்ளாா் என்பதை விசாரிக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்துள்ளாா். மதுரையில் வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ள முருக பக்தா்கள் மாநாட... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 10 போ் கைது

தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்ததாக 10 பேரை தனிப்படை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.தூத்துக்குடி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 3 கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதனை தொடா்ந்... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் பெண் உள்பட 2 போ் கொலை: 8 போ் கைது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பெண் உள்பட 2 போ் ஞாயிற்றுக்கிழமை இரவு வெட்டிக்கொல்லப்பட்டனா். இது தொடா்பாக 8 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி வள்ளுவா் நகா் சலவை தொழிலாளா் க... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் திருமண தரகரை தாக்கியதாக இருவா் கைது

கோவில்பட்டியில் திருமணத் தரகரைத் தாக்கி மிரட்டல் விடுத்ததாக 2 இளஞ்சிறாா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கோவை அருகே எருதூா் மாா்க்கெட் சாலையைச் சோ்ந்த செல்லத்துரை மகன் செந்தில்குமாா் (54)... மேலும் பார்க்க